Showing posts with label நாக வாகன சேவை. Show all posts
Showing posts with label நாக வாகன சேவை. Show all posts
Friday, April 13, 2018
Tuesday, February 26, 2013
செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -8
நான்காம் திருநாள் மாலை நாக வாகன சேவை -2
காலை வெள்ளித் தொட்டி உற்சவம்
தெய்வ நாயகி
வள்ளி நாயகி
முருகருக்கு பன்னிரண்டு திருக்கரங்கள் , இவை நமது தமிழின் பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள், பதினெட்டு திருக்கண்கள் அவை பதினெட்டு மெய் எழுத்துக்கள், ஆறு திரு முகங்கள் அவை வ்ல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் ஆறு எழுத்துக்கள். முருகனது வேல் நமது ஃ என்னும் ஆயுத எழுத்து.
முருகு என்னும் முருகனது நாமமே "மு" என்னும் மெல்லின எழுத்து, "ரு" என்னும் இடையின எழுத்து, மற்றும் "கு" என்னும் வல்லின எழுத்தால் உருவானது தானே. ஆகவேதான் நாம் அவரை தமிழ்க் கடவுள் என்று போற்றுகின்றோம்.
காளீங்க நர்த்தனராக சிவ சுப்பிரமணிய சுவாமி
புல்லாங்குழல் ஊதிக்கொண்டு காளியன் மேல் நடனமாடிக்கொண்டே திருமுருகன் தரும் அற்புத காட்சியை தாங்கள் தரிசனம் செய்கின்றீர்கள். மேல் திருக்கரங்களில் விஷ்ணு அம்சமான சங்கு சக்கரங்களையும் புல்லாங்குழலில் உள்ள பதக்கங்களையும் காண படங்களை பெரிதாக்கிக் காணுங்கள் அன்பர்களே.
மன இருள், அறியாமை, துன்பம், ஆகியவற்றை நீக்குபவர் முருகன். பரமஞான மூர்த்தியான தந்தைக்கே உபதேசம் செய்த ஞான பண்டித சுவாமி. சக்தி ஆயுதம் ஞான வேல்
நாக வாகன சேவை
கோடிக்கோடி மன்மத லாவண்யம், ஞானத்தை மற்றவர்க்கு வழங்கும் குருநாதர்தான் சுப்பிரமணிய சுவாமி. அஞ்ஞான இருளுக்கு அப்பால் இருக்கின்ற ஞானஜோதிதான் சுப்பிரமணிய சுவாமி.
Monday, February 25, 2013
செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -7
- நான்காம் திருநாள் மாலை நாக வாகன சேவை -1
குழலூதும் கண்ணனாக சிவசுப்பிரமணிய சுவாமி
இத்திருக்கோவிலை வலம் வரும் போது ஒன்றை கவனிக்கலாம், பல கல்வெட்டுகளில் அன்பர்கள் செய்த திருப்பணிகளைப் பற்றியும் அவர்கள் கொடுத்த நன் கொடைகளைப் பற்றியும் இவை கூறுகின்றன. அநேகமாக அனைத்து திருவிழாக்களுக்கும் யாராது ஒருவர் உபயம் செய்து அதை குறிப்பிட்டும் வைத்துள்ளனர்.
புல்லினால் ஆறு கோடி
புது
மண்ணால் பத்துக் கோடி
செல்லுமாம் ஞாலம் தன்னில்
செங்கல்லால்
நூறுகோடி
அல்லியங்கோதை பாகன்
ஆலயம்
மடாலயங்கள்
கல்லினார் செய்த பேர்கள்
கயிலை
விட்டு அகலார் தாமே.
என்ற படி நம் இறைவனுக்கு எப்படியும் சேவை
செய்ய வேண்டுமென்று செங்குந்த சபையினரும், பக்தர்களும் சேர்ந்து சுமார் 25 லட்சத்தில் 11.5 அடி உயரம் கொண்ட வெள்ளி ரதம் செய்து
முருகனுக்கு அர்பணித்துள்ளனர்.
நான்காம் நாள் காலை வெள்ளித் தொட்டி உற்சவம்
சமயம் கிட்டும் போது
நாடிய வானோர்க்கென்றும்
நண்ணுதல்
அரியாய் போற்றி
பாடிய பக்தர்க்கென்றும்
பரிந்தருள்
மூர்த்தி போற்றி
நீடிய செல்வம் கல்வி
நித்ய
மங்களங்கள் யாவும்
கூடிய செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணியனே
போற்றி போற்றி
என்று வணங்க வாருங்கள் மேற்கு சைதாப்பேட்டை.
சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மகப் பெருவிழாவின்
நான்காம் திருநாள் காலை வெள்ளித்தொட்டி உற்சவம். மாலை நாக வாகனம். நாக வாகனத்தில் முருகர்
கிருஷ்ணன் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஒவ்வோரு வருடமும் ஒரு வித அலங்காரம்
இப்பதிவில் நின்ற கோல குழலூதும் கிருஷ்ணனாக - வேணு கோபாலனாக சிவசுப்பிரமணிய சுவாமி அருள் பாலிக்கும் அழகை காணுங்கள் அன்பர்களே.
நாகம் என்பதால் முருகனுக்கு விஷ்ணு ரூப அலங்காரம் செய்கின்றனர் இவ்வாலயத்தில். ஒயிலாக தேவியர் இருவரும் சாய்ந்த கோலத்தில் குழலூதும் வேணு கோபாலனாக தரிசனம் தரும் அழகான கோலத்தை பாருங்கள்.
இனி ஒரு வருடம் என்ன அலங்காரம் என்பதை அடுத்த பதிவில் காணுங்கள் அன்பர்களே.
லேபிள்கள்:
குழலூதும் கண்ணன்.,
செங்குந்த கோட்டம்,
நாக வாகன சேவை
Subscribe to:
Posts (Atom)























