Showing posts with label அங்காளபரமேஸ்வரி. Show all posts
Showing posts with label அங்காளபரமேஸ்வரி. Show all posts

Friday, October 16, 2020

கோலாகல நவராத்திரி - 1

                                

அங்காள பரமேஸ்வரியம்மன் 


இவ்வருடம் புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசை வந்ததாலும், சந்திரமான நாள் காட்டியின் படி அதிக மாதம் வந்ததாலும், அச்சமயத்தில் எந்த பண்டிகைகளும் கொண்டாடுவதில்லை என்பதாலும்  ஐப்பசியில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.  

மேலும் கொரோனா என்னும் தீநுண்கிருமியின் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதாலும் முந்தைய வருடம் போல அனைவரையும் அழைத்து கொண்டாட முடியாத ஒரு சூழ்நிலை. ஆலயங்களுக்கும் செல்ல முடியாத நிலை, ஆயினும் நவராத்தியின் போது அம்மனிடம் இந்த தொற்றிலிருந்து உலகத்தோரை காப்பாற்று தாயே! என்று வேண்டிக்கொள்ள  அவரவர்கள் வீட்டில் இருந்தே அம்மனை வழிபடுவோம்.

                

தங்க முலாம் கவசத்தில் உற்சவர் அம்மன்  

எனவே முந்தைய நவராத்திரிகளில் எடுக்கப்பட்ட அம்மனின் படங்கள் இவ்வருடம் இடம் பெறுகின்றன.  இப்பதிவில் அடியேனது குலதெய்வம் அங்காளபரமேஸ்வரியின் தரிசனம் கண்டு களியுங்கள் அன்பர்களே. பாரத தேசம் முழுவதும் நவராத்திரி பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது அதில் ஒரு விதம் பற்றி இப்பதிவில் காணலாம்.

நாம் செய்யும் எல்லா காரியங்களுமேஒரு காரண காரியத்துடன் தான் நிகழ்கின்றனஇதைநான்கு சொற்களால் அடையாளப்படுத்துகிறது சனாதன தர்மம்அவைகாரியம்கரணம்கர்த்தாகாரணம் என்பன. 'கரணம் காரியம் கர்த்தா காரணம்சேதி கீர்த்திதம்என்கிறது சிவரஹஸ்யம்காரியம் என்பதுநம் வாழ்க்கையில் அன்றாடம் செய்யும் வேலைகள்அதாவதுநம் தேவைக்காக நாம் உழைப்பதுமுயற்சிப்பது போன்றவைகரணம் என்பதுகருவிஎழுதுவது காரியம் என்றால்எழுதுகோல் கருவிஅது போன்றுநமக்காக நாம் செய்யும் வேலைகள் எல்லாவற்றிற்கும் உதவும் பொருட்கள்கரணம் எனப்படுகின்றனஉபகரணம் என்ற சொல் கூடவழக்கில் உள்ளதுஎதற்காகச் செய்கிறோம் என்பதை விளக்குவதுகாரணம் என்ற சொல்லாகும்.

                               

கர்த்தா என்பதுசெய்பவரைக் குறிக்கும்நாம் செய்கிறோம் என்றாலும்நம்மை ஒருவன் இயக்குகிறான் என்றாலும்இயக்குதல் என்பதுகர்த்தா என்ற சொல்லிலேயே அடங்கும்இந்த வகையில்நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் தத்துவார்த்தங்களைஎளிமையாகப் புரிந்து கொண்டால்'நான் என்பது ஒன்றுமே இல்லைஎல்லாம் இறைவன் செயல்' என்ற உண்மை விளங்கிமன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வைப் பெற்றிடலாம்இதற்காகத் தான்ஹிந்து மதம் கூறும் வழிபாட்டு முறைகளில் கூடஇம்முறைகள் எளிமையாகப் புகுந்துநம்மைப் பக்குவப்படுத்துகின்றனஏராளமான தெய்வ வழிபாடுகளையும்சடங்குகளையும் கூறும் ஹிந்து தர்ம சாத்திரங்களின் நோக்கம்கொண்டாட்டம் என்ற பெயரில் புத்துணர்ச்சி பெற்றுஉண்மை உணர்ந்துமனம் தளராத வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதே.


                              

அம்பாளுக்கு  ஸ்ரீராஜராஜேஸ்வரி என்று ஒரு திருநாமம் உண்டு.  அதற்கு அரசர்களுக்கெல்லாம் அரசி என்று பொருள்தம் குடிமக்களுக்கு இன்னல் ஏற்பட்டால்அரசர் எப்படி தம் அமைச்சர்கள் மற்றும் சேனாதிபதிகளை கொண்டு காப்பாற்றுகிறாரோஅதுபோலஉலக உயிர்களுக்கு எல்லாம் தாயாகிய பராசக்தியானவள்தேவர்கள்மனிதர்கள் எனயாருக்குத் துன்பம் ஏற்பட்டாலும்அதை ஏற்படுத்திய தீய சக்திகளை அழித்துஎல்லாரையும் காத்தருளுபவள்.

இதற்காகதம் சக்தியால்துர்கைலட்சுமிசரஸ்வதி மற்றும் பிராம்மி முதலான சப்தமாதர்களை தோற்றுவித்துஅவர்களை அரக்கர்களுடன் போரிடச் செய்துஉலகை காக்கிறாள்அன்னையின் அமைச்சராக இருப்பவள்ஸ்ரீராஜ மாதங்கிசேனாதிபதியாக இருப்பவள்ஸ்ரீவாராகிஇவர்கள் இருபுறமும் இருக்கமற்ற சக்திகள் புடைச்சூழரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளேஸ்ரீராஜராஜேஸ்வரிஇந்த மாதிரி அன்னை எழுந்தருளியிருக்கும் சபையைநம் வீட்டிலும் அமைப்பதற்குத் தான் கொலு என்று பெயர்நவராத்திரியில் கொலு வைத்து வழிபடும் இல்லங்களுக்கெல்லாம் அன்னை எழுந்தருளிஅருள்பாலிக்கிறாள்நம் வீட்டிற்கு அம்பாளை அழைக்க நாம் விரும்புவது போன்றுநம் வீடுகளுக்கு வருவதற்கு அம்பிகையும் விரும்புகிறாள் என்பது தான் உண்மை.

இந்த அடிப்படையில்பெண்களுக்கு நவராத்திரி என்றதும் சந்தோஷமும்பரபரப்பும் ஏற்படுவது இயற்கை தானேமுன்பெல்லாம் வீட்டின் நடுவில் முற்றம் எனும் திறந்தவெளியும்சுற்றிலும் தாழ்வாரம் எனும் இடமும் இருக்கும்அப்போதுகொலு வைக்க இடத்துக்குப் பஞ்சம் இருக்காதுஆனால்தற்போது பலரது வாழ்க்கையும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே நகர்கிறதுஅதற்குத் தகுந்தாற்போல்எப்படி வைப்பது எனபல சகோதரிகள் கவலைப்படுகின்றனர்கொலுப் படிகளும், 'ரெடிமேடாகஇரும்பு மற்றும் பிளாஸ்டிக்குகளிலேயே விற்பனைக்கு வந்து விட்டன.

படிகள்ஒற்றைப் படையில் இருக்க வேண்டும்ஐந்து படிகளுக்கு குறையாமல் இருந்தால் தான் அழகுஏழுஒன்பது என வசதிக்கும்இடத்துக்கும் தகுந்தாற்போல அமைத்துக் கொள்ளலாம்.

                            


முதல் படியில்...

எண்ணிய காரியங்கள் தடைகள் இன்றி நடக்க விநாயகர்மன உறுதிக்கு முருகன் போன்ற தெய்வங்கள்.

2ம் படியில்...

படைக்கும் தொழில் புரியும் பிரம்மன்கல்வி தேவதையாகிய சரஸ்வதி மற்றும் இவர்கள் தொடர்புடைய தெய்வங்களையும்புத்தகம்பேனா முதலியனவற்றையும்.

3ம் படியில்...

காக்கும் தொழில் புரியும் ஸ்ரீமகாவிஷ்ணு - மகாலட்சுமி மற்றும் தசாவதாரங்கள்இவை சம்பந்தமுடைய பொம்மைகள்.

4ம் படியில்...

சிவ அம்சமான நடராஜர்சிவகாமிதுர்கைகாளி மற்றும் இவை தொடர்புடைய பொம்மைகள்.

5ம் படியில்...

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மையமாகவும்கயிலைக்காட்சி அரங்கன் மற்றும் இது தொடர்புடைய பொம்மைகளையும் வைக்க வேண்டும்.

இந்நிலையில்கொலு அமைப்பது பராசக்தியின் ராஜசபையை குறிப்பதாகவும்நாம் வாழும் உலகம் படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்நிறைவாக பேரின்பம் அளித்தல் எனும் பிரபஞ்ச ஐந்தொழில்களை உணரும் வகையிலும்நம் இல்லங்களை அலங்கரித்தால்அன்னையின் அருள்  கிடைக்கும்.

  அம்மன் அருள் வளரும் . . . . .

Sunday, March 19, 2017

மாசி மக தீர்த்தவாரி - 4

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   3   5  


                                               





                                       
கால மாற்றத்தினால் இன்றைய கால கட்டத்தில் மேதை நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை,திருவல்லிக்கேணிப்  பகுதியில் இருந்தாலும், திரிபுரசுந்தரி உடனுறை  தீர்த்தபாலீஸ்வரர் கோவில் திருமயிலையிலேயே முற்காலத்தில் இருந்தது .

அக்காலத்தில் இக்கோவிலைச்  சுற்றி 64 தீர்த்த குளங்கள் இருந்தனவாம், மிகப்பெரிய தீர்த்தமாக வங்க கடலும் கோவிலுக்கு சற்று தொலைவிலேயே இருப்பதால் தீர்த்தங்களை பாரிபாலனம் செய்யும் ஈஸ்வரர்= தீர்த்தபாலீஸ்வரர் என்று திருநாமம். 

சூரியனை நோக்கி நீர் விடுவதான ”அர்க்கியம்” இங்கு முன் காலத்தில் முனிவர்களாலும் சித்தர்களாலும் செய்யப்பட்டதாக நம்பிக்கை. சிறிய கோவில் தான் ஆனால் மிகவும் பழமையானது அமைந்திருக்கும்சுற்றுபுறத்திற்கு மாறாக கோவிலின் உள்ளே அமைதி தவழ்கிறது. 

திருபுரசுந்தரி அம்மன் பெயருக்கு ஏற்றவாரே அருளும் அழகும் பொங்க காட்சி அளிக்கிறார். நீர் சார்ந்த உணவுகளான பாயசம், பானகம் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைத்து வழிபட்டு எல்லோருக்கும் பகிர்ந்தால் நலம் பல பெறலாம். 









கண்ணாடி தரிசனம் 

**************


 


அஸ்திர தேவரில் சிவசக்தி 


அபிஷேகம் 


அலங்காரம் 




  கற்பூர ஆரத்தி 


 **************


மல்லீஸ்வரர் 

முற்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் அமையப்பெற்றதால் எம்பெருமானுக்கு மல்லீஸ்வரர்  என்று திருநாமம்.  மரகதாம்பிகை சமேதராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார் மல்லீஸ்வரர்.

மல்லிகையின் வாசம் போல பக்தர்களின்  மனதில் பரவசம் ஏற்படுத்தும் ஈஸ்வரர். நமதுமனமாகிய மலரை நற்சிந்தனையோடு இறைவன் திருவடியில் சமர்பித்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள்பல. அது அகவழிபாடு. புறவழிபாடாக மனம் மிகுந்த மலர்களையும் உணவு வகைகளையும் தாமரை இலையில் படைத்து வழிபட்டு பகிர்வது இந்த கோவிலில் சிறப்பு. 







கற்பூர ஆரத்தி 


*******************


அங்காளபரமேஸ்வரி அம்பாள் 



                                                                                                                                 மாசிமக தரிசனம்   தொடரும்  .................




Saturday, September 7, 2013

அங்காள பரமேஸ்வரிக்கு ஆனந்த கும்பாபிஷேகம்

ஓம் சக்தி


தானாக வந்து தடுத்தாட் கொண்ட தயாபரி
 நாட்டுக்கல் பாளையம் அங்காள பரமேஸ்வரி

குல தெய்வ வழிபாடு

நாம் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வரும் தெய்வம்தான் குல தெய்வம். நமது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகின்றது. எனவேதான் சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை  குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்ற பழமொழி வழங்கப்படுகின்றது.  ஒருவரது  குலம் ஆல்போல் தழைத்து அருகு போல வேரூன்ற அவர்களின் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால் மற்ற தெய்வங்களின் அருள் கிட்டாது.    குல தெய்வத்தின் அருளினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், நிரந்தர பணி கிட்டும், குடும்பப் பிரசினை தீரும்,  உடல் உபாதைகள் சரியாகும்.  


முளைப் பாலிகையில் விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன்

குல தெய்வம் என்பது , நமது  குலத்தில் தோன்றிய  முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும் . அல்லது நமது குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பற்றியவராய் கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு, ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது நமது  குலதெய்வமே.  




யாக சாலையில் விநாயகர், அங்காளம்மன் திருவுருவங்கள்



மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து  வருவோம். ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது . நாம்  குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து, மாவிளக்கு  படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்புகின்றோம். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.


பிரதான யாக குண்டத்தின் நடுவே பஞ்சாசனத்தில் அம்பாள்

குல தெய்வ வழிபாட்டைப் பற்றி  ஸ்ரீ ஸ்ரீ  காஞ்சி மஹாப்பெரியவர் இவ்வாறு கூறுகின்றார். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் நமது  குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.


கேரளத்திற்கு மிக அருகில் உள்ள ஊர் என்பதால் கேரளா போலவே யானைகள், செண்டை மேளம் அனைத்தும் இருந்தன

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

கூர்மாசனம் ( ஆமை), நாகாசனம் ( ஆதி சேஷ நாகம்), யோகாசனம், சிம்மாசனம், பத்மாசனம்( தாமரை) என்ற பத்மாசனத்தில் அம்பாள் நான்கு கால பூஜை கண்டருளுகின்றாள்

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் முதல் தலைமுடி கொடுத்திருப்பார்கள். பிள்ளைப் பேற்றுக்கும் அறிவு விழிப்புக்கும் தூண்டுதலான காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும். வருடா வருடம் அல்லது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் பெரு வழிபாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள்.


யாக சாலையின் முகப்பு அலங்காரம்
விநாயாகர், முருகர், அங்காளம்மன், மீனாக்ஷி அம்மன் திருவுருவங்கள்


இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?” என்கிறார் காஞ்சி மாமுனிவர்.
அந்த குலத்தில் பிறந்த அனைவரும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடன் பிறந்தவர்கள் என்பதினால்தான் கோத்திரம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். இதையே நமது முன்னோர்கள் "கோத்திரமறிந்து பெண்ணையெடு பாத்திரமறிந்து பிச்சையிடு" என்று அருளியுள்ளனர்.  எதற்காக இப்பதிவில் இந்த முன்னுரை என்று யோசிக்கின்றீர்களா?


பூத்தவளுக்கு புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம் காத்தவளுக்கு 
 மூன்றாக் கால பூஜை 

நாம் இப்பதிவில் காணப்போகின்ற  பொள்ளாச்சி வட்ட நாட்டுக்கல்பாளையத்தில் தானே வந்து தடுத்தாட்கொண்ட அங்காளம்மன் அடியேனின் இல்லாளின் பிறந்த வீட்டு குல தெய்வம் ஆவாள். அந்த அம்மனுக்கு ஆகமவிதிப்படி 12  ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இந்த வருடம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தை  தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அதை தாங்களும் கண்டு களியுங்கள் அன்பர்களே.  
குறத்தி மீனாக குடத்தில் வந்த சுயம்பு உற்சவர் அம்மன் கும்பம்

அது என்ன குறத்தி மீன், குடம் என்று யோசிக்கின்றீர்களா? அம்மனின் கதையை படியுங்கள் புரியும். ஒரு சமயம் வணிக மக்கள் சிலர் சதங்கைகள் பூட்டிய மாடுகள் பூட்டிய வண்டிகளிலே மஞ்சள், மிளகுமற்றும் மயில் தோகை முதலியவற்றை ஏற்றிக் கொண்டு சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சோதித்து அருள  கருணைக் கடலாம் அந்த அகிலாண்ட நாயகி , உலக மாதவாய் ஏக நாயகியாய் உக்ர ரூபிணியாய் திருமேனி கொண்டு பக்தர்களுக்கு உண்டாகும் பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம் கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும் "மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி” சுருக்கம் விழுந்த தோலுடன்  தலை நரைத்த கிழவியாய் கையில் கோலுன்றி  அவர்களிடம் வந்து மக்களே வண்டியிலே என்ன கொண்டு செல்கிறீர்கள்?" என வினவ அவர்களும் உண்மையைக் கூறாமல் நாங்கள் "தவிடும், புண்ணாக்கும் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம் தாயே! " என்றனர். அனைத்தையும் அறிந்த அன்னை சிரித்து "அப்படியே ஆகட்டும்" என்று சென்று விட்டாள். வணிகர்கள் சந்தை சென்று வண்டிகளை பிரித்துப் பார்த்த போது பொருட்கள் அனைத்தும் தவிடும் புண்ணாக்குமாக இருக்கக் கண்டு  மனமுருகி  மன்னிப்புக் கேட்க அம்மையும் தான் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி என்றும் தன்னை குல  தெய்வமாக   கொண்டு வழிபட்டு வரவும் நான் உங்கள் குடி உயர செய்வேன் என்று  கூறினாள் அது முதல் அவர்களும் அங்காள பரமேஸ்வரியை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வந்தனர்.

 

ஆனந்த கும்பாபிஷேகம் 

  அவ்வாறு அவர்கள் அங்காள பரமேஸ்வரியை வணங்கிக் கொண்டு வரும் நாளில்  ஒரு சமயம் அவர்கள் குடும்பத்தின் பெண்கள் நீர் கொண்டுவர குடகனாற்றுக்கு சென்ற போது குறத்தி மீனின் வடிவிலே அவர்கள் குடத்திலே குபு குபு என்று வந்து புகுந்து கொண்டாள் அந்த அங்காளியானவள்அந்தப் கன்னிப் பெண்களும் அந்த குடத்தை சுமக்க முடியாமல்  சுமந்து வந்த வீடு சேர்ந்த பிறகு அம்மை  மீன் வடிவத்தில் அவர்களுக்கு தெய்வமாய்  தானே வந்திருப்பதாக கூறினாள். அவர்கள் பாலும் தேனும் பகிர்ந்தளிக்க  அந்த ரூபத்திலேயே  குடத்தோடு வந்த தாய் குலத்தோடு  தங்கி விட்டாள். "திரை கடல் ஓடியும் திரவியம் தேடும்" வணிகர்களான  அவர்கள் ஒரு வெள்ளிப் பேழையிலே அம்மையை அந்த  ரூபத்திலேயே எழப் பண்ணி தங்களுடன் தாங்கள் செல்லும் இடமெல்லாம் தாயையும் கொண்டு சென்று வெள்ளிக் கிழமைகளில்    அத்தாய்க்கு பூஜை செய்து வந்தார்கள். 


அம்மன் விமானத்திற்கு கும்பாபிஷேகம்

ஒரு சமயம் அவர்கள் புளியம்பட்டியில் ஒரு ஒலைக் குடிசையில் அம்மையை வைத்து  வணங்கி வரும் போது  அம்மன் தான் நிலையாக குடிகொள்ள வேண்டி ஒரு நாடகம் ஆடினாள். அந்த ஓலைக் குடிசையில் பற்றியது அக்னி. ஆனால் "அக்னி ஜூவாலையையே மகுடமாக அணிந்த அந்த மகேஸ்வரியை எந்த அக்னிதான் என்ன முடியும்". எரிந்தது ஓலைக் குடிசை மட்டுமே ஆனால் அம்மை இருந்த  வெள்ளிப்பேழை மட்டுமே அப்படியே இருந்தது.



பரிவார தேவதைகள் கலசங்கள்

எனவே அவர்கள் அம்மனிடம் தாயே!  "எங்களுடன் நீயும் ஏன் அலைய வேண்டும் உனக்கு நிலையான ஒரு கோவில் கட்ட ஒரு இடத்தை கூறு" என்று மனமுருகி வேண்டி நிற்க, அந்த தாயும் கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சிக்கு அருகில் நாட்டுகல்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள ஜமீன்தாரின் வளர்ப்பு பிள்ளைக்கு தங்கள் பெண் ஒருத்தியை மணம் செய்து கொடுங்கள், பேழையுடன் என்னையும் சீதனமாக கொடுங்கள்  நான் அங்கே கோவில் கொள்கிறேன் என்றாள். அவர்களும் அவ்வாறே  அந்த ஜகன் மாதாவுக்கு கோவில் கட்டி சிறப்பாக இன்றும் வழிபட்டு வருகின்றனர். இது தான் இந்த குக்கிராமத்தில் தானே வந்து அம்மன் கோவில் கொண்ட வரலாறு.


விமானத்தின் பக்கவாட்டுத் தோற்றம்


 ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மையை பேழையிலிருந்து எடுத்து பொன்னூஞ்சல் ஆட்டுகின்றனர். அம்மைக்கு உகந்த மஹா சிவராத்திரி திருவிழாவின் போது இரவு  அம்மை ஆற்றுக்கு எழுந்தருளி அருள் முகத்துடன் கோவிலுக்கு எழுந்தருளி   மேல் மலையனூர், குடகனாறு தீர்த்தவாரி கண்டருளி பின் இரவில் பள்ளய பூஜை கண்டருளுகிறாள். மறுநாள் மாலையில் வெள்ளி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வந்தருளி உஞ்சல் உற்சவம் கண்டருளுகிறாள். 



 சிவராத்திரி உற்சவத்தில் அம்மன் உலா வரும்
 வெள்ளி காமதேனு வாகனம்