Thursday, May 14, 2009

திருக்காரணி தீர்த்தவாரி

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் காரணீஸ்வரப்பெருமான் கோபதி சரஸ் என்று அழைகப்படும் இந்திர தீர்த்தத்தில் தீர்த்தம் அளிக்கின்றார். எல்லா திருவிழாக்களும் தீர்த்த நாளை முக்கியமாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. திருகாரணியில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பெருவிழா நடக்கின்றது. காலை 11 மணியளவில் தீர்த்த வாரி ‘நடைபெறுகின்றது. பஞ்ச மூர்த்திகளும் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளுகின்றனர்.


தீர்த்தம் கொடுக்க வரும் காரணீஸ்வரப் பெருமான்

ருதுக்களில் சிறந்தது வசந்தருது. திதிகளில் சிறந்தது பௌர்ணமி. சித்திரையில் பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரமும் கூடி வரும். சித்திரை சித்திரையில் இறைவனை கண்டு தொழ, ஆண்டு முழுவதும் பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று திருவிளையாடற்ப் புராணம் கூறுகின்றது. பிள்ளை வரம் பெற, பாவங்கள் நீங்க சித்ரா பௌர்ணமி விரதம் சிறந்தது.


சிவ சொர்ணாம்பிகை அம்மன்

அஸ்திர தேவர்


குளக்கரையில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. முளைப்பாலிகை இட்ட மண் மற்றும் கங்கணங்கள் கங்கை சேர்க்கப்படுகின்றன. திருக்குளத்தில் திருமுழுக்கிட்டு குளத்தை தூய்மைப்படுத்துகிறார் அஸ்திர தேவர் அப்போது பக்தர்களும் குளத்தில் மூழ்குகின்றனர்.

இந்திரக் குளக்கரையில் பஞ்ச மூர்த்திகள்

அடுத்த பதிவில் அம்மையப்பரின் திருக்கல்யாண கோலத்தைக் காணலாம்.

No comments: