Showing posts with label முத்து மாரியம்மன். Show all posts
Showing posts with label முத்து மாரியம்மன். Show all posts

Wednesday, September 20, 2017

ஸ்ரீசக்ர நாயகி-1

நவராத்திரி 

நவராத்திரி நாளை துவங்குகின்றது. வழக்கம் போல் அம்பாளின் பல்வேறு கொலு கோலங்கள் தினமும் பதிவிட உள்ளேன். இவ்வருடம் முத்துசாமி தீக்ஷிதரின் கமலாம்பாள் நவாவர்ண கீர்த்தனைகளை உடன் பதிவிட அம்பாள் உத்தரவு.  இக்கீர்த்தனைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன, அடியேன் அறியாத மொழி எனவே திரு, குமரன் அவர்கள் பதிவிட்டதை ஒட்டி எழுதியுள்ளேன். அவர்களுக்கு நன்றி.          இன்றைய தினம்             மஹாளய அமாவாசையன்று, நவாவர்ண கீர்த்தனையின் கணபதி தியானம் மற்றும் அம்பாளின் தியான கீர்த்தனைகள் இடம் பெறுகின்றன. சென்ற வருடம் திருமயிலை கற்பகாம்பாளின் கொலு தரிசனத்தையும் கண்டு அருள் பெறுங்கள். 

அன்னை ஸ்ரீசக்ர நாயகி , அச்சக்கரத்தில் ஒன்பது ஆவரணங்கள் எனப்படும்  சுற்றுக்கள் உள்ளன. எனவேதான் அபிராமி பட்டரும் அன்னையை "ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" என்று போற்றினார்.  


சென்னை போக் சாலை 
முத்துமாரியம்மன் நவராத்திரி அலங்காரங்கள்

நவாவர்ண கிருதிகளை வரிசையாக இசைக்கும்போது ஆரம்பத்தில் இரண்டு  த்யான கிருதிகளை இசைப்பது ஒரு மரபு.

 முதலாவது கணபதி தியானம்
..
ராகம்-கௌளை                     தாளம்- திரிபுட

பல்லவி

ஸ்ரீமஹா கணபதி- ரவதுமாம்  ஸித்தி விநாயகோ மாதங்க முக (ஸ்ரீ)

அனுபல்லவி

காமஜனக விதிந்த்ர ஸந்நுத கமலாலய தட- நிவாஸோ
கோமளதர பல்லவபதகர குருகுஹாக்ரஜ சிவாத்மஜ: (ஸ்ரீ)

சரணம்

சுவர்ணாகர்ஷண விக்னராஜோ பாதாம்புஜோ கௌர வர்ண வஸநாதரோ பாலசந்த்ரோ நராதி விநுத லம்போதரோ
குவலயஸ்வவிஷாண -  பாசாங்குச மோதக ப்ரகாசகரோ
பவஜலதிநாவோ மூலப்ரக்ருதி ஸ்வபாவ சுகதரோ
ரவிஸஹஸ்ர ஸந்நிப தேஹோ கவிஜநனுத மூஷிகவாஹோ
அவநத தேவதா ஸமூஹோ அவிநாஸ கைவல்ய  தேஹ:  (ஸ்ரீ)

சகல சித்திகளையும் அருளச்செய்யும் யானைத் திருமுகம் கொண்ட ஸ்ரீ மஹாகணபதி என்னை காத்தருள வேண்டும்மன்மதனின் தந்தையாகிய விஷ்ணு மற்றும் பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் வணங்கப்படுபவர். திருவாரூர் திருத்தலத்தின்  கமலாலயக் குளக்கரையில் அமர்ந்திருப்பவர். அழகுமிக்க தாமரை இதழ் போன்ற மென்மையான பாதங்களையுடையவர். குருகுஹனான அழகு முருகனின்  மூத்தவன், பரமசிவனாரின் அன்பு மகன்.

சுந்தரருக்காக தங்கத்தை மாற்றுரைத்தவர். தாமரை பூக்களின்மீது நடனமாடுபவர், வெண்பட்டாடை அணிந்தவர், சிரசில் பிறைச்சந்திரனை தரித்து பாலசந்த்ரன் எனப் பெயர் பெற்றவர், மனிதர்களால் பெரிதும் பிரியத்துடன் வணங்கப்படுபவர், தன் வயிற்றினில் உலகனைத்தையும் அடக்கி அதனால் பெருவயிறு படைத்தவர், கைகளில் குவளை மலர்,  ஒடிந்த தந்தம், பாசக்கயிறு, அங்குசம், மோதகம், ஆகியவற்றை ஏந்தியிருப்பவர், எப்போதும் ஒளிப்பிழம்பாக பிரகாசிப்பவர், பிறவிப் பெரும் கடலை கடக்க மனிதர்களுக்கு தோணியாகி கரை சேர்ப்பவர், ஆதி முதற்காரணப் பொருளாக விளங்குபவர், வணங்கியவர்களுக்கு மங்களத்தை அளிப்பவர்கோடி சூர்யப் பிரகாசம் போன்று ஒளிமயமாகத் திகழ்பவர், மூஞ்சூறு வாகனர், தேவர் குழாங்களால் துதிக்கப்படுபவர், ஜீவாத்மா- பரமாத்மா உறவின் கடைசி நிலையான ஐக்கியத்தை அருள்பவர், இப்படியெல்லாம், புகழ் பெற்ற கணபதி என்னை காப்பாற்றட்டடும்.

பலஸ்ருதி: வினாயகப்பெருமானின் அருள் கிட்டும். தடைகள் தகர்ந்து நலம் பெருகும்.


கற்பகாம்பாள் அன்ன வாகன சேவை 

கற்பகாம்பாள் காமதேனு வாகனத்தில் 
மஹாகௌரி கொலு 

கற்பகாம்பாள் கம்பாநதி காட்சி 


இரண்டாவது  பாடல் அம்பிகை தியானப் பாடல்.  வழி வழியாக முதலில் பாடப்படும் பாடல்.

ராகம் -  தோடி                                                               தாளம் -  ரூபகம்

பல்லவி

கமலாம்பிகே அம்ப  ஆஸ்ரித  கல்ப லதிகே சண்டிகே
ஜகதம்பிகே கம நீயா ருணாம் ஸுகே
கர வித்ருத ஸுகே  மாமவ  ......கமலாம்பிகே

அனுபல்லவி

கமலாஸநாதி பூஜித கமலபதே பஹு வரதே
கமலாலய தீர்த்த வைபவே ஸிவே கருணார்ணவே  (கமலாம்பிகே)

சரணம்

ஸகல லோக நாயிகே சங்கீத ரசிகே
ஸுக வித்வ ப்ரதாயிகே ஸுந்தரி கதமாயிகே
விகளேபர முக்திதாந நிபுணே அகஹரணே
வியதாதி பூத கிரணே விநோத சரணே அருணே

மத்யமம்

ஸகளே குருகுஹ சரணே ஸதாஸிவாந்த:  கரணே
 பாதி வர்ணே அகண்டைகரசபூர்ணே (கமலாம்பிகே)

திருவாரூரில் புகழுடன் விளங்கும் கமலாம்பிகையே உன்னை அநந்யமாய் சரணடைந்தவர்களுக்கு கற்பகக் கொடியே!,            சண்டிகாதேவியே! , திருக்கரத்தில்   கிளியை ஏந்தி  எழில் மிளிரும் சிகப்பு பட்டுச்சேலை உடுத்தி அழகாக விளங்குபவளே, அகில உலகத்திற்கும் அன்னையே!  என்னை காத்தருள்வாயாக.

தாமரையில் தோன்றிய பிரம்மா முதலியவர்களால் பூஜிக்கும் தாமரைத் திருவடிகளை உடையவளே, பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அருள்பவளே, கமலாலயம் என்ற குளத்துக்கு சிறப்புச் சேர்ப்பவளே, சிவமாகும் மங்கல வடிவினளே, கருணைக் கடலே!  கமலாம்பிகையே என்னை காத்தருள்வாயாக.

சகல உலகங்களுக்கு நாயகியே, இசையை விரும்பி ரசிப்பவளே, கவித்துவ ஞானத்தை நல்குபவளே,   அழகியவளே, மாயையிலிருந்து விடுபட்டு இருப்பவளே, விதேக முக்தி அருளும் வல்லபம் உள்ளவளே! முப்பிறப்பிலும் செய்த பாவங்களை போக்குபவளே, பஞ்சபூதங்களுக்கும் சக்தியை அளிப்பவளே, ஒளி பொருந்தியவளே, விதவிதமாக ஆசனங்களை போட்டு கொலு வீற்றிருக்கும் போது விநோதமான திருவடிகளின் நிலைகளினால் அழகிய தோற்றம் தரும் பாதார விந்தங்களை  உடையவளே,  இளம் சிவப்பு வர்ணமுடையவளே

அனைத்துக் கலைகளுக்கும் உறைவிடமானவளே, குருவாய் வந்த முருகனின்  அன்னையே, என்றும் சதாசிவனின் உள்ளத்துள் உறைபவளே, அகார க்ஷகார முதலிய மாத்ருகா வர்ண சொரூபிணியே! ஒப்பற்ற ஆனந்தத்தின் பூரண வடிவாய் விளங்குபவளே, திருவாருரில் ஒளிர்பவளான கமலாம்பிகையே என்னைக் காத்தருள்வாய்.

காமகலா வடிவமாக விளங்கும் கமலாம்பிகையின் நிர்குண ஸ்வரூபம், சகுண நிராகாரம் முதலிய வடிவங்கள் இக்கீர்த்தனையில் விமர்சிக்கப்பட்டுள்ளன. 



அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Thursday, March 16, 2017

மாசி மக தீர்த்தவாரி - 3

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   4   5  


மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.



பொற்கொடி அம்பாள் சமேத காரணீஸ்வரர் 


ஸ்வர்ண லதாம்பிகை என்றழைக்கப்படும் பொற்கொடி அம்மன் உடனுறை காரணீஸ்வரர். காரணம்+ஈஸ்வரர் = காரணீஸ்வரர்.  எல்லாவற்றுக்கும் காரணமான ஈஸ்வரர் என்பது. உலகில் நடக்கும் ஒவ்வோர் செயலுக்கும்  ஓர் காரணம் உண்டல்லவா? அத்தனை காரணத்திற்கும்   இறைவன் தான் காரணம் என்பதை உனர்த்தும் ஈஸ்வரன். குடும்ப உறவுகள் பிணி இன்றி நலமாக வாழ இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து 6,12,18,24 ஆகிய அறு வரிசைவில் ஏற்றி இறைவனை வலம் வந்து வழி படுதல் நலம்.



கண்ணாடி தரிசனம் 

அஸ்திர தேவர் 

சுவாமி கடலாடல் 




********************

முத்து மாரியம்மன் 


 தீர்த்தவாரி அம்மன் பாலாபிஷேகம் 


******************


மலர் மங்கை இலக்குமி, பெருமாளை மணம் புரிய இங்கு இறைவனை நோக்கித் தவம் புரிந்ததால் இத்தலத்திற்கு திருவேட்டகம்என்ற திருநாமம். சுவாமிக்கு திருவேட்டீஸ்வரர்என்ற திருநாமம். லிங்க மூர்த்தியின் முடியின் மேற்புறம் ஒரு பிளவு காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் தினமும் நடக்கும் முக்கியமானதொரு பூஜை ஸ்படிக லிங்க பூஜையாகும். இதனுடன் சொர்ணவேல், மஹாமேரு, மஹாகணபதி பூஜை, கோமாதா பூஜையும் சேர்ந்து நடைபெறுகிறது. இதனைக் கண்ணுறுவோர் வாழ்வில் உயர்நிலையையும், ஈசனின் பரிபூர்ண அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

இத்தலம் திருக்காளத்திக்கு ஒப்பானது என்ற அசரீரி வாக்கிற்கு ஏற்ப, இத்தலத்திலும் காளத்தியில் செய்வது போன்றே ஜாதகத்தில் இராகு கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை உள்ளதால் சிறப்புப் பரிகார பூஜை தினமும் செய்யப்படுகிறது. மகா மண்டபத்தின் மேற்கூரையில் ராகு, கேது, சந்திர, சூரியர்களுடன் புடைப்புச் சிற்பங்களாக உள்ளதே இதற்கு சாட்சி. 




இடப  வாகனத்தில் திருவேட்டீஸ்வரர்  


மாசி மக கடலாட்டு விழா கொண்டாட்டத்திற்காக சில ஐதீகங்கள் உள்ளன அவை என்னவென்று பார்ப்போமா? தில்லை சிற்றம்பலமாம் சிதம்பரத்திற்கு வடகிழக்கே , கிள்ளையில் கடற்கரையில் உள்ளது குய்ய தீர்த்தம். இருளில் வந்த குருவை வருணன் பகைவன் என்று எண்ணி அவர் மீது பாசத்தை விட அதனால் அவர் இறந்தார். வருணனை அக்கொலைக் குற்றம் பற்றியது எனவே ஒரு பிசாசு அவருடைய  காலையும் கையையும் கழுத்துடன் கட்டி கடலில் இட்டது. வருணனும் நீண்ட காலம் அங்கு கிடந்தான். அதானால் பூமியெங்கும் மழை இல்லாமல் போனதால் தேவர்கள் வேண்ட அவ்வாறு கிடந்த வருணனுக்கு விமோசனம் அளிக்க பரம கருணாமூர்த்தி சிவபெருமான் ஒரு மாசி மக நாளில் இத்துறைக்கு எழுந்தருளி அப்பாசக் கட்டு அற்றுப் போகும் படி அருள் புரிந்தார் எனவே இத்துறை "பாசமறுத்ததுறை" என்றும் பெயர் பெற்றது அன்று முதல் மாசி மக நாளன்று அனைத்து தெய்வ மூர்த்தங்களும் கடலுக்கு எழுந்தருளும் கடலாட்டு விழாவும் துவங்கியது.

                                                                                                                            மாசிமக தரிசனம்   தொடரும்  .................