Thursday, April 7, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 3

திருமயிலை கபாலீஸ்வரம் 


ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் ஓருருவம் ஓர் நாமம் இல்லாதவர் ஆனால் நாமோ அவருக்கு ஆயிரம் நாமம் இட்டு அழைத்தும், பல்வேறு மூர்த்தங்களாக அமைத்தும் வழிபடுகின்றோம். மேலும் மானிட இயல்பினால் அந்த எல்லையில்லாத பரம்பொருளை இரவு பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணியும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பியும் மகிழ்ச்சி கொள்கின்றோம். அவ்வாறே அவருக்கு ஒரு நட்சத்திரத்தையும் உரியதாக்கினோம். ஆம் இறைவன் சிவன் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடவும் செய்கின்றோம், திருவோணத்தை திருமாலுக்கு உரியதாகவும் ஆக்கினோம். எம்பெருமான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என்பது புராணம். ஆனால் இன்றும் தனுசு இராசியின் நட்சத்திர தொகுதியே மன்மதன். கீழ் வானத்தில் ஆருத்ரா நட்சத்திரம் எழுந்தால் மேற்கே தனுசு நட்சத்திரம் மறைவது இதைத்தான் உணர்த்துகின்றதோ?



பௌர்ணமியன்று அதிகாலை
ஆருத்ரா தரிசனம்



பின்னழகு

சிவானந்த வல்லி

திருவாதிரை அன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் எல்லா சிவத்தலங்களிலும் உண்டு, அது போலவே எம்பெருமான் உருவமாக எழுந்தருளியுள்ள எல்லா தலங்களிலும் அபிஷேகம் உண்டு ( சப்த விடங்க தலங்கள், அஷ்ட வீரட்டத்தலங்கள், தொண்டை மண்டல தியாகத் தலங்கள்). திருவாரூரில் இடது பாத தரிசனம், உத்திரகோச மங்கையில் மரகத நடராஜர் அபிஷேகம் மற்றும் நிஜ தரிசனம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

*************

திருமயிலை வெள்ளீஸ்வரம் 



பௌர்ணமியன்று அதிகாலை
ஆருத்ரா தரிசனம்



மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும் அவர்கள் செய்கின்ற ஆறு கால பூசையே அம்பலவாணருக்கு வருடத்தில் நடைபெறுகின்ற ஆறு திருமுழுக்குகள் ஆகும். தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான, மாதங்களில் சிறந்ததான மார்கழியின் மதி நிறைந்த நன்னாளம் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் இந்த நாளில் வரும் திருவாதிரை தினம் தான் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களூம் அலங்காரங்களும் திருவிழாக்களும் நடைபெறும் தினமாகும். அன்று தான் சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண விரும்பிய பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து நடராஜ பெருமானாக தனது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளினார் என்பது ஐதீகம். எனவே திருவாதிரையன்று அம்பல வாணாருக்கு எனவே இந்த திருவாதிரை நாள் அவர்களின் உஷத் கால பூஜையாகும்.



பின்னழகு




சிவகாமசுந்தரி


  

தரிசனம் தொடரும் .  .   .  .  .  .

No comments: