Sunday, September 24, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 5

நான்காவது  ஆவரணம்


கற்காம்பாள் மஹா கௌரி அலங்காரம்


வடிவுடை அம்மன் வள்ளலாருக்கு உணவிட்ட லீலை







திருமயிலை ஐதீகம் 

ஆடும் மயிலாய் உருவெடுத்து அர்சித்த நாயகி




********



4 வது ஆவரணம்

ராகம்:      காம்போதி                                                                            தாளம்: அட

பல்லவி

கமலாம்பிகாயை  கனகாம் ஸுகாயை

கர்பூர வீடிகாயை நமஸ்தே நமஸ்தே     (கமலாம்பிகாயை)



அனுபல்லவி



கமலா காந்தாநுஜாயை காமேஸ்வர்யை அஜாயை
ஹிமகிரி தநுஜாயை ஹ்ரீம்கார பூஜ்யாயை


மத்யமம்
கமலாநகர விஹாரிண்யை கலஸமுஹ சம்ஹாரிண்யா
கமநீய ரத்ன ஹாரிண்யை  கலி கல்மஷ பரிஹாரிண்யை (கமலாம்பிகாயை)


சரணம்

ஸகல ஸௌபாக்யதாயகாம்போஜ சரணாயை
சம்ஷோபிண்யாதி ஸக்தி யுத சதுர் தாவரணாயை
ப்ரகட சதுர்தஸ புவந பரணாயை
ப்ரபல குருகுஹ ஸம்ப்ரதாயாந்த: கரணாயை
அகளங்க ரூப வர்ணாயை அபர்ணாயை ஸுபர்ணாயை
ஸூக ரத்ருத  சாப பாணாயை  ஸோப நகர மநு கோணாயை
மத்யம்
ஸகுங்குமாதி லேப நாயை சரா சராதி கல்ப நாயை
சிகுர விஜித நீல கநாயை  சிதா நந்த பூர்ண கநாயை (கமலாம்பிகாயை)


பொன் போல் மிளிரும் மேலாடையை அணிந்தவளும்  பச்சை கர்ப்பூர   மணம் கமழும்  தாம்பூலமணிந்து சிவந்த அதரங்களையுடைவளுமான கமாலாம்பிகைக்கு மீண்டும் மீண்டும் எனது  நமஸ்காரம்.

திருமாலின் சோதரியும், காமேஸ்வரரின் பட்ட மகிஷியும், பிறப்பற்றவளும். மலையரசன் இமவானின் பொற் பாவையும், ஹ்ரீம் என்ற மஹா மந்திரத்தால்  உபாசிக்கப்படுபவளும்,  கமலாநகரம் எனப்படும் திருவாரூரில் திகழ்பவளும், கொடியவர்களான அசுரர்களை வென்றொழித்தவளும், எழிலான் கான ரத்னமாலைகளை அணிந்து ஒளிவீசுபவளும், கலி காலத்தில் உண்டாகும் தோஷங்களுக்கு பரிஹாரமாக விளங்குபவளுமான கமலாம்பிகையை நமஸ்கரிக்கிறேன்.

சகல சௌபாக்கியங்களை தரவல்ல திருவடிகளை உடையவளும், சம்ஷோபிணீ, சர்வ வித்ராவிணி  முதலிய  பதினான்கு சக்திகளோடு  கூடிய நாலாவது ஆவரணம் உடையவளும், பதிநான்கு லோகங்களையும் தன்னுளடக்கியவளும், புகழ் மிக்க குருகுஹனின் ஸம்பிரதாயங்களுக்கு ஆதாரமாக உள்ளவளும், மாசற்ற நிர்மல  மேனியழகையுடையவளும், சிவனை குறித்து தவம் செய்யும் போது காய்ந்த இலைகளைக்கூட உண்ணாமல் விரதம் காத்து அதனால் அபர்ணா என்று பெயர் பெற்றவளும் ஸுபர்ணா என்ற தேவதையாக இருப்பவளும், அழகிய திருக்கரங்களில் வில்லும் அம்பும் கொண்டவளும், சோபை மேலிடும் வகையாக மனு கோணம் போன்ற பதிநான்கு கோண சக்கரத்திற்கு நாயகியும்  குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி  முதலியவற்றின் மணங்கமழும் குழம்பை திருமேனியில் பூசியுள்ளவளும்,   அசையும் அசையாப் பொருள்களை படைத்தவளும், கருநீல முகிலை பழிக்கும்  கூந்தலை உடையவளும், சிதாநந்த பரிபூரண வடிவமாக  விளங்குபவளுமான கமலாம்பிகைக்கு வணக்கம்; வந்தனம்.


ந்நான்காம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வ சௌபாக்ய தாயக சக்ரம் ஆகும். இச்சக்ரம் பதினான்கு முக்கோணங்களாக  விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுரவாசினி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி சம்பிரதாய யோகினி. அவஸ்தை ஈச்வர விசாரம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் சம்ஷோபிணி, சர்வ வித்ராவிணி  முதலான பதினான்மர் ஆவர். 


 முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு


                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Saturday, September 23, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 4

மூன்றாம்  ஆவரணம்

திருமயிலை  கற்பகாம்பாள்   காமதேனு வாகனத்தில் 
மஹாகௌரி கொலு 


அன்னையின் பின்னழகு
( முத்து சடைகள், மலர் சடைகள்)

மஹிஷாசுர மர்த்தினி ரம்ய கபர்த்தினி ஷைலசுதே!


இவ்வருடம் புதிதாக அம்மையப்பரின் அருட்காட்சிகளை 
ஊஞ்சல் மண்டபத்தில் அமைத்துள்ளனர் 




உஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலை நாதர்
ருத்ராட்சத்தால் கோலம் 



**************

3வது ஆவரண கீர்த்தனை

ராகம் -  சங்கராபரணம்                                                                     தாளம் - ரூபகம்
பல்லவி

ஸ்ரீகமலாம்பிகயா கடாக்ஷிதோஹம் அம்ப
ஸச்சிதாநந்த பரிபூர்ண ப்ரஹமாஸ்மி          ( ஸ்ரீ கமலாம்பிகயா)

அனுபல்லவி

பாகசாஸநாதி ஸகல தேவதா ஸேவிதயா
பங்கஜாஸநாதி பஞ்ச க்ருத்யாக்ருத்-பாவிதயா

மத்யமம்
ஸோகஹர சதுரபதயா மூகமுக்ய வாக்ப்ரதயா
கோகநத விஜயபதயா குருகுஹ தத்த்ரைபதயா  (ஸ்ரீ கமலாம்பிகயா)

சரணம்
அநங்க குஸுமாத்யஷ்ட சக்த்யாகாரயா
அருணவர்ண ஸம்சோக்ஷாபன சக்ராகாரயா
அநந்த கோட்யண்டநாயக  ஸங்கரநாயிகயா
அஷ்டவர்காத்மக குப்ததரயா வரயா

மத்யமம்
அநங்காத் யுபாஸிதயா அஷ்டதளாப்ஜஸ்திதயா
தநுர் பாணதர கரயா தயாஸுதா-ஸாகரயா   (ஸ்ரீ கமலம்பிகயா)


ஸ்ரீ கமலாம்பிகையின் கடைக் கண் பார்வையால் ஆளானேன். அதனால் நான் பரிபூரண பிரும்மாக ஆகிட்டேன்எனது ஸ்வரூபம் சத்+சித்+ஆனந்தமாகும்.  அதாவது நான் என்றென்றும் அழிவின்றி நிலையாக இருப்பேன். ஞானமாக விளங்குவேன். ஆனந்தமாகவும் விளங்குவேன்.

 இந்திரன் முதலான  சகல  தேவர்களாலும் வணங்கப்பட்டவள். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அநுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில்களை செய்பவள், பிரும்மா, விஷணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச ப்ரும்மாக்களால் கௌரவிக்கப்பட்டவள்.

துன்பங்களை அறவே நீக்கும் சக்தியுள்ள திருவடிகளை உடையவள், மூககவி போன்றவர்களுக்கு தன் மேல்  கவி மழைபாடும் பேச்சுத்திறன் அளித்தவள், செந்தாமரையை வெல்லும் செம்மாந்த  திருவடிகளை உடையவள், தந்தையின் தோள் மீதமர்ந்து தகப்பனான சிவனனுக்கேஅஹம் ப்ரஹ்ம் அஸ்மி” என்ற பதங்களின் சொரூபீயாக இருப்பவள். அப்படிப்பட்ட கமலாம்பிகையின் கருணைக்கு ஆட்கொள்ளப்பட்டேன்.

அநங்ககுசுமா முதல் அநங்கமாலினி வரையான எட்டு சக்திகளாக விளங்குபவள். சிந்தூர வர்ணமான இளம் சிகப்பு நிற சம்ஷோபண மூன்றாவது ஆவரண சக்ரத்தில் உறைபவள், (இது வான வெளியில் கிழக்கு முகமாகச் செல்லும்), கோடானு கோடி  அண்டங்களின் தலைவனாக விளங்கும் சங்கரனின் நாயகியாக விளங்குபவள், க ஆகிய எட்டு வர்கம் எனப்படும் எண்வகை வாக்குகளில் மறைவாக பொதிந்து வரங்களை அருளுபவள், மன்மதாதியர் என அழைக்கபடும் மனு, சந்திரன், குபேரன், லோபாமுத்ரா, மன்மதன், அகத்தியர், அக்னி, சூர்யன், இந்திரன், சுப்ரஹ்மண்யன், பரமசிவன், தூர்வாஸர் ஆகிய பன்னிருவரால் உபாசிக்கபபட்டவள், எட்டு தளமுடைய ஸம்ஷோபன சக்ரத்தில் வசிப்பவள், வில், அம்பு போன்ற ஆயுதங்களை திருக்கரங்களில்  தரித்திருக்கும் சத்திரிய தேவதை, கருணை என்ற அமுத ப்ரவாகமாக இருப்பவள். அக்கமலாம்பிகையால் நான் கடாக்ஷிக்கப்பட்டேன்.

இம்மூன்றாம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வஸம்க்ஷோபன சக்ரம் ஆகும். இச்சக்ரம் அஷ்டதள பத்மமாக (எட்டிதழ் தாமரை) விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுரசுந்தரி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி குப்ததர யோகினி. அவஸ்தை சுஷுப்தி ஆகும். இதில் விளங்கும் தேவதைகள்  அனங்க குஸுமா முதல் அனங்க மாலினி ஈறான எண்மர் ஆவர். இக்கீர்த்தனை மூன்றாவது வேற்றுமையில் அமைந்துள்ளது.  
                                
        முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Friday, September 22, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 3

இரண்டாம்  ஆவரணம்



அசோக் நகர் சொர்ணாம்பாள் கொலு





  தனலக்ஷ்மி அலங்காரம்









மீனாக்ஷி அலங்காரம் 





**********

இரண்டாவது ஆவரண கீர்த்தனம் 

ராகம்: கல்யாணீ                                                                                                            தாளம்: ஆதி

பல்லவி

கமலாம்பாம் பஜரே ரேமாநஸ கல்பித
மாயா கார்யம் த்யஜரே. (கமலாம்பாம்)

அனுபல்லவி
கமலா வாணீ ஸேவித பார்ஸ்வாம்
கம்பு ஜயக்ரீவாம் நததேவாம்

மத்யமம்
கமலாபுர ஸதநாம் மிருதுகதநாம்
கமநீய ரதநாம் கமலவதநாம் (கமலாம்பாம்)

சரணம்
ஸர்வாஸாபரிபூரக- சக்ர ஸ்வாமிநீம் பரமசிவகாமிநீம்
தூர்வாஸார்ச்சித குப்த- யோகிநீம் துக்க த்வம்ஸிநீம் ஹம்ஸிநீம்
நிர்வாண நிஜ ஸுக ப்ரதாயிநீம் நித்ய கல்யாணீம் காத்யாயநீம்
ஸர்வாணீம் மதுபவிஜய வேணீம் ஸத்குருகுஹ ஜநனீம் நிரஞ்சநீம்

மத்யமம்
கர்வித பண்டாஸுர பஞ்ஜநீம் காமா கர்ஷிண்யாதி ரஞ்ஜநீம்
நிர்விசேஷ சைதந்ய ரூபிணீம் உர்வீ  தத்வாதி ஸ்வரூபிணீம் (கமலாம்பாம்)


இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் கல்யாணீ ராகத்துக்கே உரித்தான ஜீவ ஸ்வரமான நீ என்ற ஸ்வரத்தை கிருதி முழுவதும் பின்னி இழைந்தோடச் செய்துள்ளார் நாதயோகி தீக்ஷிதர் அவர்கள்.

ஓ மனமே!  திருவாரூரில் குடிகொண்டிருக்கும் கமலாம்பிகையை துதி செய்வாயாக. மாயை விளைவிக்கும் ஆசை, பாசம்  ஆகியவற்றை துறப்பாயாக!

அலைமகளும் கலைமகளும் இருமருங்கிலும் நின்று சேவித்த வண்ணம் இருப்பவளும், வெண்சங்கை வெல்லும்  கழுத்தை உடையவளும், தேவர்களால் பூஜிக்கப்படுபவளும், கமலாபுரத்தில் கோயில் கொண்டுள்ளவளும், மிகவும் மெதுவாகவும் இனிமையாகவும் பேசும் தன்மையுடையவளும், மாதுளை முத்துக்கள் போன்ற  அழகிய பற்களை உடையவளும், அன்றலர்ந்த தாமரையின் மலருக்கு நிகரான திருமுகமுடையவளுமான கமலாம்பாளை துதி செய்வாயாக.

ஸ்ரீவித்யா உபசனையின் அங்கமான ஸர்வாசாபரிபூரக சக்கரத்தின் ஈஸ்வரியும், பரமசிவனின் மனதுக்குகந்தவளும், துர்வாச மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட குப்தயோகினியாக இருப்பவளும், துயரங்களை துடைப்பவளும், அஜபா என்ற மந்த்ர ஸ்வரூபியாக இருப்பவளும், கைவல்யம் என்னும் உண்மையானதும் மேலானதுமான முக்தி நிலயை அளிப்பவளும், அழிவற்ற  மங்கல ஸ்வரூபிணி, காத்யாயினியாக அவதாரம் செய்தவளும், சர்வேஸ்வரனின் பட்ட மஹிஷியாக இருப்பவளும், கருவண்டுகளின் கருமையை மிஞ்சும் கருங்கூந்தலை உடையவளும், ஞானபண்டிதனான குருகுஹனை ஈன்றவளும், மாசற்றவளும், கர்வம் பிடித்த பண்டாஸுரனை வதம் செய்தவளும், காமகர்ஷணி போன்ற தேவதைகளுக்கு சந்தோஷம் அளிப்பவளும், விகல்பங்களற்ற சைதன்யாரூபியாக இருப்பவளும், பூ தத்வம் முதலான தத்துவங்களின் இருப்பிடமாக இருப்பவளுமான கமலாம்பிகையை துதி செய் மனமே.

இந்த இரண்டாவது ஆவரணம்  சோடஷ தள கமலம் ஆகும். இச்சக்கரம் சர்வாசாபரிபூரகம் என்பதாம். இதில் அட்டித்து விளங்கும் யோகினி குப்தயோகினி ஆவாள்.  திரிபுரேசி இச்சக்கரத்தின் நாயகி. அவஸ்தை ஸ்வப்னம் ஆகும். இதில் விளங்கும் சக்தி தேவதைகள்  காமாகர்ஷீணீ முதலிய  பதினாறு  ஆகர்ஷண சக்தியர் ஆவர். ஜீவாத்மாவின் கனவு நிலையையும் சூட்சும சரீரத்தையும் அதனால் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கின்றது. 

                                      முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . .