Thursday, May 14, 2009

திருக்காரணி நடராஜர் உற்சவம்

பத்தாம் நாள் அதிகாலை ஆனந்த கூத்தர் தரிசனம்

எட்டாம் திருநாள் பகலில் ஆதி சோமாஸ்கந்தர் உற்சவம் நடைபெற்றது ஐயன் அபிஷேகம் கண்டருளி வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். அன்று இரவு சந்திரசேகரர் உற்சவம், அம்மையப்பர் அபிஷேகம் கண்டருளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருளினார். ஒன்பதாம் திருநாள் மாலை பிக்ஷாடணர் உற்சவம் ஐயனும் அம்மையும் விமானத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வந்தனர் நாம் எல்லோரும் உய்ய.

கோபுரத்துடன் ஆடல்வல்லான் தரிசனம்

பத்தாம் திருநாள் அதிகாலை 4 மணியளவில் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும், மற்றும் மாணிக்க வாசகர், காரைக்காலம்மையார், பதஞ்சலிமுனிவர்,வியாக்ரபாதருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது . பின்னர் விநாயகர் முன் செல்ல சித்சபேசர் இந்திர வினாமத்திலும் . சிவானந்த வல்லி அம்மை அஸ்தமான கிரி விமானத்திலும் அருட்தரிசனம் தந்து மாட வீதி உலா வருகின்றனர்.
ஆனந்தத் தாண்டவ நடராஜர்



சிவகாம சுந்தரி அம்பாள்

தனத்தால் இயன்ற தனிச்சபையில்
நடிக்கும் பெருமான் தனக்கென்றே

இனத்தால் உயர்ந்த மணமாலை
இட்டுக்க்களித்த துரைப் பெண்ணே

மனத்தான் விளங்கும் சிவகாம
வல்லிக்கனியே மாலொடும் ஒர்

அனத்தான் புகழும் அம்மே இவ்
வடியேன் உனக்கு அடைக்கலமே.

No comments: