Thursday, April 12, 2018

பங்குனிப் பெருவிழா - 8

திருமுலைப்பால் விழா

விழாமலி திருமயிலையில் மூன்றாம் திருநாள் அதிகாலை  அதிகார நந்தி சேவையின் போது தெற்குக்குளக்கரையில் அமைந்துள்ள திருமுலைப்பால் மணடபத்தில் திருமுலைப்பால் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.





காத்திருக்கும் அடியவர்கள் 



பரந்தெழுந்த  சமண்முதலாம் பரசமய விருணீங்க
சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றீ னொளி  விளங்க
வரந்தைகெடப் புகலியர்கோன முதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த கற்பகவல்லி ( சிவகாம சுந்தரி) கழல் போற்றி! 


சிவபாத ஹிருதயரும் காழிப் பிள்ளையாரும் 
குளக்கரைக்கு எழுந்தருளுதல் 




சிவபாத ஹிருதயர் சீர்காழி  திருக்குளத்தில் நீராடுதல்







குளக்கரையில் சிவபாதஹிருதயருக்கு அபிஷேகம் 




சிவபாதஹிருதயர் குளத்தில் நீராடும் போது கரையில் இருந்த சம்பந்தர்  அம்மையப்பரை நினைத்து சீர்காழி கோபுரத்தை நோக்கி அழுதல் 






வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதப்பரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத 
சீதவள வயற்புகலித் திருஞான சம்பநதருக்கு

             கற்பகாம்பாள்  திருமுலைப்பால் அளித்தல்


 






சிவபாத ஹிருதயர்





குழந்தை  சம்பந்தனின்  வாயில் பால் ஒழுகுவதைக் கண்ட சிவபாத ஹிருதயர் யாரிடம் பாலை வாங்கிப் பருகினாய் என்று மிரட்ட காழிப்பிள்ளையார் 


தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடு டையசுட லைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த


பீடு டைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

என்றுத்திருப்பதிகம் பாடத்தொடங்கி  அம்மை அப்பரை வலம் வருகின்றார்.  . 

                                                                                         
                                                                                                    பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

No comments: