Friday, April 20, 2018

சங்கர ஜெயந்தி

சதாசிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் | 
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் || 

குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம: || 

இன்று சித்திரைப் பஞ்சமி  சிவபெருமானின் அம்சமாக காலடியில் அவதரித்து  சனாதன தர்மத்திற்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களின் திருவவதார தினம். இந்நன்னாளில்  காலடியில் அமைந்துள்ள அவரின் ஜன்ம தலத்தை தரிசியுங்கள் அன்பர்களே.  

ஆதி சங்கரரின் ஜன்மஸ்தலம்

ஆதி சங்கரரின் தாய்க்காக  அவர்களின் இல்லத்திற்கு அருகில் ஓடிய பூர்ணா நதிக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. உள்ளே சப்த மாதர்கள்,  ஆதி சங்கரரின் அன்னை ஆரியாம்பாளின் சன்னதி, ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளன. ஆதி சங்கரரின் வாழ்க்கை  வரலாறு முழுவதும் அழகிய ஓவியங்களாக மிளிர்கின்றன. 


முகப்பில் ஆதி சங்கரர் ஏழ்மையிலும்  பிச்சை கேட்டு வந்த தனக்காக தன்னிடமிருந்த ஒரே நெல்லிக்கனியை பிச்சையாக அளித்த  பெண்மணிக்காக கனகதாரா ஸ்தோத்திரம்  பாடி  மஹாலக்ஷ்மியை தங்க நெல்லிக்கனி பொழிய வைத்த வரலாறு அழகிய கேரள பாணி ஓவியமாக வரையப்பட்டுள்ளது அதன் காட்சிகள் கீழே.

மஹாலக்ஷ்மி தங்க நெல்லி மழை பொழியும் காட்சி  


தேவர்கள் வாழ்த்தும் காட்சி 

கனக தாரா ஸ்தோத்திர வரலாறு 

தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேற சிறுவன் சங்கரன் சன்னியாசம் எடுத்துக்கொள்ள விழைகின்றார். ஆனால் ஒரே மகன் சன்னியாசி ஆவதில் தாயார் ஆரியாம்பாளுக்கு விருப்பமில்லை. அச்சமயம் ஒரு நாள் சிவனருளாக் பூர்ணாவில் சங்கரர் நீராடும் போது ஒரு முதலை அவரது காலைப் பற்றிக்கொள்கின்றது.  அப்போது சங்கரர் தன் தாயிடம் தான் சன்னியாசம் மேற்கொண்டால் முதலை தன்னை விட்டு விடும் என்று  கூற தாயாரும் சம்மதிக்க சன்னியாசி ஆகின்றார். ஆயினும் தாயினுடைய விருப்பதிற்காக அவரது இறுதி காலத்தில் வந்து தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து  முடிக்கின்றார். அவ்வரலாறு கீழே. 


சிவபெருமான் 

மஹா விஷ்ணு 

தேவர்கள் 


சங்கரர் சன்னியாசம் ஏற்ற வரலாறு 

ஜன்மஸ்தானத்திற்கு அருகில் சங்கரரின் குல தெய்வமான கிருஷ்ணரின் ஆலயம் அமைந்துள்ளது. 

ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம்  ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ||

No comments: