Tuesday, November 8, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -8

சிவமயம்
திருசிற்றம்பலம்

நுங்கம்பாக்கம், சென்னை , எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் காட்சிகளை இப்பதிவில் கண்டு களிக்க உள்ளீர்கள். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு மிகவும் முக்கியமான நாள் ஆகும் ஏனென்றால் அன்று சிவபெருமான் தனக்குரிய தர்ம தேவதையாம் வெள் விடை வாகனத்தில்( வெள்ளை ரிஷப வாகனத்தில்) எழுந்தருளி சம்பவீ தீக்ஷை அருளுகின்றார். மற்ற மூர்த்திகளும் தங்களுடைய வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறனர். எனவே அன்ரைய தினம் அலங்காரம் மிகவும் சிறப்பாக செய்யப்படுகின்றது அந்த் அழகை கண்டு அருள் பெறுங்கள்.


வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர்

இத்திருக்கோவிலில் ஐந்தாம் திருநாள் காலையிலும் ரிஷப வாகனம்தான் ஆமாம் சிறப்பாக வெள்ளி ரிஷப வாகனம். அக்காட்சிகளை முதலில் காண்கின்றீர்கள்.



சந்திரசேகரர் பின்னழகு


இத்திருக்கோவிலில் சுக்கிரவார அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உள்புறப்பாடு செய்யும் பொருட்டு வெள்ளித் திருத்தேர் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரும்பும் அன்பர்கள் இத்திருப்பணியில் கலந்து கொள்ளலாம்.

இத்திருக்கொயில் சார்பாக ஒரு திருமண மண்டபம் உள்ளது . விரும்பும் அன்பர்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இனி தாங்கள் காண இருப்பது ஐந்தாம் திருநாளின் இரவு அலங்கார காட்சிகள்.

விக்னங்களை நீக்கும் விநாயகர்
சிறப்பு அலங்காரம்







சிறப்பு அலங்காரத்தில் அகத்தீஸ்வரர்



செங்கோல் தாங்கி ஜகன்னாதனாக காட்சி தரும் அருட்கோலம்




சோமாஸ்கந்தர் முழு அலங்காரம்


அன்னை அகிலாண்டீஸ்வரி சிறப்பு அலங்காரம்



அழகன் முருகன் சிறப்பு அலங்காரம்


சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரம்

அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

No comments: