Tuesday, October 12, 2010

நவராத்திரி அலங்காரங்கள் -4


நவராத்திரி நான்காம் நாள்


வெள்ளீஸ்வரம் காமாக்ஷி அம்மன்
கௌரி அலங்காரம்


நவராத்திரியின் நான்காம் நாள் அன்னையை ஐந்து வயது குழந்தையாக பாவித்து ரோகிணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். இன்றைய ஸ்லோகம்

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம ஸஞ்சிதாநிவ யாதேவி

ஸர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

(எல்லா ஜீவரசிகளின் பாவங்களையும் எந்தச் சக்தியினால் நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியாகிய ரோகிணியை வணங்குகிறேன்.)


கூஷ்மாண்டா துர்கா

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை நவதுர்கைகளில் , சூரிய மண்டலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு இந்த புவனம் முழுவதற்கும் வெப்பத்தை வழங்கிக்கொண்டிருக்கும் கூஷ்மாண்டா துர்காவாக வழிபடுகின்றோம். இந்த பிரம்மாண்டம் முழுவதையும் சிருஷ்டிப்பவள் இவளால்தான்.

கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள் அன்னை. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள். எல்லாவற்றிக்கும் ஆதியாக ஊதா வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

அன்னை தன் சக்தி முழுவதையும் சூரியனுக்கு அளித்து சிருஷ்டியை துவக்குகிறாள் அன்னை.

ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |

ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||


என்பது கூஷ்மாண்டா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

( தனது இரு தாமரைக் கரங்களில் இரத்தம் நிரம்பிய இரு பூரண கலசங்களை ஏந்தி, சிருஷ்டியை ஸ்த்தி சம்ஹாரத்தை தனது கண் இமைப்பில் நடத்தும் கூஷ்மாண்டா தேவி அடியேனுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். )

இன்று நாம் காணப்போகும் அன்னையின் அலங்காரங்கள் மயிலை வெள்ளீஸ்வர ஆலயத்தின் கோலாகலக் காட்சிகள்.

காமாக்ஷியம்மன் காமதேனு வாகனத்தில்
கௌரியாக கொலு வீற்றிருக்கும் அழகு



அம்மனுடன் கொலுவிருக்கும் மஹா லக்ஷ்மி
மற்றும் வெள்ளீஸ்வரம் ஐதீகம்

( சுக்ராச்சாரியார் சிவபூஜை செய்யும் காட்சி)



குகையில் உறையும் சிவனை
சகல ஜீவராசிகளும் வணங்கும் காட்சி



மேற்கு மாம்பலம் விசாலாக்ஷி அம்பாள்
ஊஞ்சல் சேவை

Align Center


ரோக நிவாரண அஷ்டகம்

நாரணி நீயே நான்முகன் தாயே
நாகினி யாயே துர்க் கையளே |

ஊரணி மாயே ஊற்று தாயே
ஊற்றுவ யாயே ஊர் ஒளியே ||

காரணி மாயே காருணி தாயே
காளக யாயே காசினியே |

ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (4)


அம்மன் அருள் வளரும்

No comments: