Showing posts with label கந்தகோட்டம். Show all posts
Showing posts with label கந்தகோட்டம். Show all posts

Thursday, November 3, 2011

கந்தர் சஷ்டி 2011

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து பார்வதியால் ஒன்றாக இணைக்கப்பட்டு சூரர் குலத்தை கருவறுத்த அந்த பால் மணம் மாறா குமரன் முருகனின் கந்த சஷ்டி விழாவில் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற விழாக்களின் ஒரு சிறு தொகுப்பே இப்பதிவு. கண்டு முருகன் அருள் பெறுங்கள். முருகன் அருள் முன் நிற்கும்.

கந்த கோட்டம், பாரி முனை சென்னை

பராசக்தியிடம் வேல் வாங்கும் கோலம்

சிக்கலிலே அன்னை நெடுவேல் கண்ணியிடம் சிங்கார வேலவன் வேல் வாங்கியவுடன் இன்றும் அவருக்கு வியர்க்குமாம். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூர சம்ஹாரம் செய்வதாக ஐதீகம்.

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.



மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்

மநோஹாரிதேஹம் மஹச்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்
மஹாதேவபாலம் பஜே லோக பாலம்

மயில் வாகனத்தில் ஏறியவரும், மஹா வாக்கியத்தின் உட்பொருளானவரும், அழகு வாய்ந்த தேகமுள்ளவரும், மகான்களின் மனதை வீடாகக் கொண்ட குஹனும், பூதேவர்களான வேத வித்துக்களால் உபாஸிக்கப்படுகின்றவரும், உபநிஷத்துக்களின் பொருளும், பரமசிவனின் புத்திரனும், உலகங்களைக் காப்பவருமான தங்களை( திருச்செந்தூர் முருகனை) பூஜிக்கின்றேன்.

(சுப்பிரமணிய புஜங்கம் என்னும் 33 பாடல்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை ஆதி சங்கர பகவத்பாதாள் திருச்செந்தூரிலே பாடியருளினார். எல்லா மத தலைவர்களுக்கும் தங்கள் காலத்திலே எதிர்ப்பு இருந்தது போல ஆதி சங்கரருக்கும் இருந்தது. அதன் பயனாய் அவருக்கு தீராத வயிற்று வலி வந்தது அவர் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அவரது கனவில் தோன்றினார். "திருச்செந்தூர் செந்திலாண்டவனைத் தரிசித்தால் உன் நோய் தீரும்'' என்று அருள் புரிந்தார்.இத்தலத்தில் இந்த ஸ்தோத்திரம் பாட அந்த நோய் நீங்கியது. செந்திலாண்டவனை தரிசித்தார், மனமுருக வேண்டினார் சங்கரர்! அந்த தரிசனத்தின் போது முருகன் திருவடிகளில் ஆதிசேஷன் பூஜித்துக் கொண்டிருந்த அற்புதக் காட்சியைக் கண்டார் சங்கரர்! புஜங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு வளைந்து வளைந்து நகரும் பாம்பு என்று பொருள். பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல பாடப்பட்டுள்ளதால் இந்த ஸ்தோத்திரம் சுப்பிரமணிய புஜங்கம் ஆயிற்று. இந்த சுலோகங்களை தினசரி பாராயணம் செய்வோரை நோய், நொடி, வலிப்பு, பூத பைசாசங்கள் நெருங்காது! தீராத நோயெல்லாம் தீர்த்து வைப்பான் செந்திலாண்டவன். )


செங்குந்தக் கோட்டம் , சைதாப்பேட்டை, சென்னை

சிவ சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரம் செய்ய புறப்படும் அற்புதக் கோலம்






காரணீஸ்வரம், சைதாப்பேட்டை, சென்னை

சிவ சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரம் செய்ய புறப்படும் அற்புதக் கோலம்




ஆறிருதடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க; வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க; செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் னணங்கு வாழ்க;
மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீரடியா ரெல்லாம்.




வீரபாகுத்தேவர்

இராமாயணத்தில் அநுமன் போல ஸ்கந்த புராணத்தில் வீரபாகுத் தேவர். நவ வீரர்களில் மூத்தவர். பல திருக்கோவில்களில் முருகனைப் போலவே ஆட்டுக்கிடா வாகனத்தில் உலா வருபவர்.



சூரனுக்கு பெருவாழ்வளித்த வள்ளல் முருகப்பெருமான்.

(சூர சம்ஹாரத்திற்கு பிறகு மயில் வாகனம், சேவல் கொடி கொண்டு காட்சி தருகிறார் முருகர் )

சூரபத்மன் ஆணவ மலம், அவன் தம்பி சிங்கமுகாசுரன் கன்ம மலம், தாரகாசுரன் மாயா மலம், முருகன் தனது தாய் கொடுத்த அந்த சக்தி வேலால், ஞான வேலால் இந்த மூன்று மலங்களையும் தூய்மைப்படுத்துவதே சூர சம்ஹாரம். சூரனுக்கு அழிவில்லை அவம் சேவலாகக் முருகனுக்கு கொடியாகவும், மயிலாக அழகனுக்கு வாகனமாகவும் ஆகின்றான். இதுவே கந்தன் கருணை.




திருமயிலையில் சூரனுக்கு பெருவாழ்வளிக்க
தேரில் புறப்படும் சிங்கார வேலவர்

இவ்வாலயத்தில் சூரசம்ஹாரத்தின் போதும் முருகப்பெருமான் தன் தேவியருடன் எழுந்தருளுகின்றார், சம்ஹாரம் முடிந்தவுடன் மயில் வாகனத்திற்கு மாறி விடுகிறார், மறுநாள் திருக்கல்யாணம் முடிந்து ஐராவதத்தில் வலம் வருகிறார்.


தேரில் சிங்காரவேலவர் தேவியருடன்

இத்திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் முருகன் ஆறு முகத்துடனும், பன்னிரு கரத்துடனும் மயில் மேல் ஒயிலாக அமர்ந்திருக்கும் அழகையும், தேவியர் இருவரும் ஐராவத்தின் மேல் ஒரு காலை மடித்து மறு காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் எழிலையும் தரிசனம் செய்ய முடியும். ( வேறு எக்கோவிலிலும், தேவியர் இது மாதிரி தேவியர் அமர்ந்த கோலத்தில் தரிசனம் செய்த்தில்லை, நின்ற கோலத்தில்தான் இருப்பர்)

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவாயு யிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.




மாயையினால் பல்வேறு வடிவம் எடுத்து போர் புரிந்தும் வெற்றி பெற முடியாமல் முடிவில் சூரம் லக்ஷம் யோஜனை கொண்ட எஃகு மாமரமாக திருச்செந்தூர் கடலில் நின்றான்.


எஃகு மாமரம்

முருகன் ஞானவேலால் அம்மாமரத்தை சேவலும் மயிலுமாக மாற்றி சூரனுக்கு பெரு வாழ்வு அளித்து கருணை புரிந்தார். எனவே தான் முருகன் கொக்கறுத்த ( மாமரம் பிளந்த ) கோமான். அவன் பெயரை தினமும் நினையுங்கள் என்று அத்காலையில் சேவல் கொக்கரக்கோ, கொக்கரக்கோ என்று கூவி நமக்கு உணர்த்துகின்றது .


குக்குடமே கூவுவாய்
கொக்கறுத்த கோமானை
கொக்கரக்கோ வென்று
குக்குடமே நீ கூவுவாய்



சூரனுக்கு பெருவாழ்வளித்து மயிலாக மாறிய
அவன் மேல் சேவற் கொடியுடன்முருகன் அருட்பவனி வரும் கோலம்


குமாரேஶ ஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா-பதே
ஶக்திபாணே மயூராதிரூட |
புலிந்தாத்மஜா காந்த பக்தார்தி ஹாரிந்! ப்ரபோ!
தாரகாரே! ஸதா ரக்ஷ மாம் த்வம் ||

என்றும் இளையோய்! ஈசன் தன் திருமகனே! குகனே! கந்தவேளே! அமரர் சேனாபதியே! சக்தி வேல் முருகா! வண்ணமயில் வாகனனே! ஒய்யாய வள்ளிக் மணாளா! (தெய்வயானை லோலா) அடியார் துயர்கள் நீக்குபவா! சமரில் தாரகனைக் கொன்றவனே! சரவண பவனே! உம்மைப் பணிந்தோம் எமை காத்திடுவாய்!

வெற்றி வேல் முருகனுக்கு ஹரஹரோ ஹரா
ஞான தண்டாயுத பாணிக்கு ஹரஹரோ ஹரா

Thursday, October 23, 2008

கந்தன் கருணை -1

"சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் ", இது அனைவரும் அறிந்த பழமொழி இதன் உண்மையான விளக்கம் - ஸ்ரீ கந்தர் சஷ்டியில் அழகன் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கருப்பையில் (அகப்பையில்) குழந்தை தோன்றும். ஆம குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறந்த உபாயம்

"கந்தர் சஷ்டி விரதம்" .






மூவிரு முகங்கள் போற்றி


முகம் பொழி கருணை போற்றி


ஏவரும் துதிக்க நின்ற


ஈராறு தோள் போற்றி


காஞ்சி மாவடி வைகும்


செவ்வேள் மலரடி போற்றி


அன்னான் சேவலும் மயிலும்


போற்றி; திருக்கை வேல்


போற்றி; போற்றி
என்றபடி நாம் அனைவரும் உய்ய கருணை பொழியும் கநத வேளின் கந்தர் சஷ்டி புனித நாட்களில் அவரது அற்புத திருக்கோலங்கள், (பல் வேறு ஆலயங்களில் பதியப்பட்டவை) கண்டு அவரின் கருணை மழைக்கு பாத்திரமாகுங்கள் அன்பர்களே.




சென்னை கந்தசுவாமி கோவிலென்று அழைக்கப்படும் முத்துகுமார சுவாமி தேவஸ்தானம்
முத்துக்குமார சுவாமி சர்வ அலங்காரத்தில்


















திருச்செந்தூரில் போர் புரிந்து சினம் எல்லாம் தீர்ந்த கந்தன் அலங்காரம்



















ஜெயந்தி நாதர்











அருணகிரிநாதர் பாடிய



திருமயிலை சிங்கார வேலவர்











திருமுருகனுடன் பவனி வரும் வீரபாகு தேவர்



சண்டிகேஸ்வரர்


கந்தர் சஷ்டி நாளில் திருமயிலையில் கொடியேற்றத்துடன் விழா சிறப்பாக நடைபெறுகின்றது, தினமும் மாலை சண்டிகேஸ்வரர், வீரபாகு தேவருடன் புறப்பாடு சூர சம்ஹாரம், ஒரு நாள் ஏக தின லட்சார்ச்சனை, திருக்கல்யாணம், பின் யானை வாகனப்புறப்பாடு (மயில் அல்ல , தேவ யாணைக்கு இந்திரன் சீதனமாக அளித்த ஐராவதம் என்பது ஐதீகம், கருவறையில் தேவியர் இருவரும் யாணை மீது அமர்ந்த கோலத்தில்தான் திருக்காட்சி அளிக்கின்றனர். சிங்கார வேலவர் ஆறு திருமுகங்கள் பன்னிரு கரங்களுடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார் ) என கோலாகலமாக கந்தர் சஷ்டி உற்சவம் நடைபெறுகின்றது திருமயிலையில் சிங்கார வேலவருக்கு.





சென்னை சைதை செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணியசுவாமி







முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யவில்லை, அவனது அஞ்ஞானத்தை அகற்றி அவனுக்கு வாழ்வளித்தார். அவன் ஆணவம் அகன்றவுடன் மயிலாகவும் சேவலாகவும் மாறினான், மயில் முருகருக்கு வாகனம் ஆனது சேவல் அவரது கொடியானது எனவேதான் கந்தப்பெருமான் கருணைக்கடல் எனப்படுகின்றார்.










கருணை மழை பொழியும் கந்த வேள் தங்க மயில் வாகனத்தில் பவனி வரும் கண்கொள்ளாக் காட்சி.




சித்தி சுந்தரி கௌரி அம்பிகை க்ருபாநிதி
சிதம்பரி சுதந்தரி பர

சிற்பரி சுமங்கலி நிதம்பரி விடம்பரி
சிலாகத விலாச விமலி

குத்து திரிசூலி திரிகோணத்தி ஷட்கோண
குமரி கங்காளி ருத்ரி

குலிச வோங்காரி ரீங்காரி யாங்காரி யூங்
காரி ரீங்காரி யம்மா

முத்தி காந்தாமணி முக்குண துரந்தரி
மூவர்க்கும் முதல்வி ஞான


முதுமறைக்கலைவாணி அற்புத புராதனி
மூவுலகும் ஆன சோதி

சக்தி சங்கரி நீலி கமலை பார்வதி தரும்
சரஹணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினாரைக் குத்தி எதிர்
ஆடிவரும் சத்ரு சங்கார வேலே.

வேலும் மயிலும் துணை.
கந்தன் கருணை தொடரும்.............