Friday, October 16, 2020

கோலாகல நவராத்திரி - 1

                                

அங்காள பரமேஸ்வரியம்மன் 


இவ்வருடம் புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசை வந்ததாலும், சந்திரமான நாள் காட்டியின் படி அதிக மாதம் வந்ததாலும், அச்சமயத்தில் எந்த பண்டிகைகளும் கொண்டாடுவதில்லை என்பதாலும்  ஐப்பசியில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.  

மேலும் கொரோனா என்னும் தீநுண்கிருமியின் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதாலும் முந்தைய வருடம் போல அனைவரையும் அழைத்து கொண்டாட முடியாத ஒரு சூழ்நிலை. ஆலயங்களுக்கும் செல்ல முடியாத நிலை, ஆயினும் நவராத்தியின் போது அம்மனிடம் இந்த தொற்றிலிருந்து உலகத்தோரை காப்பாற்று தாயே! என்று வேண்டிக்கொள்ள  அவரவர்கள் வீட்டில் இருந்தே அம்மனை வழிபடுவோம்.

                

தங்க முலாம் கவசத்தில் உற்சவர் அம்மன்  

எனவே முந்தைய நவராத்திரிகளில் எடுக்கப்பட்ட அம்மனின் படங்கள் இவ்வருடம் இடம் பெறுகின்றன.  இப்பதிவில் அடியேனது குலதெய்வம் அங்காளபரமேஸ்வரியின் தரிசனம் கண்டு களியுங்கள் அன்பர்களே. பாரத தேசம் முழுவதும் நவராத்திரி பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது அதில் ஒரு விதம் பற்றி இப்பதிவில் காணலாம்.

நாம் செய்யும் எல்லா காரியங்களுமேஒரு காரண காரியத்துடன் தான் நிகழ்கின்றனஇதைநான்கு சொற்களால் அடையாளப்படுத்துகிறது சனாதன தர்மம்அவைகாரியம்கரணம்கர்த்தாகாரணம் என்பன. 'கரணம் காரியம் கர்த்தா காரணம்சேதி கீர்த்திதம்என்கிறது சிவரஹஸ்யம்காரியம் என்பதுநம் வாழ்க்கையில் அன்றாடம் செய்யும் வேலைகள்அதாவதுநம் தேவைக்காக நாம் உழைப்பதுமுயற்சிப்பது போன்றவைகரணம் என்பதுகருவிஎழுதுவது காரியம் என்றால்எழுதுகோல் கருவிஅது போன்றுநமக்காக நாம் செய்யும் வேலைகள் எல்லாவற்றிற்கும் உதவும் பொருட்கள்கரணம் எனப்படுகின்றனஉபகரணம் என்ற சொல் கூடவழக்கில் உள்ளதுஎதற்காகச் செய்கிறோம் என்பதை விளக்குவதுகாரணம் என்ற சொல்லாகும்.

                               

கர்த்தா என்பதுசெய்பவரைக் குறிக்கும்நாம் செய்கிறோம் என்றாலும்நம்மை ஒருவன் இயக்குகிறான் என்றாலும்இயக்குதல் என்பதுகர்த்தா என்ற சொல்லிலேயே அடங்கும்இந்த வகையில்நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் தத்துவார்த்தங்களைஎளிமையாகப் புரிந்து கொண்டால்'நான் என்பது ஒன்றுமே இல்லைஎல்லாம் இறைவன் செயல்' என்ற உண்மை விளங்கிமன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வைப் பெற்றிடலாம்இதற்காகத் தான்ஹிந்து மதம் கூறும் வழிபாட்டு முறைகளில் கூடஇம்முறைகள் எளிமையாகப் புகுந்துநம்மைப் பக்குவப்படுத்துகின்றனஏராளமான தெய்வ வழிபாடுகளையும்சடங்குகளையும் கூறும் ஹிந்து தர்ம சாத்திரங்களின் நோக்கம்கொண்டாட்டம் என்ற பெயரில் புத்துணர்ச்சி பெற்றுஉண்மை உணர்ந்துமனம் தளராத வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதே.


                              

அம்பாளுக்கு  ஸ்ரீராஜராஜேஸ்வரி என்று ஒரு திருநாமம் உண்டு.  அதற்கு அரசர்களுக்கெல்லாம் அரசி என்று பொருள்தம் குடிமக்களுக்கு இன்னல் ஏற்பட்டால்அரசர் எப்படி தம் அமைச்சர்கள் மற்றும் சேனாதிபதிகளை கொண்டு காப்பாற்றுகிறாரோஅதுபோலஉலக உயிர்களுக்கு எல்லாம் தாயாகிய பராசக்தியானவள்தேவர்கள்மனிதர்கள் எனயாருக்குத் துன்பம் ஏற்பட்டாலும்அதை ஏற்படுத்திய தீய சக்திகளை அழித்துஎல்லாரையும் காத்தருளுபவள்.

இதற்காகதம் சக்தியால்துர்கைலட்சுமிசரஸ்வதி மற்றும் பிராம்மி முதலான சப்தமாதர்களை தோற்றுவித்துஅவர்களை அரக்கர்களுடன் போரிடச் செய்துஉலகை காக்கிறாள்அன்னையின் அமைச்சராக இருப்பவள்ஸ்ரீராஜ மாதங்கிசேனாதிபதியாக இருப்பவள்ஸ்ரீவாராகிஇவர்கள் இருபுறமும் இருக்கமற்ற சக்திகள் புடைச்சூழரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளேஸ்ரீராஜராஜேஸ்வரிஇந்த மாதிரி அன்னை எழுந்தருளியிருக்கும் சபையைநம் வீட்டிலும் அமைப்பதற்குத் தான் கொலு என்று பெயர்நவராத்திரியில் கொலு வைத்து வழிபடும் இல்லங்களுக்கெல்லாம் அன்னை எழுந்தருளிஅருள்பாலிக்கிறாள்நம் வீட்டிற்கு அம்பாளை அழைக்க நாம் விரும்புவது போன்றுநம் வீடுகளுக்கு வருவதற்கு அம்பிகையும் விரும்புகிறாள் என்பது தான் உண்மை.

இந்த அடிப்படையில்பெண்களுக்கு நவராத்திரி என்றதும் சந்தோஷமும்பரபரப்பும் ஏற்படுவது இயற்கை தானேமுன்பெல்லாம் வீட்டின் நடுவில் முற்றம் எனும் திறந்தவெளியும்சுற்றிலும் தாழ்வாரம் எனும் இடமும் இருக்கும்அப்போதுகொலு வைக்க இடத்துக்குப் பஞ்சம் இருக்காதுஆனால்தற்போது பலரது வாழ்க்கையும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே நகர்கிறதுஅதற்குத் தகுந்தாற்போல்எப்படி வைப்பது எனபல சகோதரிகள் கவலைப்படுகின்றனர்கொலுப் படிகளும், 'ரெடிமேடாகஇரும்பு மற்றும் பிளாஸ்டிக்குகளிலேயே விற்பனைக்கு வந்து விட்டன.

படிகள்ஒற்றைப் படையில் இருக்க வேண்டும்ஐந்து படிகளுக்கு குறையாமல் இருந்தால் தான் அழகுஏழுஒன்பது என வசதிக்கும்இடத்துக்கும் தகுந்தாற்போல அமைத்துக் கொள்ளலாம்.

                            


முதல் படியில்...

எண்ணிய காரியங்கள் தடைகள் இன்றி நடக்க விநாயகர்மன உறுதிக்கு முருகன் போன்ற தெய்வங்கள்.

2ம் படியில்...

படைக்கும் தொழில் புரியும் பிரம்மன்கல்வி தேவதையாகிய சரஸ்வதி மற்றும் இவர்கள் தொடர்புடைய தெய்வங்களையும்புத்தகம்பேனா முதலியனவற்றையும்.

3ம் படியில்...

காக்கும் தொழில் புரியும் ஸ்ரீமகாவிஷ்ணு - மகாலட்சுமி மற்றும் தசாவதாரங்கள்இவை சம்பந்தமுடைய பொம்மைகள்.

4ம் படியில்...

சிவ அம்சமான நடராஜர்சிவகாமிதுர்கைகாளி மற்றும் இவை தொடர்புடைய பொம்மைகள்.

5ம் படியில்...

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மையமாகவும்கயிலைக்காட்சி அரங்கன் மற்றும் இது தொடர்புடைய பொம்மைகளையும் வைக்க வேண்டும்.

இந்நிலையில்கொலு அமைப்பது பராசக்தியின் ராஜசபையை குறிப்பதாகவும்நாம் வாழும் உலகம் படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்நிறைவாக பேரின்பம் அளித்தல் எனும் பிரபஞ்ச ஐந்தொழில்களை உணரும் வகையிலும்நம் இல்லங்களை அலங்கரித்தால்அன்னையின் அருள்  கிடைக்கும்.

  அம்மன் அருள் வளரும் . . . . .

No comments: