அதிசயமான வடிவுடைய அஹம் காளி
முக்கண் முதல்விக்கு மூன்றாம் கால யாக பூஜை
முக்கண் முதல்விக்கு மூன்றாம் கால யாக பூஜை

நாக பீடத்தில் குண்டலினி சக்தியாக தரிசனம் தரும் அழகு
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
சுந்தரி - அழகில் சிறந்தவளே
எந்தை துணைவி - என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே
என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.
சிந்துர வண்ணத்தினாள் - சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே
மகிடன் தலைமேல் அந்தரி - அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே
நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே
அழியாத கன்னிகை - இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே
ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் - வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை (கபாலத்தை)தரித்த கைத்தலத்தை உடையவளே
மலர்த்தாள் என் கருத்தனவே - உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.
அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே. சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே. அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே. நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.
திரு குமரன் அவர்களின் விளக்கம் மேலே உள்ளது. நன்றி குமரன் ஐயா . இப்பாடலில் அங்காள பரமேஸ்வரி அம்மனின் ஒரு சரித்திரம் பற்றி கூறப்பட்டுள்ளது. எம் ஐயன் செய்த அஷ்ட வீரச் செயல்கலுள் ஒன்று ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரம் கொய்தது. அவ்வாறு கொய்த போது பிரம்மன் கொடுத்த சாபத்தால் அந்த பிரம்ம கபாலம் ஐயனின் கையில் ஒட்டிக் கொண்டது ஐயனும் பிக்ஷாடணராய் அலைந்தார், ஐயனின் நிலை கண்டு அன்னை அந்த பிரம்ம கபாலத்தை தன் கையில் வாங்குகின்றாள். அதானால் அன்னைக்கு பித்து பிடிக்கின்றது அவள் மயானத்தில் அலைகின்றாள். அன்னையின் நிலையை மாற்ற அண்ணாமலையார் வருகின்றார் , அன்னை அவரை தொடர்ந்து செல்லும் போது மேல் மலையனூரில் அக்னி தீர்த்தத்தை ஐயன் கடந்து சென்று விட அம்மன் ஆழத்தில் நின்று விடுகின்றாள். அப்போது ஐயன் அம்மையை அங்காழம் பெண்ணே என்று அழைத்ததே அம்மன் திருப்பெயராக அங்காளம்மன் ஆகியது. பின்னர் ஏழு ஊர் மயானமான மேல் மலையனூரில் அண்ணன் மஹாவிஷ்ணு யோசனையின் படி ஒரு மஹா சிவராத்திரியன்று அம்மன் சோறு சூரையிட அந்த பிரம்ம கபாலம் கீழே இறங்க அம்மன் மேல் மலையனூரில் நாம் எல்லோரும் உய்ய திருக்கோயில் கொண்டாள் என்பது வரலாறு.
திரு குமரன் அவர்களின் விளக்கம் மேலே உள்ளது. நன்றி குமரன் ஐயா . இப்பாடலில் அங்காள பரமேஸ்வரி அம்மனின் ஒரு சரித்திரம் பற்றி கூறப்பட்டுள்ளது. எம் ஐயன் செய்த அஷ்ட வீரச் செயல்கலுள் ஒன்று ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரம் கொய்தது. அவ்வாறு கொய்த போது பிரம்மன் கொடுத்த சாபத்தால் அந்த பிரம்ம கபாலம் ஐயனின் கையில் ஒட்டிக் கொண்டது ஐயனும் பிக்ஷாடணராய் அலைந்தார், ஐயனின் நிலை கண்டு அன்னை அந்த பிரம்ம கபாலத்தை தன் கையில் வாங்குகின்றாள். அதானால் அன்னைக்கு பித்து பிடிக்கின்றது அவள் மயானத்தில் அலைகின்றாள். அன்னையின் நிலையை மாற்ற அண்ணாமலையார் வருகின்றார் , அன்னை அவரை தொடர்ந்து செல்லும் போது மேல் மலையனூரில் அக்னி தீர்த்தத்தை ஐயன் கடந்து சென்று விட அம்மன் ஆழத்தில் நின்று விடுகின்றாள். அப்போது ஐயன் அம்மையை அங்காழம் பெண்ணே என்று அழைத்ததே அம்மன் திருப்பெயராக அங்காளம்மன் ஆகியது. பின்னர் ஏழு ஊர் மயானமான மேல் மலையனூரில் அண்ணன் மஹாவிஷ்ணு யோசனையின் படி ஒரு மஹா சிவராத்திரியன்று அம்மன் சோறு சூரையிட அந்த பிரம்ம கபாலம் கீழே இறங்க அம்மன் மேல் மலையனூரில் நாம் எல்லோரும் உய்ய திருக்கோயில் கொண்டாள் என்பது வரலாறு.

யாக சாலையில் எழிலாக கொலுவிருக்கும் அழகு
லலிதா பரமேஸ்வரி, மூலவர் அம்மன், உற்சவர் அம்மன் மூவரையும் மற்றும் யாக குண்டத்தினையும் ஒன்றாக இப்படத்தில் தரிசனம் செய்கின்றீர்கள். மாலை மூன்றாம் நாள் யாக பூஜையின் போது ஷடத்வா ஹோமம், மூல மந்திர ஹோமம், மாலா மந்திர ஹோமம் அஸ்திர மந்திர ஹோமம் ஆகிய ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றன. அதற்குப்பின் அம்மனை வாக் தேவிகள் துதித்த ஆயிரம் நாமங்களால் அதாவது லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது.




மூன்றாம் கால யாக பூஜையை தரிசனம் செய்வதால் ஐஸ்வர்யம் சித்திக்கும் என்பது ஐதீகம்.
இரவு பத்து மணிக்கு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளை அவர்களுடைய பீடத்தில் அமர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பீடத்தில் நவரத்தினங்கள், சொர்ணம் முதலிய விலையுயர்ந்த பொருட்களும், யந்திர ஸ்தாபனமும் நடைபெற்று பின் பிம்பங்கள் அமைக்கப்பட்டு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தின் முதல் பகுதியை இங்கே தரிசியுங்கள்
கும்பாபிஷேகத்தின் இரண்டாம் பகுதியை இங்கே தரிசியுங்கள்
கும்பாபிஷேகத்தின் மூன்றாம் பகுதியை இங்கே தரிசியுங்கள்
(படங்களின் மேல் கிளிக்கினால் அவற்றை முழுதாக பார்க்கலாம்)
கும்பாபிஷேகத்தின் இரண்டாம் பகுதியை இங்கே தரிசியுங்கள்
கும்பாபிஷேகத்தின் மூன்றாம் பகுதியை இங்கே தரிசியுங்கள்
(படங்களின் மேல் கிளிக்கினால் அவற்றை முழுதாக பார்க்கலாம்)
அடுத்த பதிவில் நான்காம் கால யாக பூஜை , கும்பாபிஷேக மற்றும் திருக்கல்யாண அருட்காட்சிகளைக் காணலாம் அன்பர்களே.
மஹா கும்பாபிஷேக காட்சிகள் தொடரும்...........
No comments:
Post a Comment