பகல் பத்து - பத்தாம் நாள்
இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்பவள மாலை, திருமாங்கல்யம் மிளிர கையில் கிளி ஏந்தி சர்வாபரண பூஷிதையாக அமர்ந்த கோலத்தில் நாச்சியாராக சேவை சாதிக்கின்றார் நம்பெருமாள்.
பின்னழகு
ஏலக்காய் பட்டை ஜடையுடன்
கிளி மாலையுடன்
பகற்பத்தின் நிறை நாள் சகல விஷ்ணுவாலயங்களிலும் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகினி அவதாரத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வாரின் ஒன்பது, பத்தாம் பத்துக்களும், இரு தாண்டகங்களும் இன்று சேவிக்கப்படுகின்றன.
எம்பெருமான் யோக நித்திரையிலிருந்த போது முரன் என்னும் அசுரன் அவரை அழிக்க வந்தான் அப்போது எம்பெருமான் மேனியிலிருந்து ஒரு சக்தி தோன்றி அசுரனை அழித்தது. அசுரனை அழிக்க எம்பெருமான் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.
இரண்டாம் அரையர் சேவையில் இராவண வதம் முடிந்து திருமொழித் திருநாள் சாற்றுமுறை நடைபெறும்.
அதன்பின்னர் ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்கள் கருட மண்டபத்தில் எழுந்தருளி இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அருளப்பாடு நடந்து பரிவட்டம் சந்தனம் மற்றும் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார். ஆழ்வார்கள் அனைவரும் இன்று மட்டும் நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி நம்மாழ்வாரின் சடாரியை பெற்றுக்கொண்டு தங்களது சன்னதிகளுக்கு சென்று சேருவர்.
அரங்கன் தாம் பூண்ட இத்திருக்கோலம் கண்டு மிக்க பூரிப்பு..! பராசர பட்டர் வருகின்றார்..! தாயாரின் மூக்குத்தி,..! தாண்டா வைத்து பின்னிய கூந்தலங்காரம்..! திருமார்பினில் பவழ மாலை, இரட்டை முத்துச்சரம், திருமாங்கல்யம்..! எல்லாம் பொலிவுடன் மிளிர நாச்சியார் திருக்கோலத்தில் பரிமளிக்கின்றார்.!
”பட்டரே..! எப்படி இருக்கின்றேன்.? ” – அரங்கன் வினவுகின்றார்..!
தாயார் கோலத்தில் அரங்கனைக் கண்ட பட்டர் கண்குளிர நமஸ்கரிக்கின்றார்..!
“நாயன்தே..! அற்புதம் அடியேன்..! ஆனாலும் ஒரு சிறு குறை..!” என்கிறார்..!
எனன குறை கண்டாய் பட்டரே..?
”எவ்வளவுதான் கனகச்சிதமாக இத்திருக்கோலம் அமைந்தாலும், தாயாரின் திருக்கண்களில் காணப்படும் காருண்யம், வாத்ஸல்யம் இல்லையே ப்ரபோ..!” என்கிறார் அனுதினமும் தாயாரை போற்றி, தம் சிந்தையில் ஏற்றி வழிப்பட்ட பட்டர்..!













































