Saturday, June 24, 2017

நவ துவாரகை யாத்திரை -8


திருத்துவரை -3



 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3    4    5    6    7   9    10   11    12


   13   14   15   16   17   18   19   20   21    22    23    24    25   26   27   28


துவாரகை மன்னன் 

ங்கு பூசைகள் மஹாபிரபுஜீ என்று அழைக்கப்படுகின்ற வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கம் பிரகாரம் பூசைகள் டைபெறுகின்றன. தினமும் துவாரகாதீசருக்கு  காலை 7.00 மணிக்கு மங்கள ஆரத்தியும்; 10.00 மணிக்கு திருமஞ்சனமும்; மாலை 6.00 மணிக்கு அலங்கார ஆரத்தியும்; இரவு 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தியும்; இரவு 9.30 மணிக்கு சயன ஆரத்தியும் நடக்கிறது. டகோர் துவாரகையில் எவ்வாறு பிரசாதம் அமுது செய்யப்படுகின்றதோ அது போலவே துவாரகையிலும் டைபெறுகின்றது. அதன் விவரங்கள் என்னவென்று காணலாமா அன்பர்களே.


பொதுவாகவே குஜராத்திகள் இனிப்புப் பிரியர்கள், இவர்கள் சமைக்கும் அனைத்திலும் சாம்பார் உட்பட சர்க்கரை சேர்ப்பார்கள். இறைவனுக்கு படைக்கும் உணவிலும் இனிப்புகளே அதிகம். போக் என்றால் இறைவனுக்கு படைக்கும் நைவேத்யம். துவாரகாதீசனுக்கு என்னென்ன பிரசாதங்கள் அமுது செய்யப்படுகின்றன என்று காணலாம் அன்பர்களே.

பண்டா போக்:  அதிகாலையில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை துவாரகாநாதனுக்கு நைவேத்யம் செய்கின்றனர்.  வெண்ணெய் என்றால் ஸ்ரீகிருஷ்ணருக்கு கொள்ளை பிரியமல்லாவா? “வேயினன்ன தோள் மடவார் வெண்ணையுண்டான் இவனென்று ஏச நின்ற எம்பெருமானுக்கு இச்சமயம்   வெண்ணையும் அமுது செய்விக்கப்படுகின்றது.  அதன் பிறகு துவாரகநாதனின் முகத்தினை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்கின்றனர்.  ஒரு குழந்தைக்குப் பல் தேய்த்து விடுவது போல துவாரகாநாதனுக்கும் ங்கத்தால் ஆன குச்சி கொண்டு பல் தேய்க்கும் படலம் நடக்கின்றது! அதன் பிறகு மங்கள ஆரத்தி. தற்குப்பின்னர்  பக்தர்கள் துவாரகாதீசனை சேவிக்க அனுமதிக்கின்றனர்.

ஸ்நான் போக்: அதன் பிறகு குளிப்பாட்டும் படலம்! அதாவது திருமஞ்சனம். நமது ஊரில் நடப்பது போலவே இங்கேயும் விதம் விதமாக அபிஷேகம் கண்டருகிறான் குன்றால் குளிர் மாரி தடுத்துகந்தான், கானார் கரி கொம்பொசித்த களிறு, கோலால் நிரை மேய்த்த எங்கோவலர் கோ, ஸ்ரீகிருஷ்ணர்.  பிறகு சிறிது  அமுது படையல்.

ஷ்ருங்கார் போக்: திருமஞ்சனம் முடிந்த பிறகு அலங்காரம். பட்டு பீதாம்பரங்கள், வரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள்,  தலைக்கு குவே என்றழைக்கப்படும் மகுடம், கொண்டு அலங்காரம் செய்கின்றனர். துளசி மாலை, பாக்கு மாலை, மலர் மாலைகள் சூட்டுகின்றனர். பின்னர் துளசியினால் அர்ச்சனை. இதற்குப் பிறகு  ஷ்ருங்கார் போக் கண்டருளுகிறார். இச்சமயம் இனிப்புகள் அதிகமாக அமுது செய்யப்படுகின்றன.  சுவாமிக்கு மட்டுமல்ல, பொன் வெள்ளி, வரத்தினங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வண்ண வண்ண துணிகள் கொண்டு கருவறை முழுவதும் அலங்காரம் செய்கின்றனர்.

ராஜ் போக்: காய்த்த நீள் விளங்கனியுதிர்த்து எதிர்த்த பூங்குருந்து
சாய்த்து மாபிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு பின்
பேய்ச்சி பாலையுண்டு பண்டொரேன மாய வாமனான   துவாரகாதீசனுக்கு மதிய வேளையில் படைக்கப்படும் பிரசாதம். ஒரு அரசனுக்கு எப்படி உணவு சமைப்பார்களே அது போல 56 விதமான உணவு வகைகள் கொண்டு மிகவும் சிறப்பாக  நைவேத்யம் செய்கின்றனர்.   ஆண்டாள் நாச்சியார் சோலை மலைப் பெருமானுக்கு
நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்லொலோ? (நா தி : 9-6) என்று பாடியபடி ஒரு சக்கரவர்திக்கு எவ்வாறு விருந்து படைப்பார்களோ அது போல ஸ்ரீகிருஷ்ணருக்கு ராஜ விருந்து அமுது செய்விக்கப்படுகின்றது.




உத்தப்பன் போக்:  மதிய இராஜ உணவிற்குப்பின் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் எனவே சன்னதி அடைக்கப்படுகின்றது. சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர். மாலை எம்பெருமானை மணி அடித்து எழுப்புகின்றனர். பின்னர் அவருக்கு சந்தனம் ஜவ்வாது முதலிய  வாசனை திரவியங்கள் பூசுகின்றனர். பின்னர் தரிசனத்திற்காக டை திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் அச்சமயம் கிட்டுகின்ற கனி வகைகள் மற்றும் உலர் பழங்கள் நைவேத்யம் செய்கின்றனர்.  
ஷயன் போக்: இரவு கோவில் நடையடைக்கும் போது துவாரகாதீசனுக்கு பூசைகள் முடித்து அன்றைய தினத்திற்கான நிறைவு நைவேத்யமாக பாலும் பழமும் படைக்கின்றனர்.

பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. அடியோங்கள் அதிகாலையில் சென்றதால், வெண்ணை பிரசாதம் கிட்டியது”.

ஜென்மாஷ்டமி, இராமவமி, தீபாவளி, தசரா, அக்ஷய திருதியை, ரத யாத்திரை, வாமன ஜெயந்தி, தீபாவளி (குஜராத்தியரின் புது வருடப் பிறப்பு), தீபாவளிக்கு மறு நாள் அன்னகூட உற்சவம், துளசி திருக்கல்யாணம், மகர சங்கராந்தி ஆகிய திருவிழாக்கள் இத்தலத்தில்  மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கோகுலத்தில்
குடங்களை ஏடுத்தேறவிட்டு கூத்தாடவல்ல என் கோவே
மட ங்கொள் மாதரை மால்  செய் என்  மைந்தா -  என்று பெரியாழ்வார் பாடியபடி  ஸ்ரீகிருஷ்ணர் அன்று குரவை கூத்தாடியதை நினைவு படுத்தும் வகையில்  கோகுலாஷ்டமியன்று 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு பெண்கள் பாவன் பேடா என்ற குரவைக் கூத்து ஆடுவர்.




மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை, வல்லானை கொன்றானை மாற்றாறை மாற்றழிக்க வல்லானை, புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கர்களை கிள்ளிக் களைந்தானை திவ்யமாக சேவித்த பின் ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஆம்னானாய மடங்களுள் ஒன்றான சாரதா மடத்திற்கும் சென்றோம். ஸ்வரூபானந்த தீர்த்தர் அப்போதைய சங்கராச்சார்யார். குஜராத்தில் ஏற்பட்ட நிடுக்கத்தின் போது மடம் சேதப்பட்டது, சுவர்களில் விரிசலகள் ஏற்பட்டன. அவற்றை சரி செய்ய  மராமத்து வேலைகள் ந்து கொண்டிருந்தன. மைய மண்டபத்தின் கூரையில் நான்கு பக்கமும் எழிலான ஆடல் வல்லான் மற்றும், அம்பாளின் பல்வேறு கோலங்களின்  சிற்பங்களும் அருமையாக அமைத்துள்ளனர். 




இத்தலத்தில்  த்வாஜாரோகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அரசாட்சி செய்த காலத்தில், 52 பேர் தலைமை பொறுப்பில் இருந்தார்களாம். அதனால், முக்கோண வடிவில் படபடக்கும் 52 கஜ நீளம் அதாவது சுமார் 47 மீட்டர் கொடியானது பறக்க விடப்படுகிறது. வானவில்லில் ஏழு நிங்கள் உள்ளது போல இக்கொடியிலும், சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெள்ளை, பழுப்பு, ரோஜா வர்ணங்கள் இடம் பெறுகின்றன சூரிய- சந்திர உருவங்கள் பதித்த இக்கொடியை ஒரு நாளைக்கு ந்து முறை விமானத்தின் உச்சியில்  ஏற்றுகிறார்கள். ஒரு முறை ஏற்றிய கொடியை மறுமுறை உபயோகப்படுத்துவது இல்லை. தினமும், இருவர் படிக்கட்டுகள் வழியாகதளத்திலிருந்து, நூற்று இருபது அடி  உயரமுள்ள ஐந்தடுக்கு கோயிலின் உச்சியை அடைந்து கொடியை இறக்கி  ஏற்றுகிறார்கள். புது கொடி ஏற்றப்பட்ட பிறகு, இதன் பாதி உயரத்தில், சதா ஒளிர்ந்து கொண்டிருக்கும் அகல் விளக்கின் சமீபத்திலிருந்து ஒரு தேங்காயை கீழே போட்டு உடைக்கிறார்கள் பக்தர்கள், அதை பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். கொடி ஏற்றத்தை தரிசித்தால், சகல ரோகங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது.





  கொடியை  தலையில் சுமந்து செல்கின்றனர் 

இதை ஒரு பிரார்த்தனையாக செய்கின்றனர். ஊரையெல்லாம் அழைத்து  கொடியை தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்ட பாட்டத்துடன், ஆடம்பரமாக   ஒரு கூடையில் வைத்து தலையில் வைத்து சுமந்து கொண்டு  “ஜெய் ரண் சோட், ராஜா ரண் சோட், கோபால கிருஷ்ணா, இராதா கிருஷ்ணா”  என்று பக்தியுடன் ஜபித்துக்கொண்டே ஊர்வலமாக சென்று பலராமர் சன்னதியில்  சமர்ப்பிக்கின்றனர். அங்கு பூசாரிகள் கொடிக்கு சிறப்பு பூசைகள் செய்கின்றனர். பின்னர் கொடியேற்றத்திற்காக கொடி எடுத்துச் செல்லப்படுகின்றது. ஒரு கொடியேற்றத்திற்கு சுமார் ரூபாய் 25000/- ஆகின்றது. முன் பதிவு செய்து கொண்டு காத்திருக்கின்றனர். எவ்வளவு பக்தியுடனும், சிறப்பாகவும் துவாரகையில் இக்கொடியேற்ற வைபவம் டைபெறுகின்றது என்று  பார்த்து இரசிக்க வேண்டிய ஒன்று என்பதில் ஐயம் இல்லை.

ஆவலன்புடையார்தம் மனத்தன்றி
மேவலன் விரைசூழ் துவாராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடுகூடலே.


என்று ஆண்டாள் மங்கலாசாசனம் செய்த செங்கட்கருமுகிலை தேவகி சிங்கத்தை,  கருக்கார் கடல் வண்ணனை, குடத்தையெடுத்தேற விட்டு கூத்தாட வல்ல எம் கோவை, மாமணி வண்ணனை,  மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யான் துவாரகாதீஷனையும் கோமதியையும்   திவ்யமாக தரிசனம் செய்த பின், உடனே தீவு துவாரகைக்காக படகுத்துறைக்கு வண்டி மூலம் கிளம்பினோம். ருக்மணி துவாரகை மற்றும் நாகேஸ்வர் ஆலயம் இரவிலும் திறந்திருக்கும் ஆனால் பேட்துவாரகைக்கு மாலை 5 மணிக்கு மேல் செல்ல முடியாது என்பதால் முதலில் அங்கு செல்வோம் என்று வண்டி ஓட்டுர் கூறினார் எனவே பேட்துவாரகைக்கு பயணப்பட்டோம்.

2 comments:

kannan said...

துவாரகையை எங்கள் கண் முன் நிருத்தியதற்கு மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை

S.Muruganandam said...

மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள் கண்ணன்