Wednesday, August 3, 2016

நானேயோ தவம் செய்தேன் -7

திருமண வரம்அருளும்ஸ்ரீநிவாசமங்காபுரம்

கல்யாண வெங்கடேஸ்வரர்


இராஜ கோபுரம் 

திருப்பதிக்கு வரும் பலருக்கு,  பத்மாவதித் தாயார்அருளும்அலமேலுமங்காபுரம்பற்றித்தெரிந்த அளவிற்கு, அவர்பத்மாவதித்தாயாரை திருமணம்புரிந்த பின்திருமலை செல்வதற்கு முன் தங்கிய ஸ்ரீநிவாசமங்காபுரம்குறித்து சரியாகத்தெரிவதில்லை. இந்தக்கோயிலின்மகத்துவம்அறிந்த வெகு சிலரே, மாறாத இளமைக்கோலத்தில்காட்சிதரும்ஸ்ரீகல்யாணவேங்கடேஸ்வரரைதரிசிக்கும்பாக்கியம்பெறுகின்றனர். திருமலையில்கிடைக்காத பெருமாளின்பாததரிசனம், இங்கே கிடைக்கிறது!


திருப்பதி- மதனப்பள்ளி சாலையில்சுமார் 19 கி.மீ. தொலைவில்உள்ளது ஸ்ரீநிவாசமங்காபுரம்.ஆதியில்அகத்தியமுனிவர்இங்கேஆஸ்ரமம்அமைத்து தங்கி இருந்தார். பத்மாவதித்தாயாரை மணம்முடித்த பெருமாள், புதுமணத்தம்பதிகள் மலையேறக்கூடாது என்ற சம்பிரதாயத்துக்கு இணங்க, அகத்தியரின்வேண்டுகோளை ஏற்று, ஆறு மாத காலம்இந்தத்தலத்தில்தங்கி இருந்தாராம். பிறகு பெருமாள், 'ஸ்ரீவாரிமெட்டு' என்ற பாதை வழியாக திருமலைக்குச்சென்றார்.

புஷ்கரணி

ஸ்ரீநிவாசமங்காபுரத்தில்தான்... ஸ்ரீபத்மாவதி தாயாரை மணம்முடிக்க, தன்னைச்சுற்றிலும்புற்று வளரும்அளவிற்கு கடுந்தவம்புரிந்தாராம்பெருமாள்! கோயில்வளாகத்தில்இன்றும்புற்றுகள்பல உள்ளன.பெருமாள், புற்றின்அடியில்தோன்றியதால், கோபுரத்தில்விமானஸ்ரீநிவாசர்இல்லை.
மாசி மாதத்தில்வருடாந்திர பிரம்மோத்ஸவம், பக்தர்கள்பிரார்த்தித்துக்கொண்டு நடத்திவைக்கும்கல்யாணஉற்ஸவம்தவிர, இன்னொரு விழாவும்இந்தக்கோயிலில்பிரசித்தம் 'சாக்ஷத்காரம்' என்று கொண்டாடப்படும்அந்தவிழாஏற்பட்டகதைசுவாரஸ்யமானது.


 காஞ்சிபுரத்தைச்சேர்ந்த நடுத்தர மாத்வா குடும்பத்தில்பிறந்தவர்சுந்தரராஜ சுவாமி. விவசாயம்தான்இவரதுதொழில். ஒருநாள்அதிகாலை இவருக்கு ஒருகனவு .புற்றுகளும்முட்புதர்களும்சூழ்ந்தபாழடைந்தமண்டபம்..பெருமாள்சங்கு, சக்ரத்துடன்தோன்றி, ''இங்கு, நீண்டநாட்களாகபசியோடுகாத்திருக்கிறேன், வருகிறஆஷாடமாதம் (ஆடி) உத்தரபல்குனிநட்சத்திரம், சுத்தசப்தமிநாளில்நீஇந்தஇடத்துக்குவந்துபூஜைசெய்'' என்றார். அடுத்தஇரண்டுநாட்கள் இதே கனவு, இவர் அந்தபாழடைந்தமண்டபத்தைத்தேடிபுறப்பட்டார்.பலநாட்களாகதேடியபின்ஒருநாள்அதிகதாகம்எடுக்கதண்ணீர்தேடிஅலைந்தபோதுபெருமாள்ஆட்டுஇடையன்வடிவில்தோன்றிதான்இருந்தஇடத்தைக்காட்டிக்கொடுத்தார்.
மண்டபம்இருந்தது ஆனால்சுவாமிவிக்கிரகங்களை காணவில்லை. பீஜப்பூர்கோல்கொண்டா சுல்தான்களின்படையெடுப்புகளின்போது அவர்களால்சுவாமி விக்கிரகங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, கருவறை இருப்பதே தெரியாதபடி சுவர்எழுப்பி மறைத்திருந்தார்கள் ஸ்ரீவைணவர்கள். அந்தகருவறை சுவரை உடைத்தபோது திருப்பதிப்பெருமாளைப் போலவே கல்யாண வெங்கடேஸ்வரரை கண்டு உருகி, அருகில் உள்ள கிராமங்களில் உஞ்சவிருத்தி செய்து பெருமாளுக்கு ஆராதனம் செய்ய ஆரம்பித்தார் சுந்தரராஜசுவாமி. இவருக்குப்பின் தற்போது புதுப்பொலிவுடன்  திருப்பதி தேவஸ்தானத்தினாரால் இவ்வாலயம் பராமரிக்கப்படுகின்றது. 

உபய நாச்சியார்களுடன் கல்யாண வெங்கடேஸ்வரர் 
 
பெருமாள் அகத்தியர் ஆசிரமத்தில் இருந்து திருமலைக்கு எழுந்தருளுவதற்கு முன் இரு வரங்கள் அளித்தார். முதலாவது ஏது காரணத்தினாலும் திருமலை வரமுடியாதவர்கள் (புதிதாக மணமானவர்கள், வயோதிகர்கள்)இங்கு சேவிக்க திருமலையில் சேவித்த பயன் கிட்டும். இரண்டாவது இங்கு கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டுகாப்புக்கட்டிக்கொண்டால், திருமணதோஷங்கள் நீங்கி, விரும்பிய வண்ணம் மணம் கை கூடும். ஆகவே இன்றும் பலர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றுக்கொண்டு காப்புக்கட்டிக்கொள்கின்றனர்.


இவ்வாலயத்திற்கு அடியோங்கள் இலவச பேருந்து மூலமாக வந்து சேர்ந்தோம். மாலை சுமார் 6  மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு 8  மணிக்குத்தான் ஏகாந்த சேவை அதற்கான டிக்கெட் 7:30  மணிக்குத்தான் தருவார்கள். எனவே பெருமாளை திவ்யமாக சேவித்தோம். நெடிதுயர்ந்த  ஐந்து நிலை இராஜகோபுரம் எதிரே அஷ்ட கோண புஷ்கரணி சுத்தமாக பராமரித்திருக்கின்றனர். ஆலயத்தின் உள்ளே நுழைந்தோம் தங்கக் கவசம் பூண்ட பலி பீடம், கொடி மரம். திருக்கோவில் உயரத்தில் அமைந்துள்ளது. முழுவதும்கற்றளியாகபலஅற்புதகற்சிற்பங்களுடன் எழிலாக அமைந்துள்ளது ஆலயம் ஒரே பிரகாரம் சுற்றி வந்து படிகளில் ஏறி பெருமாளை சேவிக்கச் சென்றோம். மஹா மண்டபத்தில் அற்புதமான கற்சிற்பங்கள், கருடன் நெடியோனாகதிருக்கரங்களை கூப்பிய வண்ணம் சேவை சாதிக்கும் அழகைக் கண்டோம். இரண்டு காண்டாமணிகள் இம்மண்டபத்தில் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் நுழைந்தவுடன் பெருமாளின் திருமுக தரிசனம் கிட்டுகின்றது. அருகில் சென்று பெருமாளை நிதானமாக சேவிக்க முடிகின்றது. நின்ற கோலத்தில் இளமைக் கோலத்துடன் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கின்றார் கல்யாண வெங்கடேஸ்வரப்பெருமாள்,  பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதரும், அமர்ந்த கோலத்தில் லக்ஷ்மிநாராயணரையும் சேவிக்கின்றோம். பட்டர் பொறுமையாக மூலவர்களுக்கும்,   உற்சவ மூர்த்திகளுக்கும் ஆரத்தி சேவித்து தீர்த்தம், சடாரி அளித்தனர். திவ்யமாக பெருமாள்களை சேவித்தபின் வெளியில் வரும் போது திருமலை போலவே இங்கும் எந்நேரமும் பிரசாதம் வழங்குகின்றனர். பிரசாதத்தை சுவீகரித்துக்கொண்டு புஷ்கரணி கரையில் அமர்ந்து கொண்டு ஏகாந்த சேவைக்கான அனுமதி சீட்டு அளிக்கும் வரை பெருமாளை தியானித்துக்கொண்டு இருந்தோம்.


மாசி மாத பிரம்மோற்ஸவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பெருமாளும் வலம் வந்தார் திவ்யமாக சேவித்தோம். புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். பிரம்மோற்ச்வத்தின் போது நரசிம்மராக சிம்ம வாகனத்தில் பெருமாளை சேவிப்பது மிகவும் விசேஷம் என்று கூறினார்கள். மேலும் கருடசேவையின் போது  திருமலையில் இருந்து திருமலையப்பனுக்கு சார்த்தப்படும் லக்ஷ்மி ஹாரம் கொண்டு வரப்பட்டு சார்த்தப்படுகின்றதாம். 

திருத்தேர்


7:30 மணிக்கு அனுமதி சீட்டு அளித்தனர், பிறகு சென்று வரிசையில் நின்றோம். சமயம் வந்தவுடன் உள்ளை அனுமதித்து அனைவரையும் அமர வைத்தனர். ஏகாந்த சேவை ஆரம்பமானது. யாரும் எந்தவித ஒசையெழுப்ப வேண்டாம் என்று வேண்டிக்கொண்டனர்.  பெருமாளை உறங்க வைக்க நாயனம் வாசிக்கின்றனர். நிசப்தமான சூழ்நிலையில் இனிமையான இசையும் பெருமாளின் எழிலும்  நம்மைச் சொக்க வைக்கின்றது.  இனிமையான இசையில் கட்டுண்டு அமர்ந்திருந்தோம் பின்னர் பெருமாளுக்கு ஆரத்தி காண்பித்து  மெதுவாக கர்ப்பகிரகத்தின் விளக்குகளின் ஒளியை குறைத்து  திரையிடுகின்றனர். வெளியே வரும்போது பெருமாளுக்கு நைவேத்யம்செய்தபிரசாதமும்அளித்தனர். இவ்வளவு அருமையாக சேவை அளித்த பெருமாளுக்கும்இக்கோவிலைப்பற்றிக் கூறிய  நண்பருக்கும் நன்றி கூறி பேருந்து மூலம் திருப்பதி வந்து பின்னர் திருமலை வந்து சேர்ந்தோம். வரும் பதிவில் திருமலையில் என்னென்ன ஆர்ஜித சேவைகளை அடியோங்கள் சேவித்தோம் என்பதைப் பற்றிக் காணலாம் அன்பர்களே. 


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

No comments: