Tuesday, November 8, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -8

சிவமயம்
திருசிற்றம்பலம்

நுங்கம்பாக்கம், சென்னை , எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் காட்சிகளை இப்பதிவில் கண்டு களிக்க உள்ளீர்கள். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு மிகவும் முக்கியமான நாள் ஆகும் ஏனென்றால் அன்று சிவபெருமான் தனக்குரிய தர்ம தேவதையாம் வெள் விடை வாகனத்தில்( வெள்ளை ரிஷப வாகனத்தில்) எழுந்தருளி சம்பவீ தீக்ஷை அருளுகின்றார். மற்ற மூர்த்திகளும் தங்களுடைய வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறனர். எனவே அன்ரைய தினம் அலங்காரம் மிகவும் சிறப்பாக செய்யப்படுகின்றது அந்த் அழகை கண்டு அருள் பெறுங்கள்.


வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர்

இத்திருக்கோவிலில் ஐந்தாம் திருநாள் காலையிலும் ரிஷப வாகனம்தான் ஆமாம் சிறப்பாக வெள்ளி ரிஷப வாகனம். அக்காட்சிகளை முதலில் காண்கின்றீர்கள்.



சந்திரசேகரர் பின்னழகு


இத்திருக்கோவிலில் சுக்கிரவார அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உள்புறப்பாடு செய்யும் பொருட்டு வெள்ளித் திருத்தேர் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரும்பும் அன்பர்கள் இத்திருப்பணியில் கலந்து கொள்ளலாம்.

இத்திருக்கொயில் சார்பாக ஒரு திருமண மண்டபம் உள்ளது . விரும்பும் அன்பர்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இனி தாங்கள் காண இருப்பது ஐந்தாம் திருநாளின் இரவு அலங்கார காட்சிகள்.

விக்னங்களை நீக்கும் விநாயகர்
சிறப்பு அலங்காரம்







சிறப்பு அலங்காரத்தில் அகத்தீஸ்வரர்



செங்கோல் தாங்கி ஜகன்னாதனாக காட்சி தரும் அருட்கோலம்




சோமாஸ்கந்தர் முழு அலங்காரம்


அன்னை அகிலாண்டீஸ்வரி சிறப்பு அலங்காரம்



அழகன் முருகன் சிறப்பு அலங்காரம்


சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரம்

அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

Monday, November 7, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -7

அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலய தக்ஷிணாயண பிரம்மோற்சவ புண்ய கால பிரம்மோற்சவ பெருவிழாவின் நான்காம் நாள் காலை சந்திரசேகரர் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் பவனியில் ஐயனும் அம்மையும் நாக வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அந்த அற்புத காட்சிகளை இப்பதிவில் காணுங்கள் அன்பர்களே.


கணேசர்

இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் ஆன்மீக நிகழ்வுகளைப் பற்றி காண்போமா?

தினமும் உச்சிக் கால பூஜைக்குப்பின் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.

பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகளுக்கு இலவச ஆன்மீக வகுப்பு நடத்தபப்டுகின்றது.

பிரதி வெள்ளிக்கிழமை இரவு திருவாசகம் தொடர் சொற்பொழிவு முனைவர் திரு. அரங்க. இராமலிங்கம் அவர்களால் நடத்தப்படுகின்றது.


நாக வாகனத்தில் சோமாஸ்கந்தர்

ஐயனின் ஜடாமுடியில் இருந்து ஓடி வரும் கங்கை நதியின் பிரவாகத்தை கண்டீர்களா?





நாகவாகனத்தில் பத்மாசனியாக அகிலாண்டேஸ்வரி





முருகப்பெருமான்

சண்டிகேஸ்வரர்

சோமாஸ்கந்தர் ஓவியம்

அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

Thursday, November 3, 2011

கந்தர் சஷ்டி 2011

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து பார்வதியால் ஒன்றாக இணைக்கப்பட்டு சூரர் குலத்தை கருவறுத்த அந்த பால் மணம் மாறா குமரன் முருகனின் கந்த சஷ்டி விழாவில் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற விழாக்களின் ஒரு சிறு தொகுப்பே இப்பதிவு. கண்டு முருகன் அருள் பெறுங்கள். முருகன் அருள் முன் நிற்கும்.

கந்த கோட்டம், பாரி முனை சென்னை

பராசக்தியிடம் வேல் வாங்கும் கோலம்

சிக்கலிலே அன்னை நெடுவேல் கண்ணியிடம் சிங்கார வேலவன் வேல் வாங்கியவுடன் இன்றும் அவருக்கு வியர்க்குமாம். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூர சம்ஹாரம் செய்வதாக ஐதீகம்.

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.



மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்

மநோஹாரிதேஹம் மஹச்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்
மஹாதேவபாலம் பஜே லோக பாலம்

மயில் வாகனத்தில் ஏறியவரும், மஹா வாக்கியத்தின் உட்பொருளானவரும், அழகு வாய்ந்த தேகமுள்ளவரும், மகான்களின் மனதை வீடாகக் கொண்ட குஹனும், பூதேவர்களான வேத வித்துக்களால் உபாஸிக்கப்படுகின்றவரும், உபநிஷத்துக்களின் பொருளும், பரமசிவனின் புத்திரனும், உலகங்களைக் காப்பவருமான தங்களை( திருச்செந்தூர் முருகனை) பூஜிக்கின்றேன்.

(சுப்பிரமணிய புஜங்கம் என்னும் 33 பாடல்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை ஆதி சங்கர பகவத்பாதாள் திருச்செந்தூரிலே பாடியருளினார். எல்லா மத தலைவர்களுக்கும் தங்கள் காலத்திலே எதிர்ப்பு இருந்தது போல ஆதி சங்கரருக்கும் இருந்தது. அதன் பயனாய் அவருக்கு தீராத வயிற்று வலி வந்தது அவர் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அவரது கனவில் தோன்றினார். "திருச்செந்தூர் செந்திலாண்டவனைத் தரிசித்தால் உன் நோய் தீரும்'' என்று அருள் புரிந்தார்.இத்தலத்தில் இந்த ஸ்தோத்திரம் பாட அந்த நோய் நீங்கியது. செந்திலாண்டவனை தரிசித்தார், மனமுருக வேண்டினார் சங்கரர்! அந்த தரிசனத்தின் போது முருகன் திருவடிகளில் ஆதிசேஷன் பூஜித்துக் கொண்டிருந்த அற்புதக் காட்சியைக் கண்டார் சங்கரர்! புஜங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு வளைந்து வளைந்து நகரும் பாம்பு என்று பொருள். பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல பாடப்பட்டுள்ளதால் இந்த ஸ்தோத்திரம் சுப்பிரமணிய புஜங்கம் ஆயிற்று. இந்த சுலோகங்களை தினசரி பாராயணம் செய்வோரை நோய், நொடி, வலிப்பு, பூத பைசாசங்கள் நெருங்காது! தீராத நோயெல்லாம் தீர்த்து வைப்பான் செந்திலாண்டவன். )


செங்குந்தக் கோட்டம் , சைதாப்பேட்டை, சென்னை

சிவ சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரம் செய்ய புறப்படும் அற்புதக் கோலம்






காரணீஸ்வரம், சைதாப்பேட்டை, சென்னை

சிவ சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரம் செய்ய புறப்படும் அற்புதக் கோலம்




ஆறிருதடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க; வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க; செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் னணங்கு வாழ்க;
மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீரடியா ரெல்லாம்.




வீரபாகுத்தேவர்

இராமாயணத்தில் அநுமன் போல ஸ்கந்த புராணத்தில் வீரபாகுத் தேவர். நவ வீரர்களில் மூத்தவர். பல திருக்கோவில்களில் முருகனைப் போலவே ஆட்டுக்கிடா வாகனத்தில் உலா வருபவர்.



சூரனுக்கு பெருவாழ்வளித்த வள்ளல் முருகப்பெருமான்.

(சூர சம்ஹாரத்திற்கு பிறகு மயில் வாகனம், சேவல் கொடி கொண்டு காட்சி தருகிறார் முருகர் )

சூரபத்மன் ஆணவ மலம், அவன் தம்பி சிங்கமுகாசுரன் கன்ம மலம், தாரகாசுரன் மாயா மலம், முருகன் தனது தாய் கொடுத்த அந்த சக்தி வேலால், ஞான வேலால் இந்த மூன்று மலங்களையும் தூய்மைப்படுத்துவதே சூர சம்ஹாரம். சூரனுக்கு அழிவில்லை அவம் சேவலாகக் முருகனுக்கு கொடியாகவும், மயிலாக அழகனுக்கு வாகனமாகவும் ஆகின்றான். இதுவே கந்தன் கருணை.




திருமயிலையில் சூரனுக்கு பெருவாழ்வளிக்க
தேரில் புறப்படும் சிங்கார வேலவர்

இவ்வாலயத்தில் சூரசம்ஹாரத்தின் போதும் முருகப்பெருமான் தன் தேவியருடன் எழுந்தருளுகின்றார், சம்ஹாரம் முடிந்தவுடன் மயில் வாகனத்திற்கு மாறி விடுகிறார், மறுநாள் திருக்கல்யாணம் முடிந்து ஐராவதத்தில் வலம் வருகிறார்.


தேரில் சிங்காரவேலவர் தேவியருடன்

இத்திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் முருகன் ஆறு முகத்துடனும், பன்னிரு கரத்துடனும் மயில் மேல் ஒயிலாக அமர்ந்திருக்கும் அழகையும், தேவியர் இருவரும் ஐராவத்தின் மேல் ஒரு காலை மடித்து மறு காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் எழிலையும் தரிசனம் செய்ய முடியும். ( வேறு எக்கோவிலிலும், தேவியர் இது மாதிரி தேவியர் அமர்ந்த கோலத்தில் தரிசனம் செய்த்தில்லை, நின்ற கோலத்தில்தான் இருப்பர்)

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவாயு யிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.




மாயையினால் பல்வேறு வடிவம் எடுத்து போர் புரிந்தும் வெற்றி பெற முடியாமல் முடிவில் சூரம் லக்ஷம் யோஜனை கொண்ட எஃகு மாமரமாக திருச்செந்தூர் கடலில் நின்றான்.


எஃகு மாமரம்

முருகன் ஞானவேலால் அம்மாமரத்தை சேவலும் மயிலுமாக மாற்றி சூரனுக்கு பெரு வாழ்வு அளித்து கருணை புரிந்தார். எனவே தான் முருகன் கொக்கறுத்த ( மாமரம் பிளந்த ) கோமான். அவன் பெயரை தினமும் நினையுங்கள் என்று அத்காலையில் சேவல் கொக்கரக்கோ, கொக்கரக்கோ என்று கூவி நமக்கு உணர்த்துகின்றது .


குக்குடமே கூவுவாய்
கொக்கறுத்த கோமானை
கொக்கரக்கோ வென்று
குக்குடமே நீ கூவுவாய்



சூரனுக்கு பெருவாழ்வளித்து மயிலாக மாறிய
அவன் மேல் சேவற் கொடியுடன்முருகன் அருட்பவனி வரும் கோலம்


குமாரேஶ ஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா-பதே
ஶக்திபாணே மயூராதிரூட |
புலிந்தாத்மஜா காந்த பக்தார்தி ஹாரிந்! ப்ரபோ!
தாரகாரே! ஸதா ரக்ஷ மாம் த்வம் ||

என்றும் இளையோய்! ஈசன் தன் திருமகனே! குகனே! கந்தவேளே! அமரர் சேனாபதியே! சக்தி வேல் முருகா! வண்ணமயில் வாகனனே! ஒய்யாய வள்ளிக் மணாளா! (தெய்வயானை லோலா) அடியார் துயர்கள் நீக்குபவா! சமரில் தாரகனைக் கொன்றவனே! சரவண பவனே! உம்மைப் பணிந்தோம் எமை காத்திடுவாய்!

வெற்றி வேல் முருகனுக்கு ஹரஹரோ ஹரா
ஞான தண்டாயுத பாணிக்கு ஹரஹரோ ஹரா

Wednesday, November 2, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 10

இந்த 2011ம் ஆண்டின் நவராத்திரி அலங்கார நிறைவுப்பதிவாக நாம் பார்க்கப் போவது விரை மலர் குழல் வல்லி, மரை மலர் பதவல்லி விமலி திருமயிலை கற்பகவல்லியின் மஹேஸ்வரி திருக்கோல கொலு ஆகும்.





நவதானிய கோலத்தில் நவ கிரகங்கள்



( ஊஞ்சல் மண்டபம்)




எல்லா விழாக்களுமே வெகு சிறப்பாகத்தான் கொண்டாடப்படுகின்றது திருமயிலையில். ஆகவே தான் என்பாக இருந்த அங்கம் பூம்பாவையை எழுப்ப அன்னையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப் பிள்ளையாம் ஞானசம்பந்தப்பெருமான் பதிகம்பாடியபோது ஒவ்வோரு பதிகத்திலும் ஒவ்வொரு விழாவைக்கூறி காணாமல் போதியோ பூம்பாவாய்! என்று பாடி பெண்ணாக்கினார். அவ்வளவு சிறப்பு இன்றும் ஒவ்வொரு விழாவிலும் கயிலையே மயிலையான திருமயிலையில் உள்ளது . இப்பதிவில் நவராத்திரி விழாவின் முழு கோலகலத்தையும் காண்கின்றிர்கள் அன்பர்களே.






மையமாக சூரியன்





ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலைக் காட்சி நாள் தோறும் திருக்கயிலை நாதருக்கு ஒவ்வொரு விதமான கோலம். இன்றைய தினக்கோலம். நவதானியக் கோலம். கோளறு பதிகத்தில் காழி சம்பந்தர் பாடியது போல ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளீ சனி பாம்பிரண்டுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல என்றபடி நவகிரங்கள் ஒன்பதும் ஐயனை வணங்கும் காட்சியை கான்கின்றீர்கள்.








மயிலாப்பூர் ஐதீகம்



(கொலு மண்டபம்)





முக்கிய கொலு கொலு மண்டபத்தில்,வேண்டும் வரம் அருளும் கற்பகவல்லி அன்னை நாளும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் கொலுக்காட்சி அருலூகின்றாள். அன்னையுடன் லக்ஷ்மியும், சரஸ்வதியும் உடன் கொலு இருக்கின்றனர். அம்மண்டபத்தில் , மயிலாப்பூர் ஐதீகமான , மலையரசன் பொற்பாவை பார்வதி தேவி மயில் உருவில் புன்னை மரத்தடியில் சிவ பூஜை செய்யும் காட்சி.








பொம்மைக்கொலு



(முன் மண்டபத்தில்)





ஐயனின் முன் மண்டபத்தில் பொம்மைக்கொலு அந்த அற்புத பொம்மைக்கொலுவில் திருமயிலாப்பூர் ஐதீகம் பொம்மையாக இடம் பெற்றுள்ள காட்சி,





மலைமகள் கற்பகத்துடன் கொலுவிருக்கும்




செல்வம் வழங்கும் அலைமகள்










கூடவே கல்வி அருளும் கலை மகள்

நவராத்திரி சமயத்தில் திருமயிலையில் வந்து தரிசிக்க கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் நாம் பெறலாம்.





திருநாளைப்போவார்நாயனார் வரலாறு

(முன் மண்டபத்தில்)





முன்மண்டபத்திலேயே தினமும் ஒரு நாயன்மார் வரலாறு சித்தரிக்கப்படுகின்றது. இன்றைய தினம் திருநாளைப் போவார் வரலாறு. திருப்புன்கூரிலே திருநாளைப் போவாருக்காக நந்தி விலகிய காட்சி .







நகரும் நந்தி





நந்தி விலகும் வண்ணம் அற்புதமாக மோட்டர் வைத்து அமைத்திருந்தனர். ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கம் நந்தி நகருன் வண்ணம் அமைத்திருந்தது அருமையாக இருந்தது.





மாஹேஸ்வரியாக கற்பகவல்லி








ஐயனைப் போலவே மானும் மழுவும் ஏந்தி, ஐயனுக்குரிய ரிஷப வாகனத்தில் சுகாசனத்தில் எழிலாக சர்வாபரண பூஷிதையாக, சகல செல்வங்களும் தரும் இமய கிரிராஜ தனயை , எழிலாக மாஹேஸ்வரியாக கொலு விற்றிருந்து அருளும் அற்புத காட்சி.





அன்னையின் முக அழகு










அன்னைக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை தொடர்ச்சியாக நதைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கொலு மண்டபத்திலும் யாளி முதலிய பல்வேறு அலங்காரங்கள். மண்டபத்தில் முன்னே பல்வேறு தூண்களில் பொம்மைகள் மற்று பல்வேறு கோணங்களில் அம்மனின் தரிசனம் பெற கண்ணாடிகள் அமைத்துள்ளனர்.






அன்னையின் பின்னழகு


( எத்தனை சடைகள் அன்னைக்கு)





வெள்ளீஸ்வரம் காமாக்ஷி அம்மன்


மாஹேஸ்வரி அலங்காரக்கொலு


மானும் மழுவும் இத்திருக்கோவிலில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதை கவனித்தீர்களா?அன்பர்களே.








இத்திருக்கோவில் திருமயிலை தெற்கு மாடவீதியில் அமைந்துள்ளது. திருமயிலையைப்போலவே மலைமகள், அலைமகள், கலைமகள் கொலு, திருக்கயிலைக் காட்சி என்று சிறப்பாக இக்கோவிலிலும் நவராத்திரி கொலு கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.



கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!



Youtubeல் பதிவேற்றிய அன்பர் rmsundaram1948 அவர்களுக்கு மிக்க நன்றி.

Tuesday, November 1, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 9

நவராத்திரி விழாவானது நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ் நாட்டில் வீட்டில் கொலு, கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம். சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என்றால் கர்நாடகத்தில் இதுவே அன்னை சாமுண்டீஸ்வரியின் தசரா விழா, குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவில் கர்பா என்னும் நடனமாடி அன்னையை வழிபடுகின்றனர். வடநாட்டில் அம்மன் ஆலயங்களில் ஒன்பது நாட்களும் நவதுர்க்கை வழிபாடி மற்றும் இராமர் இராவணனை வென்ற ராம்லீலா, விஜய தசமியன்று, இராவணன், கும்பகர்ணன், மேகநாதன்( இந்திரஜித்) மூவரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன . இதுவே கிழக்குப் பகுதிகளான வங்காளம், அஸ்ஸாமில் துர்கா பூஜாவாக கொண்டாடப்படுகின்றது.

சஷ்டி நாள் தொடங்கி துர்கை அம்மனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று நாட்கள் சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு விஜய தசமியன்று, அம்மன் சிலைகள் ஆற்றீல் கரைக்கப்படுகின்றன. மலைமகள் அன்னை பார்வதி திருக்கயிலாயம் விட்டு தனது பிறந்த வீடாண இமயமலைக்கு( பூலோகத்திற்கு) தனது குமாரர்களான கணேசன் மற்றும் கார்த்திகேயன், மகள்களான லக்ஷ்மி, சரஸ்வதியுடன் தாய் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். கல்யாணம் செய்து புக்ககம் சென்ற மகள் தாய் வீட்டிற்கு வந்தாள் எப்படி நாம் சீர் செய்வோமோ அதுபோல இங்கே துர்க்கைகு பூஜைகள் நடைபெறுகின்றது.

இப்படங்கள் எல்லாம் மும்பை மாநகரில் இந்த வருடம் நடைபெற்ற துர்காபூஜையின் படங்கள், இதை அனுப்பியவர் அடியேனுடன் பணிபுரியும் திரு. அலோக் குமார் ராய் கர்மாகர் அவர்கள். அன்னையின் அற்புத தரிசனம் கண்டு களியுங்கள்.






சாந்தாகுரூஸ்










லோகன்ட்வாலா






ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பந்தல் மற்றும் அன்னைக்கு சிறப்பு அலங்காரம் பாருங்கள்.






பூனம் நகர்







இமயகிரிராச தனயை, பார்வதி, மலைமகள், வரை மகள், சைல சுதா, இமவான் புத்ரி, பர்வதவர்த்தினி, மலை வளர் காதலி உமை, கிரி கன்யா, கிரிஜா, பர்வதபுத்ரி, இமயத்தன்றும் பிறந்தவள் அன்னை துர்க்கைக்கு செய்திருக்கும் அலங்காரத்தின் பிரம்மாண்டத்தைப் பாருங்கள்.







பொவாய்








அன்னைக்கு இமவான் வழங்கிய சிங்கம், மகிடனை சுற்றியுள்ள பாம்பு, அன்னையின் மகள்களான சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி ஆகியோரை சாந்தாகுரூஸ் பந்தலின் இப்படத்தில் தெளிவாக்க் காணலாம். வேண்டுமென்றால் பெரிதாக்கிப் பாருங்கள்.












உத்யான்



கோகுல்தாம்





கணேசர், லக்ஷ்மி, துர்க்கா, சரஸ்வதி மற்றும் கார்த்திகேயன் மூஞ்சுறு, ஆந்தை, சிம்மம், அன்னம், மயில் வாகனங்களுடன்.




சிவாஜி பார்க் – தாதர்






அன்னை திருக்கயிலாயத்திலிருந்து வருவதால் சிவபெருமான் இங்கே சிறிதாக மேலே காட்டப்பட்டுள்ளார். பூர்ண கும்பத்தில் தேங்காயை அப்படியே உரிக்காமல் வைத்திருப்பதையும் கவனியுங்கள். கார்த்திகேயனின் (முருகன்) ஆயுதமாக வில், அம்பு ( வேல் அல்ல ) உள்ளதையும் கவனியுங்கள். வாழை மரமாக தாங்கள் பார்ப்பது கணேசனின் மனைவி அபராஜிதா, விஜயதசமியன்று அபராஜிதாவிற்கு சிறப்பு பூஜை நடைபெறும்.


அபிராமி பட்டர் அருளிய





அபிராமி பதிகம்

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச
தனயை மாதேவி நின்னைச்

சத்தியமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்

அகில மதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை

அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய்

சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி திரி
சூலி! மங்கள விசாலி!

மகவுநான் நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை
வளைதிருக் கடவூரில் வாழ்

வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே!




அம்மன் அருள் வளரும் .........