Showing posts with label முத்துகுமார சுவாமி. Show all posts
Showing posts with label முத்துகுமார சுவாமி. Show all posts

Friday, November 1, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -4

உற்சவர்கள் வாகன சேவை

உற்சவர்களின் தங்க வாகன சேவை தொடர்ச்சியாக இப்பதிவில் முருகப்பெருமானின் மூன்று கோல வாகன சேவையையும் தாயார் இருவரின் வாகன சேவையையும் காணலாம் அன்பர்களே.

ஷண்முகர் வெள்ளிரத சேவை
முன்புற தோற்றம்



வெள்ளிரதமும்  இராஜ கோபுரமும்


ஷண்முகரின் பின்னழகு 





தங்க ரதம் 

தங்கரதத்தில் பால சுப்பிரமணியர்

தங்கரதம்   பின்னழகு


தங்க மயில் வாகனத்தின் முன்னழகு

முத்துகுமார சுவாமி


சுவாமிக்கு அமைத்துள்ள மலர் பிரபைதான் எவ்வளவு பிரம்மாண்டம் மற்றும் அழகைப் பாருங்கள். 


 தங்க மயில் வாகனத்தில் முத்து குமாரசுவாமி


தங்க  மயில் வாகனத்தின் பின்னழகு


தங்க நாக வாகனம் 



                                                         தங்க நாக வாகனத்தில் கஜவள்ளி வனவள்ளி


              பூக்கடை கந்த சுவாமி கோவிலென வழங்கும் ஸ்ரீ முத்துக் குமார சுவாமி தேவஸ்தானம் , சென்னையின்  நெரிசல் மிகுந்த பகுதியான பாரிமுனையிலே இராசப்ப செட்டி தெருவிலே கடைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதுவடக்கு நோக்கிய ஐந்து நிலை கோபுரம் நம்மை வா வா என்று அழைக்கின்றது, உள்ளே நுழைந்தால் எதிரே முழுமுதற் கடவுளான கணநாதரை தரிசிக்கலாம்உள்  வாயிலின் மேலே  வள்ளி திருமணக் கோல சுதை சிற்பம் கண்ணுக்கு விருந்துகோவிலை வலம் வந்தால் கிழக்குப் பகுதியில் துவஜஸ்தம்பம், கிழக்கு சுவரில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஜன்னல்கள், சிவபெருமான் சன்னிதிற்கெதிராக சிவலிங்க வடிவிலும், கந்த சுவாமி சன்னிதிற்கெதிராக நட்சத்திர வடிவிலும், தெய்வயானை அம்மன் சன்னதிற்கெதிராக மலர் வேலைப்பாட்டுடனும் கலை நயத்துடன் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன வெளியே இருந்தே எம்பெருமானையும் தாயார்களையும்  தரிசிக்க ஏதுவாக அமைந்துள்ளன.

 பின் உற்சவர் மண்டபம்,   ஆறுமுகனுக்கு அறுகோண ஆஸ்தான மண்டபம், ஒரு சுற்றுடன் விளங்குகின்றது  "ஓம் சரவண பவ" என்னும் சடாக்ஷர வடிவாய் விளங்கும் இந்த மண்டபத்தில்  மூலவருக்கு இனையான சக்தியுடன் இத்தலத்தில்  விளங்கும்  பரம ஞான மூர்த்தியான தந்தைக்கே உபதேசம் செய்த ஞான பண்டித சாமி கோடி கோடி மன்மத லாவண்யத்துடன்  பொன்னொளி மின்னும் வதனத்தினனாய், தேவிமார்கள் இருவருடனும், மயில் வாகனத்துடன், மன இருள்,அறியாமை, துன்பம் ஆகியவற்றை நீக்கும் சக்தி வேலுடனும் சேவல் கொடியுடனும்  முத்துக் குமார சுவாமியாய் அருக் காட்சி தருகின்றார்.   மண்டபத்தின் முகப்பில் திருக்கோவிலின் முத்திரை எடுப்பாக சலவைக் கற்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
என்ன ஒரு ஈர்ப்பு எம்பெருமானின் திருமுருக வதனத்திலே, அந்த வடிவழகனை விட்டு அகல மனம் மறுக்கின்றது.   நம் கண் பட்டுவிடுமோ என்று தான் எம்பெருமானுக்கு  திருஷ்டிப் பொட்டு  இட்டிருக்கின்றனர். மூலவரைப் போலவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது உற்சவர் மண்டபம், எதிரேயே கண்ணாடி மண்டபம், எம்பெருமான் சர்வலங்கார பூஷிதராய்  எழுந்துருளும் போது நாம் சேவிக்க. மனம் குளிர குஹப் பெருமானின் வடிவழகைக் கண்டு வணங்கி பின் வலம் வந்தால் நவக்கிரக சன்னதி, இம்மண்டபத்தில் மாரி செட்டியார் இத்திருக்கோவிலை உருவாக்கிய வரலாறு சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளதுசரவணப்பொய்கை திருக்குளக்கரையில் சித்தி புத்தி சமேதராய் ஸ்கந்த பூர்வஜன் தனி சன்னிதி, சித்தி புத்தி என்னும்  தேவிமார்கள் இருவருடன் அமர்ந்த நிலையில் அருட்காட்சி தருகின்றார் பிள்ளையார்அவருக்கு வலப்பக்கத்திலே , காசி விஸ்வனாதர், விசாலாக்ஷி சன்னதிசென்னையில் அமைந்துள்ள பல கோவில்கள் போலவே இடப்பற்றாக் குறையினால் திருக்கோவிலின் உள்ளேயே திருக்குளம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதுகுளக்கரையிலே அற்புதமான சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சரவணப் பொய்கை திருக்குளத்தில் வெல்லம் கரைத்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருகின்றது. சித்திரை மாதம் தெப்போற்சவம் இத்திருக்குளத்தில் நடைபெறுகின்றது.  
 குளத்தில் நம் மெய் அழுக்கை கழுவிக்கொண்டு மேலே ஏறினால் அக அழுக்கை நீக்கும் ஆடல் வல்லானின் தேக்கு மரத்தால் ஆன அழகிய மர சிற்பம்அந்த நிருத்த மண்டபத்தின் இறுதியில்  ஞான தண்டாயுத பாணி  சன்னிதி மற்றும் பள்ளியறை. இந்த இரு சன்னதிகளின் கதவுகளில் சிவபெருமானின்  108 தாண்டவக் கோலங்களும் எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன. தேக்கு மரத்தால் ஆன அழகிய கலை பொக்கிஷம். அடுத்து  சோமாஸ்கந்தர் மற்றும் நடராஜர் சன்னதிகள் கோஷ்டத்தில் விநாயகர் ஆலமர் கடவுள்,  பிரம்ம முருகர், நாக சுப்பிரமனியர், குக்குட நாதர், மஹா லக்ஷ்மி, மஹா விஷ்ணு, துர்க்கை ஆகிய தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர். 

            இனி அர்த்த மண்டபத்தில் நுழைவோமா?   மண்டபத்திற்குள் நுழையும் போது ஒன்றை கவனிக்கலாம்வாயிலின் இரு பக்கமும் சிற்பங்கள் வலப்பக்கம் சைவ புராண சம்பந்தப்பட்ட சிற்பங்கள், இடப்பக்கம் வைணவ புராண சம்பந்தப்பட்ட சிற்பங்கள் குறிப்பாக கிருஷ்ண லீலை சிற்பங்கள், அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்துகின்றன இச்சிற்பங்கள். வடக்கு நோக்கி  வினாயகர் சன்னதி, அடுத்து பால முருகன் சன்னதி(நித்யோத்ஸவர்), கோஷ்டத்தில் வீரபாகு மற்றும் சூரியன். கிழக்கு நோக்கி உற்சவ மூர்த்திகள் சன்னதி, வனவள்ளி சன்னதிமூலவர் சன்னதி  வள்ளி தெய்வானையுடன்  மாரி செட்டியாருக்காக தானே வந்து அருளிய கந்த சுவாமி   மூர்த்தி சிறிதனாலும் கீர்த்தி பெரிதான எம்பெருமான் முருகன், விழாக் காலங்களில் தங்க கவசத்தில் எம்பெருமானைக் காண கண் கோடி வேண்டும். கஜவள்ளி சன்னதி, விஸ்வனாதர் சன்னதிகள் அமைந்துள்ளனதெற்கு முகமாக   மீனாக்ஷ’  அம்மன் சன்னதி,   ஆறுமுகர் சன்னதி  மயில் மேல ஷண்முகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகு. இம்மண்டபத்தில் அற்புத சிற்பங்கள் நிறந்த தூண்கள் உள்ளன, அம்மை சிவ பூஜை கோலம், மயில் மேல் கால் ஊன்றி நின்ற முருகர், சதுர்முகன், வினாயாகர், தசாவதார கோலங்கள், ஆட வல்லான், பைரவர், பழனி ஆண்டிக்கோலம், மத்தளம் வாசிக்கும் நந்தி, கல்யாண சுந்தரர், ரிஷபாரூடர், கோபால கிருஷ்ணர், அன்னாரூட பிரம்மா, வில் அம்பு தாங்கிய முருகர், தவழும் கண்ணன்,   என்று பல் வேறு சிற்பங்கள் அனைத்தும் கலை அழகுடனும் தெய்வீக ஒளியுடனும் மிளிர்கின்றன. கூரையிலே சரவணபவ சக்கரம் நமக்கு அருளை வழங்குகின்றது.

அன்பர்கள் அனைவருக்கும் இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Thursday, October 31, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -3

முன் பதிவில் மூலவர் கந்த சுவாமி எவ்வாறு தானே தன் அன்பனுருக்கு கனவில் வந்து தன்னை காட்டி இங்கு வந்து கோவில் கொண்டார் என்பதையும், மஹா கும்பாபிஷேகத்தன்று மாலை வன வள்ளி திருக்கல்யாண காட்சிகளையும், உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்தையும் கண்டு களித்தீர்கள்.  

இப்பதிவில் உற்சவர் முத்து குமார சுவாமி ஏன் முத்துக்களுடன் விளங்குகின்றார் என்ற உண்மையையும், அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவைகளையும் கண்டு களியுங்கள்.  

அன்பர்களின் தோளில் ஆடி ஆடி புறப்பாடு கண்டருளும் 
சிவசக்தி


முத்துக்குமார சுவாமி புறப்பாடு


புதிதாக வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் எழிலாக ஒளிரும் சுதை சிற்பங்களை காணுங்கள் அன்பர்களே.


தங்க சிம்ம வாகனத்தில்   விநாயகர்  முன் செல்ல ....

தங்க யாணை வாகனத்தில் அம்மையப்பர் திருவீதி உலா 


எழிலாக மலர்கள்களால் அமைக்கப்பட்டுள்ள பிரபையை பாருங்கள், கால புருஷன் மற்றும் பறக்கும் பச்சை கிளிகள் அருமையோ அருமை. படங்களை  பெரிதாக்கிப் பாருங்கள்.





தங்க கேடயத்தில் மீனாக்ஷி அம்பாள் 
அம்மனுக்கு வேறு மலர் அலங்காரம் 




சிறந்த சிற்பத்திற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற சூரபத்மன் வாகனம். வாகனத்தின் சிரசிலிருந்து பாதம் வரை செய்துள்ள வேலைப்பாட்டை கவனியுங்கள் அன்பர்களே. 


சூரபத்மன் வாகனத்தில் வீரபாகு

முருகனுக்காக சூரபதமனிடம் தூது சென்ற  நவ வீரர்களின் முதல்வரான வீரபாகு தேவர் இன்றைய தினம் சூரபத்மன் வாகனத்தில் திருவீதி உலா கண்டருளுகிறார்.  



சூரபதமன் வாகனத்தின் பின்னழகு


மூலவராக எம்பெருமான் இக்கோவில் வந்து எழுந்தருளியதும் ஒரு அற்புத லீலை, அதே போல உற்சவராக முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலிப்பதும் ஒரு அற்புத லீலைதான். அந்த அழகன் முருகனை, சிங்கார வேலனை, உற்சவராக வார்த்தெடுத்து எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை அமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண்ணி அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர். பின்பு அந்த எம்பெருமானின் அருளால் ஒரு முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் இன்றும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கச்சி வரதராஜப்பெருமாள்கள் ஆகியோரின் திருமுக மண்டலங்களில் முத்துக்கள் உள்ளது போல அந்த மால் மருகன் முகத்திலும் முத்துக்கள், எனவே அந்த அழகன் முருகனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர் இத்தலத்தில், கந்த வேளுக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் நடக்கும் சில நாட்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், ஆவணி அவிட்டம், கார்த்திகை ஏகாந்த சேவை தை பிரம்மோற்சவத்தின் முதல் நாள், தேரிலிருந்து இறங்கிய பின் , பிரம்மோற்சவம் முடிந்து உற்சவ சாந்தி அபிஷேகம் முதலியனஇனி இவ்வளவு சிறப்புப் பெற்ற இக்கோவிலை வலம் வரலாமா?

வாகன சேவை தொடரும்............

Monday, February 15, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 9

முத்துக்குமார சுவாமி தேவேந்திரபோகம்
மங்கள கிரி விமான சேவை

மங்கள கிரி விமானத்தில் எழிலாக தேவ சேனாதிபதி




கந்த கோட்டத்தின் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் பகுதியில் முருகப்பெருமானின் திருஅவதார நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. இவ்வாறு ஆணவமாம் சூரனை சம்ஹாரம் செய்து ஜெயந்தனையும் மற்ற தேவர்களையும் விடுவிக்க முக்கண் முதல்வனின் ஐந்து முகங்கள் மற்றும் அம்மையின் அம்சமான அதோ முகத்திலிருந்து ஆறு முகனாக திருஅவதாரம் செய்த முருகப்பெருமான் தேவ சேனாதிபதியாக பட்டாபிஷேகம் நடைபெற்று மங்களகிரி விமானத்தில் பவனி வரும் அழகை காண்கின்றீர்கள்.




மங்கள கிரி விமானத்தின் முன்னழகு



பின்னழகு

பின்னர் சிவனின் அம்சமே முருகன் என்பதை உணராமல் பால் மணம் மாறாத பாலகன் என்று இறுமாந்து எதிர்த்த சூரபத்மனை சம்ஹாரம் செய்து பின்னர் ஜெயந்தனையும் மற்ற தேவர்களையும் விடுவித்த இந்திராணி மாங்கல்ய ரட்சகன் முருகப்பருமான் இந்திரன் புதல்வி தேவயாணையை திருமணம் செய்து கொள்கின்றார். இவ்வைபவம் பதினான்காம் நாள் நடைபெறுகின்றது. திருக்கல்யாணம் முடிந்த பின் துதிக்கை மற்றும் வால் ஆடும் வெள்ளை யானை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி தேவியருடன் பவனி வந்து அருளுவார். அதற்கடுத்து வள்ளியை மணக்க முருகப்பெருமான் நடத்தும் வேடர் பறி உற்சவமும் வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றது.


காமதேனு வாகனத்தில் தேவியர் இருவரும்

Saturday, January 30, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 6

தங்க மயில் வாகன சேவை

முத்துக் குமார சுவாமிக்கு பிரம்மோற்சவம் தை மாதத்தில். தைபூசத்தையொட்டி 20 நாள் நிகழ்ச்சியாக வெகு பிரசித்தியாக நடைபெறுகின்றது. முதல் பத்து நாட்கள் தினமும் காலையும் மாலையும்முத்துக்குமார சுவாமி சர்வ அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் சேவைசாதிக்கின்றார். உடனே வன வள்ளியும் , கஜ வள்ளியும்பல் வேறுவாகனங்களில் சேவை சாதிக்கின்றனர். தைப்பூசத்தன்று இரவு கொடியிறக்கம் அதன் பிறது பத்து நாட்கள் மாலை வேளை உற்சவம் மட்டுமே. தெய்வயாணை மற்றும் வள்ளித்திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது.

மூஷிக வாகனத்தில் முதல்வன் விநாயகர்

மயில் வாகன சேவைக்கு புறப்பாடு கண்டருளும்
முத்துக்குமார சுவாமி

முன் ஒரு பதிவில் எழிலாக முந்திரி மாலையில் தரிசனம் தந்த அழகனை கண்டீர்கள் இன்றைய தினம் என்ன மாலை என்று தெரிகிறதா?

படத்தைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.

ஆம் ஏலக்காய், கிராம்பு, மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றும் கலந்து இந்த மாலை அணிந்து வாசனைப்பொருட்கள் வியாபாரிகளுக்கும் நமக்கும் அருள் பாலிக்கின்றார் கந்த கோட்டம் முத்துக் குமார சுவாமி.


முத்துக்குமார சுவாமி பின்னழகு

எல்லா பிரம்மோற்சவங்களிலும் ஐந்தாம் திருநாள் இரவு மிகவும் சிறப்பானது அன்றைய தினம் சிவாலயங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மற்றும் அன்றைய தினம் தான் பஞ்ச மூர்த்திகள் தங்கள் தங்கள் வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மேலே தாங்கள் பார்த்த விநாயகரின் மூஷிக வாகன சேவையும் அடுத்து காணும் சந்திரசேகரின் விருஷப வாகன சேவையும் இவ்வாறு அமைந்தவையே. சிறப்பு நாள் என்பதால் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருக்கின்றனர் ஆகவே இன்றைய தினம் முருகரின் பின்னழகையும் தரிசனம் செய்கின்றிர்கள்.

சந்திர சேகரர் விருஷப வாகன சேவை

தைப்பூச பிரம்மோற்சவத்தின் போது இவ்வாறு அருள் வழங்குகின்றார் முத்துக்குமார சுவாமி. முதல் நாள் காலை கொடியேற்றம், சவுடல் விமான சேவை. மாலை கற்பக விருக்ஷ சேவை. இரண்டாம் நாள் காலை நூதன இரட்டைத்தலை சிம்ம வாகன சேவை, மாலை தங்க முலாம் சிம்ம வாகன சேவை. மூன்றாம் நாள் காலை புருஷா மிருக வாகனத்தில் பாரி உலா சேவை, மாலை தங்க முலாம் சூரபத்ம வாகன சேவை. நான்காம் நாள் காலை மேஷ வாகன சேவை, மாலை தங்க முலாம் நாக வாகன சேவை, ஐந்தாம் நாள் காலை தேவேந்திர மயில் வாகன சேவை, மாலை பஞ்ச மூர்த்திகளுடன் தங்க மயில் வாகன சேவை, பஞ்ச மூர்த்திகள் கற்பூர கிளை தீபாராதானை. ஆறாம் நாள் காலை சிவிகையில் மோகினி திருக்கோலத்தில் சூர்ணோற்சவம், மாலை தங்க முலாம் யாணை வாகன சேவை.






ஏழாம் நாள்

ஆகாத தீவினைகள் அத்தனையும் போக்கி அன்பர்க்கு

ஏகாந்த சேவை நல்க இன்றுதான் எண்ணினையோ!

நாகாதிபன் விரும்பும் நல்ல சென்னை மாநகரில்

žகாழி அந்தணனை தேரின் மிசை கண்டேனே!

என்று வண்ண சரபம் தண்டபாணி சுவாமி பாடிய சிறப்புடைய இரதோற்சவம் . (கந்த சுவாமி மயில் மீதும் தேரின் மீதும் தண்டபாணி சுவாமிக்கு காட்சி தந்துள்ளார்.) மாலை சிறப்பு அலங்காரத்துடன் முத்துக்குமார சுவாமி திருக்கோவிலுக்கு புறப்பாடும் பின் அபிஷேகமும் நடைபெறுகின்றது. எட்டாம் நாள் சூளையில் பார் வேட்டைக்கு போகுதல் மாலை குதிரை வாகனத்தில் பார் வேட்டை. ஒன்பதாம் நாள் காலை பதினாறு கால் விமான சேவை இரவு சண்முகசாமி திருக்கல்யாணம் மற்றும் கயிலாய பர்வத ரதோற்சவம், பிரம்மன் தேர் சாரதியாக திகழ, சிவபெருமானும் , அம்பிகையும் இரு புறமும் உடன் வர சண்முகர் கைலாய பர்வத இரதத்தில் வீதி உலா வருகிறார். பத்தாம் நாள் தைப்பூசத்தன்று பழனியாண்டவர் விமானத்திலும், முத்துகுமார சுவாமி தங்க தொட்டியிலும் சேவை சாதிக்க்கின்றனர். மாலை துவஜாரோகணம்.



தங்க மயில் வாகனத்தில் அருள் பாலிக்கும்
முத்துகுமார சுவாமி




கான மயிலின் பின்னழகு


பதினோறாம் நாள் உற்சவர் தங்கத் தொட்டியில் எழுந்தருளி முத்தியாலுப்பேட்டை கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு காலை எழுந்தருளும் சுவாமி மாலை தெப்பல் உற்சவம் கண்டருளி திரும்பி வருகிறார். பன்னிரெண்டாம் நாள் மாலை பழனியாண்டவருக்கு உபநயன உற்சவம், நூதன 16 கால் ஸ்கந்த கிரி விமானத்திலும், உற்சவர் இரத்தின செட்டியார் பாரியாள் அபரஞ்சி அம்மாள் கண்ணாடி பல்லக்கு சேவை. பதிமூன்றாம் நாள் மாலை , தேவேந்திர போஹம், நு‘தன மங்களகிரி விமானத்தில் தேவ சேனாபதியாக பட்டாபிஷேகம், பதினான்காம் நாள் மாலை தெய்வயானை திருக்கல்யாணம் பின் வெள்ளை யானை வாகனத்தில் புறப்பாடு, இவ்வாகனத்தின் தும்பிக்கை, காதுகள் மற்றும் வால் ஆடுவது போல் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பதினைந்தாம் நாள் காலை வெள்ளியங்கிரி விமானத்தில் இராயபுரம் எழுந்தருளுகின்றார் உற்சவர் . மாலை வேடர் பறி உற்சவம். பதினாறாம் நாள் வள்ளியம்மை திருக்கல்யாணம், மயில் வாகன சேவை மற்றும் திருவூடல் உற்சவம். பதினேழாம் நாள் காலை கந்தப்பொடி உற்சவம், மாலை தவன உற்சவம். பதினெட்டாம் நாள் மாலை ஆறுமுக சுவாமி பவழக்கால் விமானத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு. பத்தொன்பதாம் நாள் மாலை உற்சவருக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் . விடாயாற்றி முடிந்து சங்காபிஷேகம் கண்டருளி நூதன சலவைக் கற்கள் அமைந்துள்ள ஆஸ்தானத்திற்கு உற்சவர் எழுந்தருளுகின்றார். மறு நாள் விஸ்வரூப தரிசனம், மதியம் உற்சவர் ரகஸ்ய அபிஷேகம் என வெகு சிறப்பாக வேத பராயணம், தேவார, திருவாசக, திருப்புகழ், தெய்வ மணி மாலை பாராயணத்துடன் வெகு சிறப்பாக தைப்பூச பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.



பச்சை மயில் வாகனத்தில் வள்ளி
தெய்வாணை அம்மையர்


வெளிப்பந்தலில் பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாள் வாகன சேவையும் ஒவியமாக வரையப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளன. நேரில் பார்க்க முடியாதவர்களும் எம்பெருமானின் பல்வேறு வாகன சேவையை காணவேண்டும் என்பதாலோ இவ்வாறு அமைத்துள்ளனர். பிரம்மோற்சவ காலங்களில் வெளியே பந்தலில் மாட்டப்படும் இந்த தஞ்சாவூர் சிற்பங்கள் மற்ற காலங்களில் குளக்கரை மண்டபத்தில் மாட்டப்பட்டுள்ளன.

இப்பதிவில் தாங்கள் காணும் படங்கள் எல்லாம் ஐந்தாம் திருநாள் மாலை உற்சவத்தின் காட்சிகள் ஆகும். பஞ்ச முர்த்திகளுடன் தங்க மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் தரிசனம் தருகின்றார். முத்துக்குமார சுவாமி. இந்த வருடம் ஐந்தாம் திருநாள் தைக்கிருத்தி்கையுடன் சேர்ந்து வந்தது மிகவும் சிறப்பாக அமைந்தது. அன்பர்கள் அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்.