Saturday, April 16, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 6

நவ  நடராஜர்  சந்திப்பு விழா


சென்னை பாரிமுனைப் பகுதி மண்ணடியில் சில வருடங்களாக இந்த ஒன்பது நடராஜர் தரிசன நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த வருடம்தான் ஒரே இடத்தில் ஒன்பது நடராஜர்களையும் அம்பாளையும்  ஆருத்ரா தரிசனத்தன்று தரிசிக்கும் அரிய பேறு கிட்டியது.  அந்தக் காட்சிகளை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 

இவ்விழாவில் கலந்து கொள்ளும்  நடராஜர்கள் அருள் பாலிக்கும் ஆலயங்கள்

1.  மண்ணடி  ஸ்ரீ மல்லிகேஸ்வரர்  ஆலயம்.
2.  ஸ்ரீ கச்சாலீஸ்வரர் ஆலயம்.
3.  ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம்.
4.  மண்ணடி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்.
5.  மூக்கர் நல்லமுத்து ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலயம்.
6.  லிங்கி செட்டி தெரு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம். 
7.  ஸ்ரீ சண்முக செல்வ விநாயகர் ஆலயம். 
8.  செங்கழுநீர் பிள்ளையார் ஆலயம்.  
9.  நைனியப்பன் தெரு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம். 



கச்சாலீஸ்வரர் ஆலய நடராஜர் திருத்தேரில் எழுந்தருளினார்




இவ்விழாவை ஏற்பாடு செய்பவர்கள்  சென்னை சிவனடியார் சங்கத்தினர். இந்த அரிய தரிசனம் சுமார் 10: 35  மணியளவில்  தம்பு செட்டி தெரு கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் நடைபெற்றது.  அடியேன் சென்ற போது நடராஜப் பெருமான்கள்  அனைவரும் தங்கள் ஆலய தரிசனத்தை முடித்து சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர் அந்த காட்சிகள் முதலில் இடம்பெருகின்றது. சந்திப்புக் காட்சிகள் பின்னர் தொடரும். 

சிதம்பரேஸ்வரர் ஆலய நடராஜர் சூரிய பிரபையில் 



சிதம்பரேஸ்வரர்  ஆலய சிவகாமி அம்பாள்


சிதம்பரேஸ்வரர் ஆலய மாணிக்கவாசக சுவாமிகள்



மூக்கர் நல்லமுத்து ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலய நடராஜர் 


மூக்கர் நல்லமுத்து ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலய 
சிவானந்தவல்லி அம்பாள் 


எங்கோனும் எம்பிராட்டியும் ஒன்றாய் தரிசனம்  



முத்துக்குமார சுவாமி ஆலய  நடராஜர்

முத்துக்குமார ஆலய  சிவகாமி அம்பாள் 


 சண்முக செல்வ விநாயகர் ஆலய நடராஜர் 


 சண்முக செல்வ விநாயகர் ஆலய சிவகாம சுந்தரி அம்பாள் 

நவ  நடராஜர்  சந்திப்பு தொடரும் . . . . . . . 


No comments: