Sunday, July 12, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 14

போக்ராவிலிருந்து ஜோம்சம் ஜீப் பயணம்

போக்ரா விமான நிலையத்தில்  காத்திருக்கின்றனர்

இவர்களுக்கும் வானிலை சரியாக இல்லாததால் விமானம் இரத்தானது. ஒரு நாள் முழுவதும் காத்திருந்து மறு நாளும் விமான போக்குவரத்து நடைபெறுமா? இல்லையா என்பது தெரியாது என்பதால் இவர்கள் ஜீப் மூலமாக ஜோம்சம் செல்ல முடிவு செய்தனர். 



போக்ரா விமான நிலையத்தில் மலர்ந்திருந்த 
வண்ண வண்ண மலர்கள் 







போக்ராவில் இருந்து ஜோம்சம் விமானப்பயணம் வெறும் 45  நிமிடங்கள் தான் அதுவே ஜீப்பில் அல்லது பேருந்தில்  சென்றால் பாதை மலைப்பாம்பு போல  வளைந்து வளைந்து செல்கின்றது என்பதாலும்  தூரம் சுமார் 250 கி.மீ  என்றாலும் பாதை சரியில்லை வெறும் மண்பாதை என்பதால்  12 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். 



பயணமும் மிகவும் சிரமமானதுதான், குலுக்கி குலுக்கி போடும்,  இடுப்பு  கழன்று விட்டது என்று சொல்வோமே அது போல மிகவும்  சிரமமான பயணமாக இருந்ததாம். விமானம் இரத்தாகி விட்டால் மறு நாள் விமானத்தில் இடம் கிடைப்பதும் கடினம், மேலும் தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள்  வானிலை சரியாகாமல்  போகலாம் என்பதாலும். வேறு வழியில்லாமல் ஜீப்பில்  அல்லது சிறு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. 

போக்ரா பேருந்து நிலையம் 



நடுவில் சிரமபரிகாரம் செய்து கொள்கின்றனர் 

ஜீப் மூலமாக செல்லும் போது   பெனி, காசா, தாதோபாணி, மர்பா , டுகூசே    அகிய கிராமங்களை கடந்து செல்கின்றனர்.


காலை சூரிய ஒளியில் நீலகண்ட சிகரம்



ஜோம்சமில்  நீலகிரி மலைச்சிகரங்கள்
காலை சூரிய ஒளியில் மின்னும் அழகு

யாத்திரை அழைத்துச்சென்ற இராமானுஜ தாசர் 
 திருமலை நம்பி சுவாமிகள் 





தவுலகிரி மலைத்தொடரின் சில பனி படர்ந்த  மலைச்  சிகரங்கள் 


மிகவும் சிரமப்பட்டு ஜீப்பில் பயணம் செய்து ஜோம்சம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து  முக்திநாத் ஜீப் மூலம் சென்று நிறைவு ஏற்றத்தை நடந்தே சென்று முக்திநாத் அடைந்தனர்.  இவர்களுக்கு முக்திநாதர் தரிசனம் எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம். 

No comments: