Friday, September 22, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 3

இரண்டாம்  ஆவரணம்



அசோக் நகர் சொர்ணாம்பாள் கொலு





  தனலக்ஷ்மி அலங்காரம்









மீனாக்ஷி அலங்காரம் 





**********

இரண்டாவது ஆவரண கீர்த்தனம் 

ராகம்: கல்யாணீ                                                                                                            தாளம்: ஆதி

பல்லவி

கமலாம்பாம் பஜரே ரேமாநஸ கல்பித
மாயா கார்யம் த்யஜரே. (கமலாம்பாம்)

அனுபல்லவி
கமலா வாணீ ஸேவித பார்ஸ்வாம்
கம்பு ஜயக்ரீவாம் நததேவாம்

மத்யமம்
கமலாபுர ஸதநாம் மிருதுகதநாம்
கமநீய ரதநாம் கமலவதநாம் (கமலாம்பாம்)

சரணம்
ஸர்வாஸாபரிபூரக- சக்ர ஸ்வாமிநீம் பரமசிவகாமிநீம்
தூர்வாஸார்ச்சித குப்த- யோகிநீம் துக்க த்வம்ஸிநீம் ஹம்ஸிநீம்
நிர்வாண நிஜ ஸுக ப்ரதாயிநீம் நித்ய கல்யாணீம் காத்யாயநீம்
ஸர்வாணீம் மதுபவிஜய வேணீம் ஸத்குருகுஹ ஜநனீம் நிரஞ்சநீம்

மத்யமம்
கர்வித பண்டாஸுர பஞ்ஜநீம் காமா கர்ஷிண்யாதி ரஞ்ஜநீம்
நிர்விசேஷ சைதந்ய ரூபிணீம் உர்வீ  தத்வாதி ஸ்வரூபிணீம் (கமலாம்பாம்)


இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் கல்யாணீ ராகத்துக்கே உரித்தான ஜீவ ஸ்வரமான நீ என்ற ஸ்வரத்தை கிருதி முழுவதும் பின்னி இழைந்தோடச் செய்துள்ளார் நாதயோகி தீக்ஷிதர் அவர்கள்.

ஓ மனமே!  திருவாரூரில் குடிகொண்டிருக்கும் கமலாம்பிகையை துதி செய்வாயாக. மாயை விளைவிக்கும் ஆசை, பாசம்  ஆகியவற்றை துறப்பாயாக!

அலைமகளும் கலைமகளும் இருமருங்கிலும் நின்று சேவித்த வண்ணம் இருப்பவளும், வெண்சங்கை வெல்லும்  கழுத்தை உடையவளும், தேவர்களால் பூஜிக்கப்படுபவளும், கமலாபுரத்தில் கோயில் கொண்டுள்ளவளும், மிகவும் மெதுவாகவும் இனிமையாகவும் பேசும் தன்மையுடையவளும், மாதுளை முத்துக்கள் போன்ற  அழகிய பற்களை உடையவளும், அன்றலர்ந்த தாமரையின் மலருக்கு நிகரான திருமுகமுடையவளுமான கமலாம்பாளை துதி செய்வாயாக.

ஸ்ரீவித்யா உபசனையின் அங்கமான ஸர்வாசாபரிபூரக சக்கரத்தின் ஈஸ்வரியும், பரமசிவனின் மனதுக்குகந்தவளும், துர்வாச மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட குப்தயோகினியாக இருப்பவளும், துயரங்களை துடைப்பவளும், அஜபா என்ற மந்த்ர ஸ்வரூபியாக இருப்பவளும், கைவல்யம் என்னும் உண்மையானதும் மேலானதுமான முக்தி நிலயை அளிப்பவளும், அழிவற்ற  மங்கல ஸ்வரூபிணி, காத்யாயினியாக அவதாரம் செய்தவளும், சர்வேஸ்வரனின் பட்ட மஹிஷியாக இருப்பவளும், கருவண்டுகளின் கருமையை மிஞ்சும் கருங்கூந்தலை உடையவளும், ஞானபண்டிதனான குருகுஹனை ஈன்றவளும், மாசற்றவளும், கர்வம் பிடித்த பண்டாஸுரனை வதம் செய்தவளும், காமகர்ஷணி போன்ற தேவதைகளுக்கு சந்தோஷம் அளிப்பவளும், விகல்பங்களற்ற சைதன்யாரூபியாக இருப்பவளும், பூ தத்வம் முதலான தத்துவங்களின் இருப்பிடமாக இருப்பவளுமான கமலாம்பிகையை துதி செய் மனமே.

இந்த இரண்டாவது ஆவரணம்  சோடஷ தள கமலம் ஆகும். இச்சக்கரம் சர்வாசாபரிபூரகம் என்பதாம். இதில் அட்டித்து விளங்கும் யோகினி குப்தயோகினி ஆவாள்.  திரிபுரேசி இச்சக்கரத்தின் நாயகி. அவஸ்தை ஸ்வப்னம் ஆகும். இதில் விளங்கும் சக்தி தேவதைகள்  காமாகர்ஷீணீ முதலிய  பதினாறு  ஆகர்ஷண சக்தியர் ஆவர். ஜீவாத்மாவின் கனவு நிலையையும் சூட்சும சரீரத்தையும் அதனால் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கின்றது. 

                                      முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

2 comments:

Anuprem said...

சொர்ணாம்பாள் அம்பிகையின் படங்கள்....மிளிர்கின்றன...


S.Muruganandam said...

மிக்க நன்றி, தொடருங்கள்.