Showing posts with label பம்பை. Show all posts
Showing posts with label பம்பை. Show all posts

Friday, December 29, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -17

பெரியானை வட்டம் 


இப்பதிவுகளையும்  காணலாமே   : 

       4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  18   19   20   21





கரிமலை இறக்கம் கண்டவுடனே
திருநதி பம்பை அடைந்திடுவார்.

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் 
பம்பையில் நீராடி 
சங்கரன் மகனைக் கும்பிடுவார் 
சங்கடம் இன்றி ஏறிடுவார் 

ஐயனின் சன்னிதானம் அமைந்துள்ள சபரிமலை ஏறுவதற்கு முன்னர் தங்கும் தாவளம் பம்பா பள்ளத்தாக்கில் உள்ள பெரியானை வட்டம் அல்லது சிறியானை வட்டம் ஆகும். கங்கை தி போல் புண்ணிய தியாம் பம்பையில் முதலில் நீராடுகின்றனர். பம்பை தி ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் புண்ணிய தியாகும். ஐயப்பன் பாலனாக பந்தளராஜவிற்கு கிடைத்தது பம்பையின் கரையில்தான். மகிஷியை வதம் செய்ய ஐயன் காட்டிற்குள் வந்த போது தேவர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டில் ஐயனுக்கு பொன் சிம்மாசனம் அமைத்து அதில் மணிகண்டனை அமர்த்தி அபிஷேகம் செய்வித்து பூசை செய்தனர் அந்த அபிஷேக தீர்த்தம் பம்பையில் ஓடியது. இன்றும் பம்பை பொன்னம்பல மேட்டில்தான் உருவாகின்றது.




இராமபிரான் பம்பையாற்றின் கரையில் தசரதருக்கு பித்ரு காரியம் செய்தார் என்பதால்  பல பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் அளித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.



பம்பா விளக்கு 

பம்பையின் கரையில் சக்தி பூசை செய்கின்றனர். அன்னதானப் பிரபுவான ஐயப்பன் அன்னதானத்தில் இந் பம்பா சதய விருந்தில் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கலந்து கொள்கிறார் என்பது ஐதீகம். எனவே பல பக்தர் குழாங்கள் பம்பையின் கரையில் தங்கி  அன்னதானம் செய்கின்றனர். கன்னி சாமிகளுக்கு ஒரு அருமையான பாடம் இங்கு கிடைக்கின்றது. ஐயப்பன் தன் வலதிருக்கரத்தினால் காட்டும் முத்திரை அன்று சனகாதியர்களுக்கு மௌன குருவாக சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தியாக காட்டிய சின்முத்திரை ஆகும். ஜீவான்மாகிய நாம் பரமாத்வாகிய இறைவனுடன் ஒன்ற வேண்டுமென்றால்  விட வேண்டியவை மூன்று மலங்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் விட வேண்டும். எனவே அடியார்கள் உண்ட இலையில் படுத்து உருளும் வழக்கம் முன்பு இருந்தது, இன்று இலைகளை தலையில் சுமந்து சென்று பம்பையில் விட்டுவிட்டு வருகின்றனர். இதனால் தான் என்ற அகங்காரத்தையும், தனது என்ற மமகாரத்தையும் விட்டொழிக்கின்றனர். மேலும் ஸ்தூல,  சூஷ்ம, காரண தேகாபிமானத்தையும் ஒழித்துக் கட்டுகின்றனர்.


பம்பையில் புனித நீராடல்



இத்தாவளத்தில் தங்குவதற்கேற்ற பல விரிகள் உள்ளன. குளிப்பதற்கும்,  மல ஜலம் கழிப்பதற்கேற்ற  வசதி மற்றும் மூலிகை குடிநீர் வசதி, மற்றும் அன்னதானம் ந்து கொண்டிருப்பதால் உணவிற்கும் பஞ்சமில்லை எனவே பெருவழியில் வரும் அனைத்து பக்தர்களும் இங்கு தங்கிச் செல்கின்றனர்.

பெரியானை வட்டத்தில் தங்கி இருக்கும் போது கன்னி சாமிகள் 108  அடுப்புகளில் சாம்பல் எடுத்து வருகின்றனர். பின்னர் அதை வஸ்திரகாயம் செய்து  அதை பம்பா பஸ்மம் என்று பயன்படுத்துகின்றனர். 

பம்பையின் கரையில் தங்கி இருக்கும் போது கன்னி சுவாமிகள் பம்பா விளக்கும் ஏற்றுகின்றனர். மூங்கில் அல்லது குருத்தோலைகளால் ஒரு மிதக்கும் தேர் போன்ற அமைப்பில் ஒரு சிறு தோணி செய்து அதை வண்ண வண்ண  காகிதங்களைக் கொண்டு அலங்கரித்து அதில் விளக்கேற்றி இரவில் பம்பையில் மிதக்க விடுகின்றனர். மகர ஜோதிக்கு முதல் நாள்  சிறப்பாக நூற்றுக்கணக்கான பம்பா விளக்குகள்  ஏற்றப்படுகின்றன. அதைக் காண்பதே  ஒரு பெரிய பாக்கியம்.




சிறப்பு தரிசன  சீட்டு  வழங்கும் இட்ம் 



பம்பைக் கரையில் 



பெரியானை வட்டத்தில் தங்கும் போது அடுத்து மலையேறுவதற்கான ஓய்வும் கிடைக்கின்றது அடுத்து ஐயனை தரிசனம் செய்வதற்கு முன் பம்பா கண்பதியை தரிசிக்கலாம் அன்பர்களே. 
குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Wednesday, December 27, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -16

கரிமலை ஏற்றம் கடினம்!  கடினம்! . . . 

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் 
கருணைக் கடலும் துணை வருவான்
கரிமலை இறக்கம் கண்டவுடனே
திருநதி பம்பை அடைந்திடுவார்.

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

இப்பதிவுகளையும்  காணலாமே   :        4  5  6  7  8  9  10  11  12  13  14  15  17   18   19   20   21 


கரிமலை ஏற்றம் கடினம் கடினம் என்று ஏன் பாடினார்கள் தெரியுமா? . பெருவழிப்பாதையில் உயரமான மலை மட்டுமல்ல மிகவும்  செங்குத்தாகவும் இம்மலை அமைந்துள்ளது.   எனவே மலையேற்றம் மிகவும் கடினமாகவே உள்ளது. மெல்ல மெல்லத்தான் ஏற வேண்தும். கருணைக்கடவுளான ஐயப்பனும் உடன் வருகின்றார். கரி மலை ஏற்றம் ஐந்து கி.மீ தூரம் இறக்கமும் அதே தூரம்தான்.


அலகு குத்திக்கொண்டு வரும் ஒரு பக்தர் 

இங்குள்ள மலையின் மண் கருப்பு நிறத்தில் இருக்கும். இதனால், இந்த மலைக்கு "கருமலை' என்ற பெயர் இருந்து "கரிமலை' என மாறிவிட்டது என்பர். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருப்பதால், இம்மலையைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்




                                                                                  பிரம்மாண்ட மரங்கள்   



நமது பிரம்மச்சரிய விரதத்தை சோதிக்கின்ற மலை கரிமலையாகும். கரிமலையில் ஏறும் போது நாம் செய்த தவறுகள் எல்லாம் தானாகவே வெளி வரும் ஐயனின் அருளினால் மட்டுமே கடினமான் இம்மலையை ஏற மற்றும் இறங்க முடியும். எந்த விக்னங்களும் வராமல் இருக்க கணபதியை வேண்டிக்கொண்டு மலையேற வேண்டும். கரிமலையில் சரண கோஷத்தைத் தவிர மற்ற எந்த தேவையில்லாத பேச்சுக்களையும் பேசக்கூடாது.  


அடர்ந்த கானகம் 


அடர்ந்த கானகம் இடையே ஒற்றை வழிப்பாதைமுப்புரி நூல் போல மூன்று பிரிவாக உள்ளது பாதைஉயர் பகுதி பாறைகள் அதிகம்  குதித்து குதித்து செல்லும் வகையில் உள்ளது. அதில் இளைஞர்கள் செல்ல ஏற்றது.  கீழ்ப்பகுதியில் நடக்கும் போது சிறிது தவறினால்  கரணம் தப்பினால் மரணம் என்பது போல கிடு கிடு பள்ளத்தில் மரங்களுக்குக்கிடையில் விழ வேண்டியதான் எனவே அதில் செல்லாமல்  நடுவில் செல்வது உத்தமம்.  இம்மலையில் பாறைகளில் அதிகம் ஏறிச்செல்லவேண்டும் மேலும் பல சுவாமிகள் தங்களை முந்திச் செல்ல முயல்வார்கள்அவர்களுக்கு பாதை விட்டு விலகி நிற்கும் போதும் மலையின் பக்கம் நிற்பது நல்லதுகரிமலையேற்றத்திற்கு சுமார் 3 மணி நேரம்  ஆகும்.


              
                                                   வழியிலெல்லாம் வேர்கள் தடுக்குகின்றன... 

உச்சியை நெருங்கும் சமயத்தில் பல பக்தர்கள் மலை ஏறி வரும் சுவாமிகளுக்கு விசிறி வீசுகின்றனர், குளுகோஸ் அளிக்கின்றனர். கரி மலை உச்சியில்  கரிமலை நாதர் மற்றும் கரிமலை பகவதி எழுந்து அருள் பாலிக்கின்றனர். சுவாமி தனது திவ்ய அஸ்திரத்தினால் உருவாக்கிய கிணறும் உள்ளது.. ஐயப்பன் இங்குதான் உதயணன் என்ற கொள்ளைக்காரனை வென்றதாகவும் சொல்லப்ப்படுகின்றது.  அகில பாரத சேவா சங்கத்தினர் கரிமலை உச்சியிலும் அன்னதானம் செய்கின்றனர்அதிகமான விரிகள் உச்சியில் இல்லை என்பதால் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு இறக்கத்தைத் தொடங்க வேண்டும் என்பதால் கரிவிலாந்தோடிலிருந்து இருள் நேரத்தில் புறப்படாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கரிமலை இறக்கமும், ஏற்றம் போலவே அவ்வளவு கடினமானது.



கரி மலையேற்றம் கடினம் கடினம் சற்று ஓய்வெடுங்கள் என்று கூறும் கடைக்காரர் 


இறக்கத்தில் விரிகள் கிடையாது. இடை இடையே நீர் வாய்வதால் பல இடங்களில் வழுக்கும் பாறைகள்தடுக்கும் மர வேர்கள்பெரிய பெரிய பாறைகள் அனைத்தையும் கவனித்துக்கொண்ட செங்குத்தான  மலையில் இறங்க வேண்டும்மேலும் இரவு நேரத்தில் பாதை மாறி விட்டால் கானகத்திற்குள் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.  ஆகவே இரவு நேரங்களில் மலையேற வேண்டும் அதுவும் குறிப்பாக கரிமலை ஏற வேண்டாம்.



கரிமலை மஞ்சள் பொடி  கோட்டை நாயகி
வனதுர்க்கை 


கரிமலை இறக்கம் 


இவ்வனம் விலங்குகளுக்கு உரியது. அவைகளுக்கு துன்பம் தரக்கூடாது என்பதற்காகவும் இரவில் பயணம் செய்யாதிருப்பது ல்லது.  இது வரை பெரிய பாதையில் பக்தர்களுக்கு வன விலங்குகளால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காரணம், பெரிய பாதையை திறப்பதற்கு முன்னால் செய்யப்படும் பூசையாகும். அது போலவே வனதேவதைகளுக்கும் பூசை டைபெறுகின்றது.  மகரஜோதிக்குப்பின் மாளிகைப்புரத்தம்மனின் சன்னதியில்  வன தேவதைகளுக்காஅ சிறப்பு குருதி பூசையும்  டைபெறுகின்றது.  இங்குள்ளவர்கள் யானைகளை ஐயப்பன் வாகனமாக கருதி, அவைகள் பக்தர்கள் வரும் காலத்தில் வந்து துன்பம் தராமல் இருந்ததற்காக  விரியை காலி செய்து கொண்டு செல்லும் போது தர்பூசணிப்பழம், வாழைப்பழ சீப்புகள் ஆகியவற்றை யானைகளுக்காக விட்டு செல்கின்றனர்


கரிமலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் பம்பா சமவெளியை அடைகின்றோம். சிறிய யானை வட்டமும், பெரியானை வட்டமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பெருவழியில் செல்லும் சுவாமிகள் இங்கு தங்கியே பின்னர் சபரி மலை செல்கின்றனர். பம்பா நதியின் பெருமையை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .


Wednesday, September 7, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 9

திருவண்வண்டூர் – பாம்பணையப்பன்




பஞ்ச பாண்டவர்களில் நகுலன் வழிபட்ட தலம், நாரதருக்கும், மார்க்கண்டேயருக்கும் பெருமாள்  பிரத்யக்ஷம். கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையின் வடபால் அமைந்த தலம்.  எனவே நம்மாழ்வாரும் இத்திருப்பதியை  “தேறுநீர் பம்பை வடபாலைத்  திருவண்வண்டூர்” என்று பல்லாண்டு பாடியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சித்திரம்

பாண்டவர்களில் நகுலன் புனர் நிர்மாணம் செய்து வழிபட்ட ஆலயம் என்பதால்  பாண்டவர் ஊர் என்பதே வண்வண்டூர் என்று மருவி இருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. திருவன் என்ற மலையாளச் சொல்  திருமாலைக் குறிக்கின்றது எனவே திருவன்+உண்டு+ஊர் என்பதே திருவண்வண்டூர் ஆகியதாகவும் ஒரு கருத்து உள்ளது.



செங்கண்ணூரிலிருந்து வடக்கே 6 கி.மீ  தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  தற்போது திருவமுண்டூர் என்றழைக்கப்படுகின்றது. எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் செங்கண்ணூரில் இறங்கி பின்னர் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம்.  தங்கும் வசதிகள் ஒன்றுமில்லை.   திருவல்லாவில் இருந்து  வந்தும் சேவிக்கலாம்.

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்!
விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண்வண்டூர்
 
கடலின் மேனிப்பிரான் கணணனை நெடுமாலைக்கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே
 ( தி.வா.6-1-4 )

பொருள்: பிரிவு இல்லாத போகத்திலே மூழ்கிச் சேர்ந்து அனுபவிக்கின்ற இளமை பொருந்திய அன்னங்களே! குளிர்ந்த திருவண்வண்டூரில் பிரிதல் இல்லாத வேதத்தின் ஒலியானது  ஒலித்துக் கொண்டிருக்கும்; அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் கடல் போன்ற நிறத்தை உடையவன், உபகாரகன்; கண்ணபிரான்; அந்த நெடிய திருமாலைக் கண்டு ஒரு பெண்ணானவள் உடல் நிலைகுலைந்து உருகுகின்றாள் என்று உணர்த்துங்கோள் என்று ம்மாழ்வார்,   புருஷோத்தமான இராமன் ரக்ஷண தைர்யம் அதாவது தன்னை சரணடைந்தவர்களை காக்கும் உறுதி என்னும் தன் குணத்தை மறந்து தன்னை இரட்சிக்க மறந்து விட்டார் என்று  பறவைகளையும் வண்டையும் தூது விடும் பாவத்தில் மங்களாசாசனம் செய்த திருவண்வண்டூரின்

மூலவர் - பாம்பணையப்பன், கமலநாதன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - கமலவல்லி நாச்சியார்.
தீர்த்தம் - பம்பா தீர்த்தம்.
விமானம் - வேதாலய விமானம்.
ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், நாரதர்.

மூலவரின் திருநாமம் பாம்பணையப்பன், என்றாலும் பெருமாள் சதுர் புஜங்களுடன் நின்ற கோலத்தில்தான் சேவை சாதிக்கின்றார். பம்பையின் வடபால் அமைந் ஆலயம் என்பதால் பம்பை அணை என்பதே பாம்பணையாக மருவியிருக்கலாம் என்றொரு கருத்து உண்டு. எனவே இத்தலம் ”பம்போத்தர க்ஷேத்திரம்” என்றும் அழைக்கப்படுகின்றது.  ஆதி சேஷனின் அரவணைப்புடன் அருள் பாலிப்பவர் என்பதால் இந்த திருநாமம் என்பாரும் உண்டு. ம்மாழ்வார் இப்பெருமாளை   பக்தர்களை இரட்சிக்க உறுதி கொண்ட புருஷோத்தமனாக, இராமனாக அனுபவிக்கின்றார். 

பிரம்மதேவர் சனகாதியர்கள் நால்வரையும் சிருஷ்டியை விருத்தி செய்வதற்காக படைத்தார், அவர்களுக்கு நாரதர் ஞானத்தை போதித்தார்  எனவே  அவர்கள் தவ வாழ்வை மேற்கொண்டனர்,  அதனால் பிரம்மதேவன்  நாரதர் மேல் கோபம் கொண்டு "நீ எந்த இடத்திலும் நிலையாக இருக்க முடியாது"  திரிலோக சஞ்சாரியாகக் கடவது என்று சாபமிட்டார். இதனால் நாரதர் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் இத்தலத்திற்கு வந்தார் அப்போது அவருக்கு ஒரு அமைதி கிட்டியது எனவே அவர் இங்கேயே  தங்கி  நாராயணனை நோக்கி தவம் புரிந்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். நாரதர் இரண்டு வரங்களை வேண்டினார். முதலாவது இத்தலத்திலேயே தான் இருக்க வேண்டும், இரண்டாவது தமக்கு தத்துவ ஞானம் உபதேசிப்பதே தொழிலாக வேண்டும்' என்று வேண்ட, பகவானும் அவ்விரண்டு வரங்களையும் அளித்தார்.  பின்னர்   நாரதர் மகாவிஷ்ணுவே பரதத்துவம் என்று நிறுத்தி, அவரை பூஜிக்கும் முறை, துதி முதலியனவற்றை பெருமாள் அருளியபடி இருபத்தைந்தாயிரம் கிரந்தங்களில் நாரதீய புராணத்தை எழுதியதாக தல புராணம் கூறுகின்றது.


தங்கக் கொடிமரம் 

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவரும் தவம் செய்து பிரளயம், ஜகத் சிருஷ்டி ஆகியவற்றை தரிசிக்க வேண்டும் என்று வேண்ட, 

கரார விந்தேந பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவஶயந்தம் |
வடஸ்ய பத்ரஸ்ய புடேஶயாநம் பாலம் முகுந்தம் ஸ்மராமி ||


என்றபடி பிரளய  காலத்தில் அனைத்து உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கி ஓர் ஆலிலையில் தனது தாமரைப் போன்ற திருப்பாதவிரலை தாமரைப்போன்ற திருக்கரத்தினால் தாங்கி விரலைச் சுவைத்த வண்ணம் பள்ளி கொள்ளும் அழகை பெருமாளின் திருமேனியில் காணும் பேறு பெற்றார்.
ஆலயத்தை நெருங்கியவுடன் அழகிய அலங்கார முகப்பு வாசல்  நம்மை வரவேற்கின்றது.   உச்சியில்  காளிங்க ர்த்தன  கிருஷ்ணன். அதன் கீழே பெருமாள் கருடன் மேல் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் அருமையான சுதை சிற்பம். இரண்டு பக்கங்களிலும்  நாரதரும், தும்புருவும் இன்னிசை இசைக்கின்றனர். அடுத்து இன்னும் கீழே  ஹயக்ரீவர். இரு பக்கங்களிலும் இரண்டிரண்டு அவதாரங்கள். மச்சம்,  கூர்மம் ஒரு பக்கமும், நரசிம்மரும், வாமனரும்.  கீழே கை கூப்பிய நிலையில் கருடனும் அனுமனும், மேலும் துவார பாலகர்களும் உள்ளனர் இவ்வாறு  முகப்பு வாசல் அருமையாக உள்ளது.  காளிங்கனின்  உடல் வளைஞ்சு நெளிந்து  போய்,  வால் நாரதர் மாடத்துக்கு மேல் எட்டிப் பார்ப்பது அருமையாக உள்ளது. மறு புறம் பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணன், வராக அவதாரங்களும், கீதோபதேச  காட்சி, பிரம்மா, ஐயப்பன் என்று அழகோ அழகு!  தூண்களுடன்  சிறிதாக  இரண்டு திண்ணைகள்  கதவுக்கு இருபுறமும் மிகவும் அருமை.


அருமையான முகப்பு - முன்புறம் 
பின்புறம் 
 படங்களுக்கு  நன்றி - துளசியம்மா


பெரிய கோவில் என்றாலும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றது. அன்னதான மண்டபத்தில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் நடைபெறுகின்றது. வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தனிச் சன்னிதியில் அழகாக கொலுவிருக்கிறார். கையில் வெண்ணெயுடன் காட்சி தரும் இந்த  பாலகிருஷ்ணனை, நவநீத கிருஷ்ணன் என்றழைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த சன்னதி அமைந்திருக்கும் மண்டபத்தில், மேலே சிறு சிறு தொட்டில்களும், மணிகளும் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அடுத்து ஒரு உயரமான பீடத்தில் நாக நாராயணன், நாகராஜன், நாக யக்ஷி ஆகியோர் அருள் பாலிக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய மஞ்சள் பூசி, பக்தர்கள் தம் பக்தியைத் தெரிவிக்கிறார்கள். அர்ச்சகர், அவர்கள் சார்பில் அர்ச்சனை செய்து, மஞ்சள் பொடியையே பிரசாதமாக தருகிறார். 

வெளிப் பிராகாரத்தில் கணபதிக்கென்று சிறு சன்னதி. அடுத்து கோசாலை கிருஷ்ணர். இந்த விக்கிரகம், இத்தல தீர்த்தத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். ஒரு சிறு கிணறாக, கோயிலுக்குப் பின்னால் விளங்குகிறது இந்தத் தீர்த்தம். அருகில் பிரமாண்டமான அரசமரம்  நிழல் தந்து குளிர்விக்கிறது; பிராணவாயு தந்து உயிருக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது. சற்றுத் தொலைவில்  சிவன்,  சாஸ்தா சந்நதி. தெற்கில் பகவதியின் சன்னதி உள்ளது.  

மஸ்கார மண்டபத்தில் அருமையாக அனந்த பத்மநாப சுவாமியின் மர சிற்பம் வர்ணத்துடன் அருமையாக உள்ளது. வட்ட வடிவ ஸ்ரீகோவில்  துவிதள (இரண்டடுக்கு) செப்புக் கவசம் பூண்ட தொப்பி வடிவ விமானம். சுட்டு விளக்குகள் எழிலாக தொங்குகின்றன.  மூலவர் சந்நதி மேற்கு நோக்கியிருக்கிறது. பாம்பணையப்பன் என்று போற்றப்படும் இந்தப் பெருமாள், சிறு உருவில், பள பளவென்று ஜொலிக்கிறார்.  நின்ற கோலத்தில் சங்கு, சக்ர, பத்ம,  கதாபாணியாகச் சேவை சாதிக்கின்றார். அருமையான சந்தனக் காப்பு அலங்காரத்தில் பெருமாளை திவ்யமாக சேவித்தோம்.  மூலவர் பாம்பணையப்பனைத் தவிர, இங்கே சன்னதி கொண்டிருக்கும் பிற விக்கிரகங்கள் எல்லாமே கோயிலைப் புனரமைக்க நிலத்தைத் தோண்டிய போது கிடைத்தவை என்கிறார்கள்.  இவ்வாலயத்தில் ஒரு பெரிய மண்டபம் கல்யாண மண்டபமாக உள்ளது. மறுநாள் ஒரு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

ஒருவண்ணம்சென்றுபுக்கு எனக்கொன்றுரைஒண்கிளியே!
செருவொண்பூம்பொழில்சூழ் செக்கர்வேலைத் திருவண்வண்டூர்
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செருவொண் சக்கரம்சங்கு அடையாளம் திருந்தக்கண்டே ( தி.வா 6-1-7 )

பொருள்: வடிவழகிலே சிறந்த கிளியே! எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருவண்வண்டூருக்கு நீ செல்லும் போது  வழியிலே நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகுக்கு ஆட்படாமல் செல்ல வேண்டும், செந்நிறம் பொருந்திய  அவ்வூர் கடற்கரைப் பகுதியில் ஒன்றுக்கொன்று  மாறுபட்ட பல நிறப்பூக்களைச் சொரியும் சோலைகள் உண்டு. இத்தகைய திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பகவானின் அடையாளங்களைக் கேட்டுக்கொள். அவன் கரிய  திருமேனியுடையவன்; சிவந்த வாயும்; திருக்கண்களும், திருக்கரங்களும், திருவடிகளும் உடையவன். போர் செய்யவல்ல  சக்கரம், சங்கு  இவற்றை ஏந்தியவனாகக் காட்சியளிப்பான். இவ்வடையாளங்களின்படியே அவனைக் கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்வாயாக என்று எம்பெருமானைக் கண்டு சொக்கிய நம்மாழ்வாருக்கு அவர் இத்தலத்தில்  காட்டிய கல்யாண குணம் “ரக்ஷண தைர்யம்”  எனப்படும் காக்கும் உறுதியாகும். எவ்வாறு இராமாவதாரத்தில் தன்னை சரணடைந்தவர்களை காத்தாரோ அதே போல ஆழ்வாரையும் காத்தார் என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார்.

தேவும், உலகும் உயிரும் திரிந்துநிற்கும்
யாவும் படைத்த இறைகண்டீர் – பூவில்
திருவண்வண் டூர்உறையும் தேவாதி தேவன்
மருவண்வண்டு ஊர்துளவ மால். (நூ. தி 67)

பொருள்: திருவண்வண்டூர் என்னும் திருப்பதியில் நித்திய வாசம் செய்கின்ற தேவர்களுக்கெல்லாம் தேவனான, மணம், வளப்பம் உள்ள, வண்டுகள் மொய்க்கின்ற திருத்துழாய் மாலையை அணிந்த திருமால், தேவர்களையும், உலகங்களையும், விலங்குகளையும், மற்றும் வேறாக நிற்கின்ற அசேதனப் பொருள்கள் அனைத்தையும் படைத்த கடவுளாவான் என்று திவ்வியக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.



ஸ்ரீவித ப்ரமர க்ஷேத்ரே பாபநாச புஷ்கரணி தடே, வேதாலய விமானச் சாயாயாம் ஸ்திதாய ப்ரதீச்யாபிமுகாய, ஸ்ரீமதே கமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீபம்பாச்ரயாய(பாம்பணையப்பன்) கமலநாத பரப்ரஹ்மனே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே வம்மின் தொண்டர்களே அடுத்து பீமன் புனருத்தாரணம் செய்த தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத்    திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் என்று நம்மாழ்வார் பல்லாண்டு பாடிய    பெருமாளை சேவிக்கச் செல்லலாம். 
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .