Thursday, February 18, 2010

தெப்போற்சவம் - 2

சென்னை மேற்கு சைதாப்பேட்டை

காரணீஸ்வரர் திருக்கோவில் தெப்போற்சவம்


தெப்போற்சவம் - 1. அவ்வ்விழாக்களுள் திருமயிலை தெப்போற்சவத்தின் முதல் நாள் சந்திரசேகரர் தரிசனம் பெற்றோம். இப்பதிவில் திருக்காரணி இரண்டாம் நாள் சிவசுப்பிரமணியசுவாமி தரிசனமும் , மூன்றாம் நாள் திருமயிலை சிங்கார வேலவர் தரிசனமும் காண்போம்.

திருக்காரணி தெப்பக்குள நீராழி மண்டபம்

திருக்காரணி தெப்பம்

சென்னை சைதை திருக்காரணியிலும் முதல் நாள் சந்திரசேகரர் தெப்போற்சவம் கண்டருளி அருள் பாலிக்கின்றார். இரண்டாம் நாள் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சுவாமி தெப்போற்சவம் கண்டருளுகிறார். மூன்றாம் நாள் வன வள்ளி, கஜ வள்ளியுடன் மயில் மீதமர்ந்த கோலத்தில் ஒராறு முகமும் ஈராறு கரமும் கொண்டு சண்முகர் தெப்போற்சவம் கண்டருளுகிறார்.






சிவசுப்பிரமணிய சுவாமியின் அருட்கோலம்



-->
திருமயிலையில் இரண்டாம் நாள் சிங்கார வேலவர் தெப்பம். வள்ளி தெய்வாணையுடன் வளம் கொடுக்கும் முருகர் பூரண அலங்காரத்துடன் தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்போற்சவம் கண்டருளுகிறார். இன்று ஏழு சுற்றுக்கள் வலம் வருகின்றார். மூன்றாம் நாள் சிங்கார வேலவர் தெப்பம், இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் மனம் மகிழ எம்பெருமான் முருகர் 9 சுற்றுகள் வருகின்றார்.

திருமயிலை மூன்றாம் நாள் தெப்பம்


மயில் மீது அமர்ந்த கோலத்தில் சிங்கார வேலவர் அருள் பாலிக்கும் அழகை எப்படி வர்ணிக்க.
-->

No comments: