Friday, April 20, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 2

கொடியேற்றம் 

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுகளில்  இத்தலம் "திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீவிஜய கண்ட சோழரால் 29வது ஆண்டு கட்டப்பட்ட ஜயங்கொண்ட சோழ மண்டலத்தின் புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டுப் புலியூர் திருக்கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இக்கல்வெட்டு இத்தலத்தின் பின்புறம் உள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீவிஜயகண்ட சோழர்(29வது பட்டம்) அந்தி(காலை), சந்தி(மாலை) ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றுவதற்காக ஆயிரம் ஆடுகளையும், ஆயிரம் பசுக்களையும் இத்திருத்தலத்து இறைவனுக்கு தானமாக தந்துள்ளார். இச்செய்தி சுவாமி சன்னதியில்  மேற்கு நோக்கி உபபீடம் அதிஷ்டான வர்க்கத்தில் ஜெகதி வரியில்  பொறிக்கப்பட்டுள்ளது.  தொல்லியல் துறையின் மதிப்பின்படி இக்கலவெட்டு 800 ஆண்டுகளுக்கு முந்தையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆந்திராவை சேர்ந்த மன்னன் ஸ்ரீபெத்தப்ப சோழன் இத்திருத்தலத்திற்கு  திருப்பணி செய்துள்ளதாகவும் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் குஜராத்தை சார்ந்த சிற்றரசரான பக்திமான் ஸ்ரீ இராமநாத பாண்டியாஜி சுமார் 300 ஆண்டுகளுக்கு  முன் இத்தலத்திற்கு வந்து  இறைவனை வழிபட்டு  பிள்ளைப் பேறு பெற்றான். பிறந்த அப்பிள்ளைக்கு மன்னன் சிவசங்கரன் என்று பெயரிட்டான். 

வளர்ந்து பெரியவனான சிவசங்கரன் பக்தியுடன் இவ்வூரிலேயே தங்கி, மல்லிப்பூந்தோட்டங்கள், குளங்கள் அமைத்து சிவபூஜை செய்து வந்தான்.  இவ்விடத்தில்  குடியிருப்புகளை அமைத்து காஞ்சி மாநகரிலுள்ள ஏகாம்பரநாதர்  தேவஸ்தானத்திலிருந்து திரு. சுப்புராய சிவாச்சாரியார் அவர்களை வரவழைத்து, தகுந்த ஏற்பாடுகளை செய்து தந்துள்ளார்.  அன்று முதல் அவரது வம்சத்தினரே  பாரத்வாஜேஸ்வரருக்கு மிகுந்த சிரத்தையுடனும், செம்மையாகவும் சிவபூஜைகளை செய்து வருகின்றனர்.  


ஒன்றாம் திருநாள் காலை உற்சவம் கொடியேற்றம் ஆகும். முப்பத்து முக்கோடி  தேவர்களையும் உற்சவத்திற்கு அழைத்து அனைவரையும் கொடி மரத்தில் எழுந்தருளச்செய்வதே கொடியேற்றம் ஆகும். 


விநாயகர் 

 ரிஷபக் கொடி 

கொடிக் கம்பம் 

அனுக்ஞை விநாயகர்,  திருநீற்று பூதங்கள் 

கொடி மர பீடத்திற்கு அபிஷேகம் 

பால் அபிஷேகம் 

கற்பூர ஆரத்தி 

கொடி மண்டபத்தில் பாரத்வாஜேஸ்வரர்

கொடியேற்றத்தின் போது  இறைவன் எழுந்தருளும் கொடி மண்டபம்,  தல விருட்சம் நாக லிங்க மரத்தின் அடியில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்கள். கற்றளி அமைப்பு. முன் பக்க சுதை சிற்பம் மந்திரியாக மாணிக்க வாசக சுவாமிகள். பின் பக்கம் குதிரை மேல் சிவபெருமான். பரிதனை நரியாக்கிய திருவிளையாடலின் நாயகன். குதிரைச் சேவகன். இரு பக்கங்களிலும் திருப்பெருந்துறையில் உள்ளது போல ஐயன் மற்றும் அம்மையின் திருவடிகளுடன் எழிலாக அமைந்துள்ளது. 


 அம்மையப்பர் 

சிவ சொர்ணாம்பிகை



முருகர் 


சண்டிகேஸ்வரர் 



அஸ்திர தேவர் 

பெருவிழா அருட்காட்சிகள் தொடரும் . . . . . . . .

No comments: