Showing posts with label வெள்ளி மயில் வாகன சேவை. Show all posts
Showing posts with label வெள்ளி மயில் வாகன சேவை. Show all posts
Wednesday, February 27, 2013
Tuesday, February 26, 2013
செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -10
ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
( திருவீதி உலா - 1)
தனி யாணை சகோதரனின் எழிற் கோலம்
மூஷிக வாகனத்தில் மூத்தவன் கணேசன்
அருமை குமரனுடன் அம்மையப்பர்
இடப வாகனத்தில் பிரதோஷ நாயகர்
வெள்ளி மயில் வாகனத்தில் சிவ சுப்பிரமணிய சுவாமி
முருகப்பெருமான்
ஓம் என்னும் தாரக மந்திரம் சிவனுக்கு மொழிந்த குரு மூர்த்தி
அகத்தியருக்கு அருள் ஞானம் அளித்த ஞான தேசிகன்
முருகன் , குமரன், ஆறுமுகன், திருமால் மருகன்
சிவகுமாரன், ஸ்கந்தன், மலைமகள் பார்வதி பாலன்
ஒளி பொருந்திய ஞான சக்தி வேலை ஏந்தியவன்
கார்த்திகேயன், கஜ முகனுக்கு இளையவன்
குகன், மயில் ஏறும் பெருமாள்
சூரனை சம்ஹாரம் செய்த கருணை வள்ளல்
சுப்பிரமணியன், தேவ சேனாதிபதி
கடம்ப மாலை அணிந்த கதிர்வேலன்
இச்சா சக்தி வள்ளி, கிரியா சக்தி தெய்வாணை மணவாளன்
செவ்வேள், காங்கேயன், சிலம்பன்
ஆயிரம் பெயர் கொண்ட அழகன்
தூயவன் சேவற் கொடியோன்
ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் கூறுபவர் சிந்தை குடிகொண்டோன்
அழகன் முருகனை துதி செய்தால் நீங்களும் மலம் ஒழித்து மெய்ஞ்ஞான அருள் பெறலாம்
ஓம் என்னும் பிரணவப் பொருளோன்
தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாத சுவாமி அந்த பிரணவ வடிவில் ( ஓம் என்னும் மலர் அலங்காரத்தை கவனியுங்கள்) அன்பர்களால் 2003ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் ஆனந்தமாக எழுந்தருளி திருவீதி உலா வந்து அன்பர்க்கு அருளும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அன்பர்களாகிய தங்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். தரிசனம் செய்து கந்தன் கருணைக்கு பாத்திரமாகும் படி வேண்டிக்கொள்கிறேன்.
பச்சை மயில் வாகனத்தில் தெய்வ நாயகி
பச்சை மயில் வாகனத்தில் வள்ளி நாயகி
பின்புற அலங்காரம்
முழுவதும் மலர்களாலேயே உருவாக்கப்பட்ட இந்த பலகை வெள்ளி மயில் வாகன சேவையின் போது பின் பக்க அலங்காரத்திற்கு பயன் படுத்தப் படுகின்றது. இந்த வருடம் " யாம் இருக்க பயம் ஏன் என்று " கூறும் அபயக் கோலம்.
ஐந்தாம் திருநாள் அருட் கோலங்கள் தொடரும்.....
செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -9
ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
(மண்டப அலங்காரம்)
ஐந்தாம் திருநாள் காலை சிவிகை உற்சவம்
அழகு முருகனின் அருட் கோலங்கள் அதிகமாக உள்ளதால் இந்த ஐந்தாம் நாள் பதிவுகளை மூன்று பாகங்களாக பதிவிட உள்ளேன். இப்பதிவில் உள்ள கோலங்கள் எல்லாம் மண்டப காட்சிகள். ஐந்தாம் நாள் இரவு தொண்டை மண்டலத்தில் எப்போதும் விசேஷ உற்சவம். பஞ்ச மூர்த்திகளும் தம்முடைய வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இவ்வாலயத்திலும் ஐந்தாம் நாள் இரவு, விநாயகர் மூஷிக வாகனத்திலும், பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்திலும், முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், தேவியர் இருவரும் பச்சை மயில் வாகனத்திலும். எல்லா நாட்களையும் விட சிறப்பு அலங்காரம் இன்றுதான்.
விநாயகர், சிவ சக்தி, வள்ளி நாயகி
தெய்வ நாயகி - சண்டிகேஸ்வரர்
சிவ சுப்பிரமணிய சுவாமி
தெய்வ நாயகி - சண்டிகேஸ்வரர்
சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கீழே உள்ள படம் அச்சிட ஏதுவாக திருத்தப்பட்ட படமாகும்.
ஐந்தாம் திருநாள் அருட் கோலங்கள் தொடரும்.....
Subscribe to:
Posts (Atom)

























