ஸ்ரீ:
![]() |
| வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துக்கள் போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள் |
திரௌபதி நிர்க்கதியாக கௌரவர் சபையில் தவித்தபோது அவளைக் காத்த இந்த "கோவிந்தன்" என்ற திருநாமத்தை 27ல் கூடாரை வெல்லும் கோவிந்தா, 28ல் குறையொன்றும் இல்லாத கோவிந்தா, 29ல் கோவிந்தா என்று அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் போற்றியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.
திருப்பள்ளியெழுச்சி # 9

விழுப்பொருளே! உன் தொழும்படியோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும்பே! விரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே........(9)
ஏதம் இல் தண்ணுமை எக்கம்
மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர்
கெருடர்கள்
கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர்
இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம்
அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (9)
வாத்தியம், மத்தளம்,
வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றைக்கொண்டு திக்குகள் எங்கும் இசை கூட்டி பாட்டு பாடக்கூடியவர்களான
கின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும், மகரிஷிகளும், தேவர்களும், யக்ஷர்களும்
மற்றும் சித்தர்களும் தேவரீருடைய திருவடித்தாமரைகளை சேவிப்பதற்காக இரவுப் பொழுது முழுவதும்
மயங்கிக்கிடந்தனர். அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருள பள்ளி எழுந்தருள்வாயாக.





