Thursday, December 24, 2020

அத்யயனோற்சவம் - 8

                                            பகல் பத்து - ஏழாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             

        

பகல்பத்தின் ஏழாம் நாள் நம்பெருமாள் முத்துக்கிரீடம், புஜ கீர்த்தி, மகர கண்டிகை, இரத்தின அபய ஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அர்த்த  சந்திரன் ஆகிய ஆபரணங்களை அழகு செய்தவாறு சேவை சாதித்து அருளுகின்றார்.

                     


ஸ்ரீநிவாசர் கோவர்த்தன கிரிதாரி கோலம்



திருமொழித் திருநாளின் ஏழாம் நாள் அன்றும் திருமங்கை மன்னனின் மூன்றாம் பத்து மற்றும் நான்காம் பத்து சேவிக்கப்படுகின்றது.


பரகாலர் வட மொழி வேதங்கள் நான்குக்கொப்பாக நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை,சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களையருளித் திருமங்கையாழ்வார் என்று திருநாமம் பெற்றார். இவற்றுள் பெரிய திருமொழிப் பாடல்களியற்றும் போது எம்பெருமான் சேவை சாதிக்கும் திருப்பதிக்ளுக்கு தானே சென்று வணங்கி திருப்பிருதி முதல் திருக்கோட்டியூர் நிறைவாக பாசுரம் பாடியுள்ளார்.

இன்று திருவயிந்திபுரம், திருசித்ரகூடம் சோழ நாட்டுத் திருப்பதிகளான திருக்காழிசீராம விண்ணகரம், திருவாலி, திருநாங்கூர் திருப்பதிகள் பதினொன்று (1. திருமணி மாடக் கோவில்: 2.திருவைகுந்த விண்ணகரம் : 3.திரு அரிமேய விண்ணகரம் 4.திருத் தேவனார் தொகை 5.திருவண் புருடோத்தமம் 6.திருச்செம்பொன்செய்கோவில் 7.திருத்தெற்றியம்பலம் 8.திருமணிக்கூடம் 9.திருக்காவளம்பாடி. 10.திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்): 11. திருப்பார்த்தன் பள்ளி ), மற்றும், திருவிந்தளுர், திருவெள்ளியங்குடி ஆகிய திவ்ய தேசங்களின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. 

இன்று இரண்டாம் அரையர் சேவை: வாமனாவதாரம்

No comments: