Thursday, December 31, 2020

அத்யயனோற்சவம் - 17


  இராப்பத்து -  ஆறாம் நாள்

 இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    16    18    19   20   21   22    



நம்பெருமாள் கிருஷ்ணர் கொண்டை, இரத்தின காது காப்பு, வைர அபய ஹஸ்தம்,  மஹாலக்ஷ்மி பதக்கம்,  காசு மாலை மற்றும் திருஆபரணங்களுடன் சேவை சாதிக்கும் அழகு.



திருவடி சேவை


பின்னழகு 








திருவாய்மொழித் திருநாளின் ஆறாம் இரவு பூவின் மேல் மாது வாழ் மார்பினான் மாதவன் மணி வண்ணன், கண்ணன் திருமுன், உண்ணுஞ் சோர்று பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன் என்று மாலும் வண் குருகூர் சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் ஆறாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது பற்றப்பட வேண்டும் (சரண்யத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

அகலகில்லே னிறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னையாள்வானே!
நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ மர்ந்து புகுந்தேனே.

என்று திருவேங்கடத்தானை சரண் அடைந்த நம்மாழ்வாருக்கு பெருமாள் திருவிண்ணகரத்தில்

என்னப்பனெனக் காயிருளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய் சேவை சாதித்ததை பாடுகின்றார் நம்மாழ்வார் இப்பத்தில்.


ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலம்

நம்மாழ்வாரை அவயவி என்று உடலாகவும், மற்ற ஆழ்வார்களை அவயங்கள் என்று கூறுகளாகவும் கருவது வைணவ மரபு. இந்த உருவத்தில் பூதத்தாழ்வார் தலையாகவும், பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் கண்களாகவும், பெரியாழ்வார் முகமாகவும், திருமழிசையாழ்வார் கழுத்தாகவும், குலசேகரப் பெருமாள் மற்றும் திருப்பாணாழ்வார் கைகளாகவும், தொண்டரடிப்பொடியாழ்வார் மார்பாகவும், திருமங்கையாழ்வார் கொழ்ப்பூழாகவும், மதுரகவியாழ்வார் பாதம் என்பதும் ஐதீகம்.

நம்மாழ்வார், திருவடி மேலுரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்தொன்றுமினே என்று அவர் கூறியபடி எம்பெருமான் பாதங்களில் சரண் அடைவோமாக.

Tuesday, December 29, 2020

அத்யயனோற்சவம் - 16

                                         இராப்பத்து - ஐந்தாம் நாள்

                                  இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    17    18    19   20   21   22    

 



திருவாய்மொழித்திருநாள் ஐந்தாம் திருநாளன்று நம்பெருமாள் வைரமுடி, வைர அபயஹஸ்தம் மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சேவை சாதிக்கும் அழகு.






திருவாய்மொழித் திருநாளின் ஐந்தாம் இரவு மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடங்கீண்ட பெருமாள் திருமுன் எங்கும் எதிலும் கண்ணன் என்று மாலும் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் " ஐந்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த பத்தில் எம்பெருமானது அருளுடைமை                        (காருணித்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.


நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்

எங்ஙனே சொல்லுகேன்? யான் பெற்ற ஏழையை

சங்கென்னும் சக்கரமென்னும் துழாயென்னும்

இங்ஙனே சொல்லும் இராப்பகலென் செய்கேன்



என்று பராங்குச நாயகியாய் உருகும் நம்மாழ்வார்


                                               ஸ்ரீநிவாசர் குருவாயூரப்பன் கோலம்


போற்றிக் கைகளாற் தொழுது சொல் 

மாலைகள் ஏற்று நோற்பவர்களுக்கு எந்த

குறைவுமில்லை எழு பிறப்பும்  - என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.


சடகோபரின் சிறப்பைக் காண விழைந்த திருமாலடியார்களான நித்திய சூரிகள் முதலியோரைக் கண்டு

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்

நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை

கலியுங் கெடுங் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்

மலியப் புகுந்திசை பாடி ஆடியுழி தரக் கண்டோம். -  என்று வாழ்த்தினார். பின்பு வைணவம் தழைக்க இராமானுஜர் தோன்றவிருப்பதை பொசிந்து காட்டுவதலென்கிற முறையில் அறிவுறுத்தியதாகவும் இவ்வாழ்த்தை பெரியோர் கொள்வர்.


கவியரசரான கம்பர் தமது இராம காதையை திருவரங்கத்தில் நம் பெருமாள் முன்பு அரங்கேற்றப் புக, " நம் சடகோபனைப் பாடினையோ?" என்று பெயர் பெற்று இப்பெயரையே புகழ் பெற்ற பெயராக கொண்டுள்ளார்


உறங்குவான் போலும் யோகு செய்த பெருமானை


ஆராவமுதே!


ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்


மாறொன்றிலேன் எனதாவியும் உனதே..... என்று சிரீவரமங்கல நாயக தெய்வ நாயகரிடம் பூரண சரணாகதி அடைந்த நம்மாழ்வார்.

Monday, December 28, 2020

அத்யயனோற்சவம் - 15

இராப்பத்து - நான்காம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    16    17    18    19   20   21   22     

             



திருவடி சேவை 


               பின்னழகு 

இராப்பத்தின் நான்காம் நாள் நம்பெருமாள் வெண் பட்டு, முத்து ஒட்டியாணம், இரத்தின அபய ஹஸ்தம், நீல பதக்கம் அணிந்து  திருமாமணி மண்டபத்தில்  சேவை சாதிக்கின்றார்.

 



 திருவாய்மொழித் திருநாளின் நான்காம் இரவு பெருமாள் திருமுன் "கேடில் விழுப்புகழ் கேசவனைப் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள்" நான்காம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த நான்காம் பத்தில் எம்பெருமானது செய்வித்தல் (நியந்த்ருத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.



பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே

தாள் பரப்பி மண் தாவிய ஈசனே

எந்நாள் யானுன்னை வந்து கூடுவனோ?


நின் மலர்த் தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ? என்று சொர்க்க வாசலின் முன் நின்றிருக்கும் நம்மாழ்வார்


பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் பெற்றோர் இவருக்கு மாறன் பெயரிட்டு அழைத்தனர்.


திருக்குருகூரில் கோயில் கொண்டுள்ள பொலிந்து நின்ற பிரான் மாறனார்க்கு பரிசாக மகிழ மலர் மாலையணிவித்தது குறித்து ஆழ்வாருக்கு ’வகுளாபரணர்’ என்னும் திருநாமம் ஏற்பட்டது.

பிற மதங்களாகிய யானைகளுக்கு சடகோபரின் நூலில் காணும் கொள்கைகள் மாவெட்டி போன்றுள்ளதால் ஆழ்வார் ’பராங்குசர்’ என்றழைக்கப்பட்டார்.

                              ஸ்ரீநிவாசர் வெண்ணெய்க் கண்ணன் சாத்துபடி




ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமினுன்னித்தே. என்று நம்முடைய எல்லா வினைகளுக்கும் மருந்து அந்த கண்ணன் நாமமே என்று அறுதியிட்டு கூறுகின்றார் நம்மாழ்வார்.


Saturday, December 26, 2020

அத்யயனோற்சவம் - 14

                                  இராப்பத்து - மூன்றாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    15    16    17    18    19   20   21   22     

             


திருவாய்மொழித்திருநாளின் மூன்றாம் நாள் நம்பெருமாள்  சாய் முத்துக்கிரீடம், இரத்தின அபய ஹஸ்தம், இரத்தின காது காப்பு, பவள மாலை மற்றும் விமான பதக்கமணிந்து சேவை சாதிக்கும் கோலம்.



                                              இரவு மூலஸ்தானம் திரும்பும் போது 


6. ஒரு ஜீவாத்மா பரமபதத்தை அடையும் பொழுது பலவிதமான இசைக்கருவிகள் முழக்கி வரவேற்பார்கள்.

நம்பெருமாள் பரமபத வாசலை கடக்கும் பொழுது பலவிதமான வாத்தியங்கள் வாசிக்கப்படுவதை நாம் இன்றும் அனுபவிக்கலாம். எக்காளம், சங்கு, திருச்சின்னம் போன்ற பலவிதமான வாத்தியங்கள் இசைப்பது இந்த பாசுரத்திற்காகவே.

வேளியுள் மடுத்தலும் விறைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்.

திரு அத்யயன உத்சவத்தில் பல வகையான இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. உடல், வீரவண்டி, சேமங்கலம், வெள்ளி எக்காளம், டோலக், மிருதங்கம், நாதஸ்வரம், சங்கு,தக்கை, சுத்தமத்தளம், தவளை மத்தளம் உள்ளிட்ட 17 இசைக்கருவிகள் வாசிக்கப்படும்.

பெருமாள் புறப்பாடு நடப்பதற்கு முன் இசைக்கப்படும் வாத்தியங்கள் – வீரவண்டி,  சேமங்கலம். பெருமாள் மேற்கு படி வந்தவுடன் இசைக்கப்படும் வாத்தியம் – எக்காளம்,  திருசின்னம். பெருமாள் 2ஆம் பிரகாரத்தில் வரும்போது இசைக்கப்படும் 8வாத்தியம் – மத்தளம்,  தக்கை. 

7வைகுந்தத்தை அடையும்   ஜீவாத்மாவை அழகிய கண்களை உடைய மகளிர் வாழ்த்தினர்.
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று 
 வாளொண்கண்  மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே 

இங்கே மடந்தையர் என்பது  பெண்களை குறிப்பிடவில்லை. அனைத்து ஜீவாத்மாக்களும் பரமாத்மாவுக்கு பத்னி என்ற பாவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து வெளியே வரும்பொழுது தேவதாசிகள் ஆரத்தி எடுத்து வரவேற்கும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கம் தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. 

8. அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவை வழியில் வரும் லோகத்தில் இருப்பவர்கள்,  தங்கள் இடத்தில் தங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

 எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் 

கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர்

அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவை வழியில் வரும் லோகத்தில் இருப்பவர்கள், திருமால் அடியாரை தங்கள் இடத்தில் தங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

பெருமாள் செல்லும் பொழுது வழிநடை உபயங்கள் கண்ட அருள்வார். இங்கே சில நிமிடங்கள் மட்டுமே இருந்து பானகம் மற்றும் பருப்பு அமுது செய்து பரமபதம் செல்லும் ஜீவாத்மாவை போல் உடனே கிளம்பி சென்று விடுவார். இந்த உபயங்கள் ஏற்பட்டது இந்த பாசுரத்திற்காக.

9.வைகுண்டத்திற்கு செல்லும் ஜீவாத்மாவிற்கு  இதுதான் வைகுண்டத்திற்கான  வழி என்று எதிரே வந்து முனிவர்கள் வழிகாட்டுகின்றனர்.

ஜீவாத்மா: நம்பெருமாள்,  முனிவர்: நம்மாழ்வார்

நம்பெருமாள் மணல்வெயில் எழுந்தருள்வதற்கு முன்னர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர் ஆகியோர் பெருமாளை வரவேற்க காத்திருப்பார்கள். பெருமாள் பூச்சாற்று மண்டபத்தை கடந்தவுடன் நம்மாழ்வார் மட்டும் முன்னே சென்று நடையில் வரும் பெருமாளை எதிர்கொண்டு அழைத்து வருவார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான காரணம் பரமபதம் செல்லும் ஜீவாத்மாவான நம்பெருமாளுக்கு, இதுதான் வைகுந்திற்கு வழி என்று காட்டுவதற்காக – “வழியிது வைகுந்தற் கென்று வந்தெதிரே”.

எழுமினென்று இருமருங்கிசைத்தனர் முனிவர்கள்

வழியிது வைகுந்தற்கு  என்று வந்தெதிரே 

10.தேவர்கள் தோத்திரம் சொல்லிக்கொண்டு ஜீவாத்மாவை வரவேற்கின்றனர்.

நம்பெருமாள் மணல்வெயில் எழுந்தருள்வதற்கு முன்னர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர் ஆகியோர் முன்னர் பராசர பட்டர் அருளிய ஶ்ரீரங்கராஜஸ்தவம் சேவிப்பார்கள்.

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் .
 
11.மாமணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடிருத்தல்.

ஸ்ரீவைகுந்தத்தில் உள்ளது போலவே திருவரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவில் இருப்பது திருமாமணி மண்டபம். அந்த திருமாமணி மண்டபத்தில் அமர்ந்து, ஆழ்வார்  மற்றும் ஆச்சார்யர்கள் நடுவில் அரையர்களின் திருவாய்மொழி விண்ணப்பத்தை தினமும் கேட்டு அனுபவிப்பார். 
வந்தவரெதிர் கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை.

********



திருவாய்மொழித் திருநாளின் மூன்றாம் இரவு பெருமாள் திருமுன் நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் மூன்றாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த மூன்றாம் பத்தில் எம்பெருமானது பரவியிருத்தல் (வ்யாபகம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

புயல் கருநிறத்தன், அடலாழியம்மான், உருளும் சகடம் உதைத்த பெருமானார், கோலக் கூத்தன், தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்த பிரான் என்றெல்லாம் பெருமாளை பாடிப்ப்ரவிய நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே பெருமாள் பெரிய பிராட்டியுடன், வினதை சிறுவன் மேலாப்பின் மேலே இருந்து சேவை சாதித்தார். மேலும் பல திவ்ய தேசங்களில் அர்ச்சையாக கோயில் கொண்டவாரும் காட்சி தந்தருளினார். பெருமாளின் அருள் மழையில் நனைந்த ஆழ்வார் பெரு மகிழ்ச்சியின் போக்கு வீடாகவே நான்கு வேதங்களுக்கொப்பாக நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார்.

குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலமளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம்விணையோயுமே

என்று பெருமாளின் பெருமையைப் பாடிப்பரவிய ஒப்புயர்வற்ற பராங்குசர் எம்பருமானது திருவடிகளாகவே கருதப்படுவதால் திருக்கோயில்களில் திருமாலின் பாதுகைகள் ’ஸ்ரீ சடகோபம்’ என்றோ ’ஸ்ரீ சடாரி’ என்று வடமொழியிலோ வழங்கப்படுகின்றது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின் ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் சடகோபம் சார்த்தப்படுகின்றது. துளசி பிரசாதம் வழங்கப்படுகின்றது.

குலந்தாங்கு சாதிகள் நாலிலுங் கீழிழிந்து எத்தனை

நலந் தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்

வலந் தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று உன்

கலந் தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே! 

என்று எம்பெருமாளின் அடியார்களின் பெருமையை இந்த பத்தின் ஒரு பாசுரத்தால் விளக்குகிறார் வகுளாபரணர்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்யவேண்டும்நாம்
தெழிகுரலருவித் திருவேங்கடத்து
எழில்கொள்சோதி எந்தைதந்தைதந்தைக்கே - என்று  திருவேங்கடமுடையான் திருவடிகளில்  காலமெல்லாம் வழுவிலாவடிமை செய்ய பாரிக்கின்றார் ஆழ்வார்.  அதையே நாமும் அவரிடம் வேண்டுமாக. 

அத்யயனோற்சவம் - 13

                                இராப்பத்து - இரண்டாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    14    15    16    17    18    19   20   21   22     

             



திருவடி சேவை



பின்னழகு



திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள்



இரவு சல்லா துணி அணிந்து நம்பெருமாள்
 மூலஸ்தானம்  திரும்பும் கோலம்




ஸ்ரீநிவாசர் திருமலையப்பனாக சேவை



பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாவிற்கும் அதன்பின்னர் சாஸ்திர, சம்பிரதாய காரணங்கள் பொதிந்துள்ளன.

ஒரு ஜீவாத்மா பரமபதம் அடைவதற்கு அர்ச்சிராதி மார்க்கமாக செல்வார். பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதனின் நித்ய கைங்கரியத்தில் ஈடுபடுவார். அர்ச்சிராதி மார்கம் எப்படி இருக்கும்?

  1. மரணமானால் தானே வைகுந்தம் அடையமுடியும்!
  2. வைகுண்டம் அடைந்தவர் யாரும் திரும்பி வருவது இல்லையே!
  3. இவ்வழியில்தான் வைகுண்டம் சென்றேன் என்று நமக்கு சொல்ல யாரால் முடியும், என நமக்குத் தோன்றலாம்!

இக்கேள்விகள் அனைத்திற்கும் ஒரே விடை, ஸ்ரீமன் நாராயணன் பூவுலகிலேயே நம்மாழ்வாருக்கு இதனை காட்ட,   ஆழ்வார் அதை தமது திருவாய்மொழியில்  நமக்கு கூறி அருளியுள்ளார்.

பெருமாள் நம்மாழ்வாரிடம் ஆழ்வீர் நீர் பரமபதம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது (திருவாய்மொழி 10-8 பத்து முடிந்தவுடன்). உம்மை இவ்வழியில் அழைத்துச்  சென்று என் நித்ய கைங்கர்யதில் ஈடுபடுத்துவேன் என்று நம்மாழ்வாருக்கு காட்டியருளினார்.

அதை கண்ட ஆழ்வார் தன்னைப் போல் சரணாகதி செய்யும் அனைவருக்கும் வைகுந்தம் கிடைக்கும் என்பது நாம் அறிவதற்காக சூழ்விசும் பணிமுகில் என்ற பதிகத்தைப் (திருவாய்மொழி 10-9) பாடியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் யார் யார் வந்தனர், எப்படி அடியார்களை பலர் புகழ்கின்றனர், பெருமான் வைகுந்த வாசலில் வந்து எப்படி தன்னை கைபிடித்து அழைத்து சென்றார் என்ற அனுபவங்களை பாசுரங்களாக பாடியுள்ளார்.

ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெருமையை நாம் அறிவதற்காக, திவ்ய தேசங்களில் முதன்மையானதான  திருவரங்கத்தில் ஸ்வாமி இராமானுசர் இராப்பத்து உற்சவத்தில் சில ஜதீகங்களை சேர்த்தார்.

சூழ்விசும் பணிமுகில் பதிககித்தில் சொல்லப்பட்ட காட்சிகளை உடையவர் (இராமானுசர்) உலகோர் அறிய, ஒரு நாடகம் போல் அமைத்துள்ளார். அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவாக இங்கே நமக்கு நடித்து காட்டுபவர் "நம்பெருமாள்".

இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் தினமும் மதியம் புறப்பாடு கண்டருளி பரமபத வாசலை கடந்து திருமாமணி மண்டபத்தை (ஆயிரம்கால் மண்டபம்) அடைவார்.

1. ஸ்தூல சரீரத்துடன் அர்ச்சிராதி மார்க்கமாக வைகுந்தம் செல்லும் ஜீவாத்மா

சூழ்விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலை திரை கையெடுத்தாடின
ஏழ்பொழிலும் வளமேந்திய என்னப்பன் 
வாழ்புகழ்நாரணன் தமரைக் கண்டுகந்தே
.- என்று நம்மாழ்வார் பாடியபடி

நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து  புறப்படும் பொழுது எப்போதும் போல் இல்லாமல் ஒரு போர்வை சார்த்திக்கொண்டு ஆபரணங்கள் வெளியே தெரியாமல் சேவை சாதிப்பார். அதாவது ஒரு ஜீவாத்மா ஸ்தூல சரீரத்துடன் அர்ச்சிராதி மார்கமாக வைகுண்டம் அடைய செல்வதாக ஐதீகம்.  

2.பரமபதம் செல்லும் ஜீவாத்மாவை தேவர்களும் முனிவர்களும் வணங்குகின்றனர். 

திருவரங்கம் கோயில் ஸ்தலத்தார்கள் அனைவரும் சந்தன மண்டபத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வெளியே வந்தவுடன் கீழே விழுந்து வணங்குவர். 

தொழுதனர் உலகர்கள் தூபநல்மலர்மழை
பொழிவனர் பூமியன்றளந்தவன் தமர்முன்னே
எழுமினென்று இருமருங்கிசைத்தனர் முனிவர்கள் 
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே.

3.வைகுந்தம் செல்லும் ஜீவாத்மாவை - வழிநெடுகிலும் உலகத்தில் இருப்பவர்கள் தோரணங்கள் கட்டி தொழுததாக பாசுரம்

நாரணன் தமரைக்கண்டுகந்து நல்நீர்முகில்
பூரணப்பொற்குடம் பூரித்தது உயர்விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுரனருலகே. 
5நvaiம்பெருமாள் புறப்பாட்டில் தங்கக் குடை, சாமரம், மற்றும் ஆலவட்டம் ஆகியவை  பெருமாளுக்கு சாதிப்பார்கள். இக்கைங்கரியங்கள் ஜீவாத்மாவை வரவேற்கும் நிகழ்வாக ஏற்படுத்தபட்டுள்ளன.

4. அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவை நான்கு வேதங்களும் நன்கு அறிந்தவர்கள் வேதத்தை ஓதி வரவேற்பதாக பாசுரம்.

பரமபதம் அடைவதற்கு விரஜா நதியை கடக்க வேண்டும். திருவரங்கத்திலும் வைகுண்ட வாசலுக்கு முன்னர் விரஜா நதி மண்டபம் உண்டு. இங்கு பெருமாள் வந்தவுடன் வேத விண்ணப்பம் நடைபெறும். வேதவியாசர்/ பராசர பட்டர்   வேதம் ஓதுவர்.  நான்கு வேதங்களில் உள்ள பல சாகைகள் இங்கு ஒதப்படுகிறது.

மாதவன் தமரென்று வாசலில்வானவர்
போதுமின்எமதிடம் புகுதுகவென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர்கள் கெருடர்கள்
வேதநல்வாயவர் வேள்வியுள் மடுத்தே. 

 5. வைகுந்தம் நுழைய ஜீவாத்மா ஸ்தூல சரீரம் விடுத்து சூக்ஷ்ம சரீரம் பெறுதல்.

இவ்விஷயம் இப்பத்தில் நேராக எப்பாசுரத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சாஸ்திரத்திலும், வேதத்திலும் இவ்விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஜீவாத்மா விரஜா நதியை கடந்து வைகுண்டம் அடையும்போது  அதற்கு ஒரு புது சரீரம் கிடைக்கும்.

இதை நடத்தி காட்டவே நம்பெருமாள் பரமபதவாசல் நுழைவதற்கு முன் திரையிட்டு பெருமாள் மேல் மூடியிருக்கும் போர்வை விலக்கப்படும். அனைத்து ஆபரணங்களுடன் பெருமாள் சேவை சாதித்த படி வைகுண்ட வாசல் கடந்து வெளியே வருவார்.  (மேலும்  அடுத்த பதிவில் தொடரும்)

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் நம்மாழ்வாருக்காக பரமபத வாசல் சேவை சாதிக்கின்றார். அடுத்த பத்து நாட்கள் ஆழ்வார் ஒவ்வொரு பத்தாக பாசுரம் சேவித்து பின் பத்தாம் நாள் மோட்சம் அடைவதாக ஐதீகம்.

காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் திருமகவாக வைகாசி திங்கள், விசாக நட்சத்திரம் பௌர்ணமி கூடிய நன்னாளில் ஆழ்வார் திருநகரி இன்று அழைக்கப்படும் திருக்குருகூரில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார். திருக்குறுங்குடி நம்பியே அவதாரம் செய்ததாக ஐதீகம்.

திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வஷேனரது அம்சமும் பொருந்திய ஆவார், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர். அந்த சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

கழிமின் தொண்டீர்காள்! கழித்து
தொழுமின் அவனைத் தொழுதால்
வழிநின்ற வில்விணை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே. என்று சரணாகதி தத்துவத்தை அருளிய காரி மாறப் பிரான் நான் மறைகளுக் கொப்பாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார். தமது சீடர் மதுரகவியாழ்வாருக்கும் உபதேசித்தருளினார்.

திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அந்தாதியாக அமைத்துப் பாடியுள்ளார்.
ஆடி ஆடி அகங்கரைந்து இசை
பாடிப் பாடிகண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று 
வாடி வாளும் இவ்வாணுதலே என்று தன்னையே பராங்குச நாயகியாக பாவித்து பாசுரம் பாடிய நம்மாழ்வாரின் வைகுண்ட ஏகாதசியன்று சேவிக்கப்படும் முதல் பத்தால் எம்பிரானது மேன்மையையும்(பரத்வம்), திருவாய் மொழித் திருநாளின் இரண்டாம் நாளான இன்று சேவிக்கப்படும் இரண்டாம் பத்தால் எம்பெருமானது படைத்தலும்(காரணத்வம்) கூறப்படுகின்றது என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்.

ஏகாதசி விரதம் இருந்தவர்கள் முதல் அதிகாலை சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்து விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் உபவாசம் இருக்கின்றனர். வெறும் துளசி தீர்த்தம் மட்டும் பருகி( முடியாதவ்ர்கள் சிறிது அவல் உட்கொண்டு) , எப்பொழுதும் ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் ஓதி , இரவு முழுவதும் உறங்காதிருந்து பின் துவாதசி காலையில் துளசி தீர்த்தம் பருகி பாரணையுடன் விரதத்தை முடிக்கின்றனர். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷ இராஜாவை துர்வாசர் சாபத்திலிருந்து பெருமாள் தமது சுதர்சன சக்கரத்தை அனுப்பிய கதையும் உண்டு.

முக்கோடி துவாதசியான  இன்று காரைக்காலில் நித்ய கல்யாணப் பெருமாள் கம்பளி அங்கியில் சேவை சாதிக்கின்றார்.  திருப்பதி திருமலையில் இன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. நாச்சியார் கோயிலில் இன்று முக்கோடி துவாதசி தெப்போற்சவம் நடைபெறுகின்றது.

அத்யயனோற்சவம் - 12 (வைகுண்ட ஏகாதசி)

இராப்பத்து - முதல் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    13    14    15    16    17    18    19   20   21   22     

             

  

 

                       

இரத்ன அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை தரித்து நம்பெருமாள் சேவை சாதிக்கும் அழகு.

                                           

பின்னழகு 




உபய நாச்சியார்களுடன் ஸ்ரீநிவாசர் 



மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. அன்று அதிகாலை 4 மணி அளவில் பரம பத வாசல் திறப்பு, அன்று நம் பெருமாள் சிவப்பு நிற ரத்ன அங்கியில் சேவை சாதிக்கின்றார். கஸ்தூரி திலகத்துடன், இரத்னங்கியிலே சிவப்பு, வெள்ளை, பச்சை, முத்து , பவளம் என்று எல்லா நிற மணிகளும் மின்ன, மெல்லிய சல்லாத் துணி இடையினில் உடுத்தி, கிளி மாலையுடன் , கோல விளக்கே , கொடியே, விதானமே என்று ஆண்டாள் பாடியபடி அழகாக எம்பெருமான் தங்க தோளுக்கினியாளில் எழுந்தருளி விடியற்காலையில் அரங்கன் பட்டர் வம்சத்தினரின் வேத விண்ணப்பம் கண்டருளி அரையர்கள் திருவாய்மொழி தொடங்க இரத்தின அங்கியில் சிம்ம கதியில் நமக்கு வைகுண்ட பேற்றை வழங்க ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடனே எழுந்தருளுகின்றார். அலைகடலென பக்தர்களின் பக்தி அலை நடுவே பரமபத வாயிலை அடைந்து  விரஜா நதி மண்டபத்தில் வேத முழக்கம் கேட்டருளி பரமபத வாசல் திறக்க பரமபத நாதனாய் சேவை சாதித்து திருமாமணி மண்டபம் என்னும் ஆயிரங்கால் மண்டபம் சேர்ந்து நாள் முழுதும் சேவை சாதிக்கின்றார். பொது ஜன சேவையும், அரையர் சேவையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணிக்கு குளிருக்காக தலையில் ஒரு குல்லாவை அணிந்து, ஒரு சல்லாத்துணியினால் மேனியை மறைத்துக்கொண்டு  திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை மூலஸ்தானத்தை அடைகின்றார் நம் பெருமாள்.


மூலவர் அரங்கநாதர் முத்தங்கி சேவை தருகின்றார் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முத்தங்கியில் மூலவரை சேவிக்கலாம்.

அனைத்து வைணவ தலங்களிலும் மூலவர் மற்றும் உற்சவர் வைர அங்கி, ரத்ன அங்கி, முத்தங்கி, புஷ்ப அங்கி அல்லது சிறப்பு அலங்காரத்தில் இன்று சேவை சாதிக்கின்றனர். பரமபதவாசல் திறக்கப்படுகிறது அதன் வழியே சென்று பெருமாளை தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமும் இல்லை என்பது முன்னோர் வாக்கு. தீட்டுக்காலத்தில் கூட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பயன் உண்டு. 

ஏகாதசி பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியில்( பக்ஷம்) பதினொன்றாவது நாளாகும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினோரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் ‘நம் வினைகள் எல்லாம் அழிந்துவிடுவது உறுதி என்பர் முன்னோர். 

ஏகாதசி திதியின் உரிய தேவதை தர்ம தேவதை ஆகும். ஆகவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்தால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும். தர்மத்தைக் காப்பாற்ற யுகம் யுகமாக அவதாரம் செய்யும் இறைவனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும் அதிசயமாக சில வருடம் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஒவ்வோரு ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு, விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. எல்லா ஏகாதசிகளுக்கும் சிறந்தது மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியாகும்.  இது வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இது மூன்று கோடி ஏகாதசிகளுக்கு சமம் என்பதால் முக்கோடி ஏகாதசி. இராவணனுடைய கொடுமையிலிருந்து தப்பிக்க பெருமாளிடம் முப்பத்து முக்கோடிதேவர்களும் சரணடைந்ததால், இந்த ஏகாதசி. முக்கோடி ஏகாதசி என்றழைக்கப்படுகின்றது.

திருமால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முரன் என்னும் அரக்கனை அழிக்க சென்றார். பல வருடங்கள் அவனுடன் போரிட்டும் அவனை எளிதாக அழிக்க முடியவில்லை எனவே பெருமாள் பத்ரிகாச்ரமம் சென்று அங்கு ஒரு குகையில் படுத்துக் கொண்டார். திருமாலைத் தேடி வந்த அசுரன் அவர் நித்திரையில் இருப்பதை கண்டு அவரை தாக்கத் தொடங்கினார். அப்போது பெருமாளின் திருமேனியிலிருந்து ஒரு மகத்தான சக்தி ( தேவி ஸ்வரூபம்) தோன்றி அந்த அசுரனை மாய்த்தது.

இதனால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டிய வண்ணம் அவளுக்கு ஏகாதசி என்னும் நாமம் விளங்கும் என்றும். ஏகாதசி அன்று விரதமிருந்து பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்லவனற்றையே அருளுவதாக வரம் கொடுத்தார்.

ஏகாதசி விரதம், இம்மையில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை அளிப்பதோடு மறுமையில் பேரின்பத்தையும் அருளும் என்பது உறுதி.

இந்த மகத்தான விரதத்தை பின்பற்ற சில இன்றியமையாத விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவை தவம், தானம், புலனடக்கம் என்று மூன்று வகைப்படும். புலனடக்கத்தின் அடிப்படையாக இருப்பது உணவுக்கட்டுப்பாடு, எனவேதான் ஏகாதசி நன்னாளில் முழுமையான உண்ணாவிரதத்தை முக்கியமாகக் கொண்டனர்.

ஆகவே அமைதியாக தியானத்தில் அமர்ந்து எப்போதும் இறைவன் திருநாமத்தை ஸ்மரணம் செய்து கொண்டிருக்கலாம். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடைந்து பக்குவபப்டுகின்றது. எனவே இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் தவம் செய்ய தகுதி உடையவர் ஆகின்றார்.

அல்லும் பகலும் அனவரதமும் இறைவனைப் பற்றி நினைத்தல், அவரின் இனிமையான திருநாமங்களை நா இனிக்கக் கூறுதல், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவில்களிலோ அல்லது தங்கள் தங்கள் இல்லங்களிலேயோ ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி அவரிடம் நம் மனம், மொழி, மெய்களை ஈடுபடுத்தவே விரதம் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஏகாதசி விரதம் இருந்த பின், இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை உண்பதற்கு முன் அதை தகுந்த பெரியோர்களுக்கு முதலில் வழங்கி உண்ணச் செய்யும் துவாதசி பாரணையில் தானம் என்ற உயர்ந்த பண்பு விளங்குகின்றது.

இனி ஏகாதசி விரத மகிமையைப் பற்றிக்காண்போமா? திருமாலின் அவதாரமான ஸ்ரீராமனே பங்குனி மாதத்தின் விஜயா என்னும் ஏகாதசி விரதம் இருந்து பின் கடலைக் கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையை வென்றார் என்று புராணம் கூறுகின்றது. இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சீதா தேவியின் அருளைப் பெறலாம்.

ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியாதவாறு திருமாலில் சுதர்சன சக்கரம் காத்தது என்று பாகவத புராணம் கூறுகின்றது.

திருக்குறுங்குடி என்ற தலத்தில் பாணர் குலத்தைச் சார்ந்த நம்பாடுவான் ஏகாதசி அன்று எம்பெருமானைப் பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்க வந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனம் அளித்ததை கைசிக புராணம் கூறுகின்றது.

ருக்மாங்கதன் என்ற மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் கூறுகின்றது.

பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா என்ற விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுப்பயனையும் பெற்றதாக பத்மபுராணம் கூறுகின்றது.

பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதம் கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்நாள்தான்.

வைகுண்ட ஏகாதசி எல்லா விஷ்ணுவாலயங்களிலும் கொண்டாடப்பெற்றாலும், இதன் பெருமை மிகுதியாக விளங்குவது சோழ நாட்டு திருவரங்கத்தில்தான். ஏகாதசியின் முரு றுழுப்பயனையும் அடையும் வாய்ப்பு திருவரங்கத்தில் அமைந்திருந்தாலும் அதே அமைப்பை நம் முன்னோர்கள் நாம் எல்லோரும் உய்ய அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் அமைத்தனர்.

எம்பெருமானுடன் போராடித் தோற்று அவர் அருள் பெற்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை , உலகில் உள்ள எல்லாரும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் எம்பெருமானை நோக்கி வைகுண்ட ஏகாதசியன்று திருவரங்க வடக்கு வாசல் வழியாகத் தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் எத்தனை கொடியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அருள வேண்டும் என்றும் வேண்டினார்கள். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் வழியாக எம்பெருமான் பவனி வரும் பெருநிகழ்ச்சி ஏற்பட்டது.

பல வடிவங்களில் எம்பெருமான் அவதரித்து பலரையும் காத்தது போல, அர்ச்சாவதாரத்தில் தானே முக்தியடையும் ஒருவனாக நடித்து அவ்வாறு அடைபவன் தன் முக்தி பயணத்தில் என்னென்ன மாற்றங்களையும், வரவேற்புகளையும் பேரின்பத்தையும் பெறுவானோ, அவைகளை நிகழ்த்தி காட்டும் முறையில் பெருமாளின் வைகுண்ட ஏகாதசி புறப்பாடும் திருவுலாவும் விளங்குகின்றன.

அத்யயன உற்சவத்தில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை பெருமாள் செவி மடுக்கும் இராப்பத்து இந்த வைகுந்த ஏகாதசியன்று முதல் தொடங்குகின்றது. நம்மாழ்வார் பாசுரங்கள் இரவில் சேவிக்கப்படுவதால் இராப்பத்து என்று அழைக்கப்படுகின்றது. தினமும் ஒரு பத்து அதாவது நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.