Showing posts with label காரணீஸ்வரர். Show all posts
Showing posts with label காரணீஸ்வரர். Show all posts

Thursday, March 16, 2017

மாசி மக தீர்த்தவாரி - 3

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   4   5  


மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.



பொற்கொடி அம்பாள் சமேத காரணீஸ்வரர் 


ஸ்வர்ண லதாம்பிகை என்றழைக்கப்படும் பொற்கொடி அம்மன் உடனுறை காரணீஸ்வரர். காரணம்+ஈஸ்வரர் = காரணீஸ்வரர்.  எல்லாவற்றுக்கும் காரணமான ஈஸ்வரர் என்பது. உலகில் நடக்கும் ஒவ்வோர் செயலுக்கும்  ஓர் காரணம் உண்டல்லவா? அத்தனை காரணத்திற்கும்   இறைவன் தான் காரணம் என்பதை உனர்த்தும் ஈஸ்வரன். குடும்ப உறவுகள் பிணி இன்றி நலமாக வாழ இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து 6,12,18,24 ஆகிய அறு வரிசைவில் ஏற்றி இறைவனை வலம் வந்து வழி படுதல் நலம்.



கண்ணாடி தரிசனம் 

அஸ்திர தேவர் 

சுவாமி கடலாடல் 




********************

முத்து மாரியம்மன் 


 தீர்த்தவாரி அம்மன் பாலாபிஷேகம் 


******************


மலர் மங்கை இலக்குமி, பெருமாளை மணம் புரிய இங்கு இறைவனை நோக்கித் தவம் புரிந்ததால் இத்தலத்திற்கு திருவேட்டகம்என்ற திருநாமம். சுவாமிக்கு திருவேட்டீஸ்வரர்என்ற திருநாமம். லிங்க மூர்த்தியின் முடியின் மேற்புறம் ஒரு பிளவு காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் தினமும் நடக்கும் முக்கியமானதொரு பூஜை ஸ்படிக லிங்க பூஜையாகும். இதனுடன் சொர்ணவேல், மஹாமேரு, மஹாகணபதி பூஜை, கோமாதா பூஜையும் சேர்ந்து நடைபெறுகிறது. இதனைக் கண்ணுறுவோர் வாழ்வில் உயர்நிலையையும், ஈசனின் பரிபூர்ண அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

இத்தலம் திருக்காளத்திக்கு ஒப்பானது என்ற அசரீரி வாக்கிற்கு ஏற்ப, இத்தலத்திலும் காளத்தியில் செய்வது போன்றே ஜாதகத்தில் இராகு கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை உள்ளதால் சிறப்புப் பரிகார பூஜை தினமும் செய்யப்படுகிறது. மகா மண்டபத்தின் மேற்கூரையில் ராகு, கேது, சந்திர, சூரியர்களுடன் புடைப்புச் சிற்பங்களாக உள்ளதே இதற்கு சாட்சி. 




இடப  வாகனத்தில் திருவேட்டீஸ்வரர்  


மாசி மக கடலாட்டு விழா கொண்டாட்டத்திற்காக சில ஐதீகங்கள் உள்ளன அவை என்னவென்று பார்ப்போமா? தில்லை சிற்றம்பலமாம் சிதம்பரத்திற்கு வடகிழக்கே , கிள்ளையில் கடற்கரையில் உள்ளது குய்ய தீர்த்தம். இருளில் வந்த குருவை வருணன் பகைவன் என்று எண்ணி அவர் மீது பாசத்தை விட அதனால் அவர் இறந்தார். வருணனை அக்கொலைக் குற்றம் பற்றியது எனவே ஒரு பிசாசு அவருடைய  காலையும் கையையும் கழுத்துடன் கட்டி கடலில் இட்டது. வருணனும் நீண்ட காலம் அங்கு கிடந்தான். அதானால் பூமியெங்கும் மழை இல்லாமல் போனதால் தேவர்கள் வேண்ட அவ்வாறு கிடந்த வருணனுக்கு விமோசனம் அளிக்க பரம கருணாமூர்த்தி சிவபெருமான் ஒரு மாசி மக நாளில் இத்துறைக்கு எழுந்தருளி அப்பாசக் கட்டு அற்றுப் போகும் படி அருள் புரிந்தார் எனவே இத்துறை "பாசமறுத்ததுறை" என்றும் பெயர் பெற்றது அன்று முதல் மாசி மக நாளன்று அனைத்து தெய்வ மூர்த்தங்களும் கடலுக்கு எழுந்தருளும் கடலாட்டு விழாவும் துவங்கியது.

                                                                                                                            மாசிமக தரிசனம்   தொடரும்  .................

Monday, July 28, 2014

மாசி கடலாட்டு திருவிழா - 3

சைதை காரணீஸ்வரர் கிராத வேடம்


இந்த வருடம் மாசி பௌர்ணமி திதி முதல் நாள் அன்றும் மக நட்சத்திரம் மறு நாளும் வந்தது இது வரை தாங்கள் பார்த்த தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் பௌர்ணமியன்று நடந்தது இப்பதிவில்  சென்னை சைதாப்பேட்டையின் இரு  ஆலயங்களின் மாசி மக அருட்காட்சிகள் ஆகும். 



காரணீஸ்வரர் மாசி மகத்தன்று கிராத வேடத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றர். அது என்ன கிராதக வேடம் என்று யோசிக்கின்றிர்களா? அர்ச்சுனனுக்கு பாசுபதஸ்திரத்தை வழங்கிட சிவபருமான் வேடுவ வேடம் கொண்டும் உமையம்மை உடன் வேடுவச்சி கோலம் வருவதுதான் இந்த கிராதக வேடம். சிவபெருமானது 25 மூர்த்தங்களுள் கிராத மூர்த்தமும் ஒன்று. 

இதையே மாணிக்க வாசகர் தமது போற்றித் திருஅகவலில் 

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்

பொருள்:  ( அர்ச்சுனனுக்கு  பாசுபதாஸ்திரம் அருள) வேடுவ உருவம் கொண்டு கையில் பினாகம் ஏந்தி முள் முருக்க மலர்  போன்ற சிவந்த உதடுகளை உடைய உமையம்மையுடன் எழுந்தருளினார் என்று பாடுகின்றார். 

கிராதன் என்றால்   ஈவு இரக்கம் இல்லாமல் சிறிது கூட இல்லாமல் கொலை செய்யும் வேடன் என்று பொருள். இங்கு சிவபெருமான் அர்ச்சுனனுக்கு அருள் இந்த் கொலையே செய்யும் வேடுவர் வேடம் தாங்கி உமையம்மையை வேடுவச்சி ஆக்கி அர்ச்சுனன் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் இடத்திற்கு வருகின்றார் நான்கு வேதங்களையே நாய்களாககி கூட்டிக்கொண்டு வருகின்றார். 

அதே சமயம் துரியோதனால் அர்ச்சுனனைக் கொல்ல அனுப்பப்பட்ட   மூகாசுரன் பன்றி வடிவம் எடுத்து அர்ச்சுனை தன் கோரைப் பற்களால் கொல்ல பாய்ந்து ஓடி வருகின்றான். இருவரும் ஒரே நேரத்தில் அம்பு எய்கின்றனர். மூகாசுரன் மாண்டான். ஆனால் வேடுவனுக்கும் அர்ச்சுனனுக்கும் சர்ச்சை துவங்குகின்றது. முதலில் விற்போர்  இருவரும் சரமாரியாக அம்புகளை  விடுத்து   போரிடுகின்றனர்.  இதையே அன்பர்கள் "விஜயன் வில்லால் அடித்தான், சாக்கியன் கல்லால் அடித்தான்"   என்று கொண்டாடுகின்றனர். வேடுவனாக வந்த சிவபெருமான் அர்ச்சனுடைய காண்டீபத்தை உடைக்க பின்னர் இருவருக்கும் மல்யுத்தம் துவங்குகின்றது. தன் திருமேனி ஸ்பரிசம் அர்ச்சுனனுக்கு கிடைக்க அந்த பரமகருணாமூர்த்தி செய்த திருவிளையாடல் இது. 

பின்னர் சிவபெருமான் உண்மைக் கோலம் காட்டி அவனை காக்கவே தான் இவ்வடிவத்தில் வந்ததை உணர்த்தி பாசுபதாஸ்திரத்தையும்  வழங்குகிறார்.    




காரணீஸ்வரத்தில் மாசி மகத்தன்று காலை சுமார் பத்து மணி அளவில் சந்திரசேகரர் சன்னதி தெருவில் உள்ள செங்குந்த விநாயகர் கோவிலுக்கு எழுந்த்ருளுகிறார். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெறுன்றது. பின்னர் இரவு சுவாமி கிராத மூர்த்தி  வேடத்தில் அருட்காட்சி தந்து வீதி உலா வருகின்றார்.   


”கொத்தலர் குழலியோடு விசயர்க்கு நல்கு
 குணமாய வேட விகிர்தன் ”


 என்று  திருஞான சம்பந்தர் போற்றிய வேட உருவைக் கண்டு களியுங்கள்.


அடுத்து தாங்கள் காண்பது செங்குந்த கோட்ட சிவசுப்பிரமணிய சுவாமியின் மயில்வாகன சேவை ஆகும்.  இந்த அலங்காரத்தின் சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ள அடுத்த படங்களைப் பாருங்கள்.






ஆம் அன்று ஓம் என்னும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை என்பதால் நான்முகனைக் குட்டி சிறையில் அடைத்து அந்த மெய்ப்பொருளை  தகப்பனுக்கே உபதேசம் செய்த தகப்பன்சுவாமி இங்கே ஓம் என்னும் பிரணவத்தின் இதையே ஓம்கார சொருபமாக  பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  

ஆமாம் பிரணவத்தின் பொருள்தான் என்ன? "ப்ர" என்றால் விசேஷமானது. "நவம்" என்றால் புதுமை என்றும் ஒரு பொருள். அதாவது சிந்திக்க, சிந்திக்க - அனுபவிக்க அனுபவிக்க புத்தம் புதிய  சிறப்பான உண்மைகளை உணர்த்துவது பிரணவம் . என்றும் வாடாமல், காலத்தால் தேயாமல் எப்போதும் புதுமையாகவே இருக்கும் ஆன்மதத்துவம்தான் பிரணவம் என்பார் வாரியார் சுவாமிகள். 





 மிக்க  நன்றி

கோமதி அரசு அம்மா