Friday, March 13, 2020

மாசிக் கடலாடல் - 2


திருமயிலை தீர்த்தபாலீஸ்வரர்


******************


*************


திருமயிலை மாதவப்பெருமாள்
 (பெரிய மாதவர்)


பெருமாள் பின்னழகு

*******************


அஸ்திர தேவர்
திருமயிலை கபாலீச்சுரம்

தோளுக்கினியானில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்


மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்

பொருள்: பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னை மரங்கள் நிறைந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையாம் திருஞானசம்பந்தர் திருமயிலையில் எலும்பை பெண்ணாக்கிய அற்புதம் செய்த போது பாடிய இப்பதிகத்தில் கபாலீஸ்வரப் பெருமானின் பல்வேறு திருவிழாக்களில் மாசி கடலாட்டு விழாவை காணாமல் போகலாமா? என்று வினவுகிறார்.


கபாலீஸ்வரர்




அஸ்திர தேவருக்கு அபிஷேகம்





கற்பக கன்னி அம்மன்




பழண்டி அம்மன்


2 comments:

கோமதி அரசு said...

தெய்வங்கள் மாசிக் கடலாடல் நிகழச்சியை தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி.
கண் குளிர கண்டேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.