

நான்முகி (சரஸ்வதி) அலங்காரம்
மீனாக்ஷி அலங்காரம்
சாரதாம்பாள் அலங்காரம்

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய
துக்க நிவாரணி அஷ்டகம்
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே
எங்குலந் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (3)
எந்தக்கோவில்? எந்த அம்பாள்? எடுத்தவர் யார்? என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு புகைப்பட நிலையத்தில் பார்த்த அம்மனின் படங்களைப் பார்த்த போது நவராத்திரி அலங்காரப்படங்களாக உள்ளனவே என்று அவர்களிடம் கேட்டு வாங்கினப்படங்கள் இவை. எடுத்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகள் உங்கள் மூலமாக அன்னையின் இந்த அற்புத தரிசனத்தை அன்பர்களுக்கு அளிக்க ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது
அம்மன் அருள் வளரும் .........
No comments:
Post a Comment