Saturday, February 16, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -1

விநாயகர் வீரபாகு தேவர் உற்சவம் 

தருமமிகு சென்னையின் மேற்கு சைதாப்பேட்டையில் வள்ளி நாயகி தெய்வ நாயகி உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மகப் பெருவிழா வெகு சிறப்பாக எப்போதும்  போல  சிறப்பாக நேற்று(15-02-2013) தொடங்கி நடைபெறுகின்றது. இப்பிரம்மோற்சவத்திம் அழகன் முருகனுக்கு செய்யப்படும் அலங்காரத்தை காணவே வருடா வருடம் இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் அநேகம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிரம்மோற்சவத்தின் சில அழகு காட்சிகளை தங்களுடன் பகிர்ந்து  கொள்ளவே இப்பதிவுகள் . 



அக்குறமகளுடன் அச்சிறு முருகனை 
அக்கணம் மணமருள்  பெருமாளின் 
அற்புத அலங்காரம்





பிரம்மோற்சவ விழாவின் பூர்வாங்கமாக விநாயகர் மற்றும் வீரபாகுத் தேவர் திருவிழா, கொடியும் ஊர்வலம் வருகின்றது.  இத்திருக்ககோவிலின் ம்லர் அலங்கரம், நகை  அலங்காரம் மற்றும் அந்தந்த நாளுக்கான வாகனத்திற்கு ஏற்றார்ப்போல முருகருக்கு அலங்காரம் எல்லாமே மிகவும் சிறப்பு . அவற்றை ஒவ்வொன்றாக காண வாருங்கள் அன்பர்களே.    


முழு முதற் கடவுள் விநாயகர்





நவவீரர்களின் முதல்வன்
திருமுருகனின் தூதன்
வீரபாகுத்தேவர்

2 comments:

Test said...

நன்றி ஐயா

S.Muruganandam said...

அழகன் முருகனின் அற்புத அலங்காரங்களைக் காண தொடர்ந்து வாருங்கள் LOGAN ஐயா.