Showing posts with label கந்தசாமி கோவில். Show all posts
Showing posts with label கந்தசாமி கோவில். Show all posts

Thursday, October 31, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -3

முன் பதிவில் மூலவர் கந்த சுவாமி எவ்வாறு தானே தன் அன்பனுருக்கு கனவில் வந்து தன்னை காட்டி இங்கு வந்து கோவில் கொண்டார் என்பதையும், மஹா கும்பாபிஷேகத்தன்று மாலை வன வள்ளி திருக்கல்யாண காட்சிகளையும், உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்தையும் கண்டு களித்தீர்கள்.  

இப்பதிவில் உற்சவர் முத்து குமார சுவாமி ஏன் முத்துக்களுடன் விளங்குகின்றார் என்ற உண்மையையும், அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவைகளையும் கண்டு களியுங்கள்.  

அன்பர்களின் தோளில் ஆடி ஆடி புறப்பாடு கண்டருளும் 
சிவசக்தி


முத்துக்குமார சுவாமி புறப்பாடு


புதிதாக வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் எழிலாக ஒளிரும் சுதை சிற்பங்களை காணுங்கள் அன்பர்களே.


தங்க சிம்ம வாகனத்தில்   விநாயகர்  முன் செல்ல ....

தங்க யாணை வாகனத்தில் அம்மையப்பர் திருவீதி உலா 


எழிலாக மலர்கள்களால் அமைக்கப்பட்டுள்ள பிரபையை பாருங்கள், கால புருஷன் மற்றும் பறக்கும் பச்சை கிளிகள் அருமையோ அருமை. படங்களை  பெரிதாக்கிப் பாருங்கள்.





தங்க கேடயத்தில் மீனாக்ஷி அம்பாள் 
அம்மனுக்கு வேறு மலர் அலங்காரம் 




சிறந்த சிற்பத்திற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற சூரபத்மன் வாகனம். வாகனத்தின் சிரசிலிருந்து பாதம் வரை செய்துள்ள வேலைப்பாட்டை கவனியுங்கள் அன்பர்களே. 


சூரபத்மன் வாகனத்தில் வீரபாகு

முருகனுக்காக சூரபதமனிடம் தூது சென்ற  நவ வீரர்களின் முதல்வரான வீரபாகு தேவர் இன்றைய தினம் சூரபத்மன் வாகனத்தில் திருவீதி உலா கண்டருளுகிறார்.  



சூரபதமன் வாகனத்தின் பின்னழகு


மூலவராக எம்பெருமான் இக்கோவில் வந்து எழுந்தருளியதும் ஒரு அற்புத லீலை, அதே போல உற்சவராக முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலிப்பதும் ஒரு அற்புத லீலைதான். அந்த அழகன் முருகனை, சிங்கார வேலனை, உற்சவராக வார்த்தெடுத்து எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை அமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண்ணி அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர். பின்பு அந்த எம்பெருமானின் அருளால் ஒரு முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் இன்றும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கச்சி வரதராஜப்பெருமாள்கள் ஆகியோரின் திருமுக மண்டலங்களில் முத்துக்கள் உள்ளது போல அந்த மால் மருகன் முகத்திலும் முத்துக்கள், எனவே அந்த அழகன் முருகனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர் இத்தலத்தில், கந்த வேளுக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் நடக்கும் சில நாட்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், ஆவணி அவிட்டம், கார்த்திகை ஏகாந்த சேவை தை பிரம்மோற்சவத்தின் முதல் நாள், தேரிலிருந்து இறங்கிய பின் , பிரம்மோற்சவம் முடிந்து உற்சவ சாந்தி அபிஷேகம் முதலியனஇனி இவ்வளவு சிறப்புப் பெற்ற இக்கோவிலை வலம் வரலாமா?

வாகன சேவை தொடரும்............