Sunday, October 25, 2020

கோலாகல நவராத்திரி - 10

  சரஸ்வதி பூஜை 


அன்னைக்கு மிகவும் உகந்த மஹா வமி நாளும் நாம் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாடும் நாளும் நவராத்திரியின் நிறை நாளும் ஆன இந்த ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம்அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்

ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர

நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)


                            

ஸித்திதாத்ரி துர்க்கா

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில்  சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம்தியானம்யோகம்ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள்பிரம்மாவிஷ்ணுசிவபெருமான்தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள்சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார்அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார்இதனால் சிவ பெருமனும், "அர்த்த நாரீஸ்வரர்என்று புகழைடைந்தார்இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும்ரிக்ஷிமுனிகளும்சித்தர்களும்யோகிகளும்பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

                            

சித்தர்களுக்கும்ரிஷிமுனிவர்களுக்கும்அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள்அணிமாமகிமாகிரிமாலகிமாப்ராப்திபரகாம்யம்ஈஷித்வம்வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டதுநினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.

ஸித்த கந்தர்வ யக்ஷாத்யைஅஸிரைரபி |

ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள்கந்தர்வர்கள்யக்ஷர்கள்அசுரர்கள்தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.)


நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |

யோக கம்யா அகிலாதாரா துரீயா யா  ஸம்ஸ்த்துதா ||

தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |

மஹாலக்ஷ்மிஸரஸ்வதீ மஹாகாளீதி  ஸ்திரிய: ||

தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் || 

படைக்கும் பிரம்மாகாக்கும் மஹா விஷ்ணுசம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதிமஹா லக்ஷ்மிமஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர்.



ஒன்பதாம் நாள்

நவமியன்று  -  சாமுண்டா

மலர்: தாமரை

நைவேத்தியம் : அக்கார வடிசல்

நிறம்: சாம்பல்

கோலம் : பூ கோலம்.

ராகம் : வசந்த ராகம்

ஸ்லோகம் :

ஓம்  கிருஷ்ண வர்ணாயை  வித்மஹே  சூல ஹஸ்தாய தீமஹி |

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத் ||



அம்மன் அருள் பெருகும் . . . . .

 



No comments: