மூலவர் லக்ஷ்மி அலங்காரம்


சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே கௌரி (தேவி) நாராயணி நமோஸ்துதே!
ஸ்வயம் மங்கள வடிவானவளும், சிவ ரூபிணியும், ஸகல காரியங்களையும் சாதிக்கக் கூடியவளும், சரணமடைந்தவர்களை காப்பாற்றுபவளும், முக்கண்ணியுமான கௌரி (தேவி)! நாராயணி! உன்னை அடி பணிந்து வணங்குகின்றோம்


குஹாம்பாள்
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் இரு நாமங்கள் குஹாம்பா, குஹஜன்மபூ:
அதாவது முருகனை ஈன்ற அன்னை என்ற பொருள் அதற்கேற்ப முருகனை மடியில் தாங்கி அருள் பாலிக்கும் அம்பாள்.
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தாச்சா ஸ்வதேசோ புவனத்ரயம்
அன்னம் நிறைந்தவளே, முழுமையானவளே, சங்கரன் மங்கலமே, அன்னை பார்வதியே, ஞானம் வைராக்யம் உண்டாக பிக்ஷையைக் கொடு அம்மா.
என் தாய் பார்வதி தேவி, தந்தையோ மஹேஸ்வரன், உறவினர்களோ சிவ பக்தர்கள், எனது தேசம் மூவுலகம்

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய
பஞ்சமி பைரவி பர்வதபுத்திரி
பஞ்சநல் பாணியளே
சங்கடந் தீர்த்திடச் சமரது செய்தநற்
சக்தியெனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (5)
பஞ்சமி பைரவி பர்வதபுத்திரி
பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனைக்
கொடுத்த நல்குமரியளே
சங்கடந் தீர்த்திடச் சமரது செய்தநற்
சக்தியெனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (5)
அம்மன் அருள் வளரும் .........
2 comments:
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
http://anubhudhi.blogspot.com/
தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Post a Comment