Friday, September 30, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் (2011) -1

நவராத்திரி ஒன்பது நாட்களுக்கும் அன்னைக்கு பலவிதமான அலங்காரங்கள் பல் வேறு ஆலயங்களில் நடைபெறுகின்றது இந்த வருடம் தாய் மனமுவந்து தந்த அருட்காட்சிகளை, அற்புத தரிசனத்தை, ஆனந்த தரிசனத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் கண்டு களியுங்கள்.


சென்னை அசோக்நகர் சொர்ணாம்பாள்
கொலு தர்பார் காட்சி


ஆறதனில் மணல் குவித்து அரிய பூஜை செய்த என் அன்னை ஏகம்பரியும் நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழும் அம்மை காமாட்சியுமையே

சொர்ணாம்பாள் சொர்ணபுரீஸ்வரருக்கு
பாலாபிஷேகம் செய்யும் திருக்கோலம்


மேற்கு மாம்பலம் சத்யநாராயணர் கொலு தர்பார் வராக அவதாரம்
பூமி தேவியுடன் பெருமாள் கொலு





காசி விசாலாட்சி அம்பாள் ஊஞ்சல் சேவை












உண்ணாமுலையாளுடன் அருள்புரியும்
அண்ணாமலையார் கொலு


காமாட்சி அலங்காரம்


வடபழனி சாந்தநாயகி அம்பாள்
காசி விசாலாட்சி அம்பாள் அலங்காரம்





பசுபதி




ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய



துக்க நிவாரணி அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியணி சூலினி

மன்மத பாணியளே

சங்கடம் தீர்த்திட சடுதியில் வந்திடும்

சங்கரி சௌந்தரியே

கங்கண பாணியன் கனிமுகங்கண்ட

நல்கற்பகக் காமினியே

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி

துக்க நிவாரணி காமாக்ஷி (1)

No comments: