Sunday, July 12, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 13

போக்ரா சுற்றுலா

இவர்கள் முதலில் போக்ரா வந்தடைந்ததால்  இருக்கின்ற சமயத்தில் போக்ராவின் சுற்றுலாவை மேற்கொண்டனர். இப்பதிவில்  பிந்தியாவாசினி ஆலயம் மற்றும் டேவிஸ் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்றனர். 

பிந்தியாவாசினி  கோவில்

விநாயகர்

சிவன் சன்னதி


கோவிலுக்கு நன்கொடை அளித்த அன்பர்கள் 

முதலில் இவர்கள்  சென்றது விந்தியாவாசினி ஆலயம் ஆகும். போக்ரா நகரின் காவல் தேவதை இந்த அம்மன் என்று போற்றப்படுகின்றாள். அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள் அன்னை. இப்பிரதேச அரசன் விந்திய மலையிலிருந்து அம்மன் சிலையை கொணர்ந்ததால் அம்மனுக்கு இந்தத்திருநாமம்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலய  வளாகம். ஒரு தனி சன்னதி வட இந்தியக்கோவில்கள் போல  விமானம்  உள் பக்கம் ஸ்ரீசக்ரம் அமைத்துள்ளனர். அம்மனை தொட்டு வணங்க அனுமதிக்கின்றனர். மேலும் கணபதி. பசுபதிநாதர், லக்ஷ்மி நாராயணர், இராதா கிருஷ்ணர், சீதா இராமன் சந்நிதிகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. ஒரு ருத்ராட்ச மரமும் ஆலய வளாகத்தில் உள்ளது. அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள் இவ்வாலயத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும்.  குன்றின் மேலிருந்து போக்ரா நகரத்தின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.

பிரம்மாண்ட காண்டா மணிகள் 

பிந்தியாவாசினி அம்மன் சன்னதி


சங்கட மோட்சன் ஹனுமான் 



பாதாளே சாங்கோ (Patale Chhango - Nether Fall) என்றும் தற்போது Devi’s  Falls என்றும் அழைக்கப்படும் அருவி. பேவா ஏரியிலிருந்து உருவாகி ஓடி வரும் ஒரு ஆறு இங்கே பாதாளத்தில் சென்று மறைந்து ஓடி மீண்டும் வெளியே வருகின்றாள். Davis என்ற ஐரோப்பியர் தவறி இந்நதியில் விழுந்து  பாதாளத்தில் சென்று மறைந்து பின்னர் வெளியே வந்ததால் அவர் நினைவாக தற்போது இப்பெயரில் அழைக்கப்படுகின்றது.

மோகன் -  வைத்தியநாதன்


போக்ராவில் இருந்து இவர்கள் ஜோம்சம் எவ்வாறு சென்றார்கள் என்பதை அடுத்த பதிவில் காணலாம். 

No comments: