பத்து மலை முருகன் தரிசனம்
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவசகதியின் அருமைப் புதல்வன் அழகன் முருகனுக்கு உரிய மிக முக்கிய திருநாள் தைப்பூசம். கடல் கடந்த மலேசியாவில் தைப்பூசம் மிகசிறப்பாக கொண்டாடப்பட்டு, தைப்பூசம் என்றால் அது பத்துமலை முருகன் கொண்டாட்டம் என்று வான்(உலக)புகழ் கொண்டூ விட்ட இந்த தைப்பூச நன்னாளில் அந்த கந்தப்பெருமானின் வாகனமான மயில் வாகன தரிசனத்தை கண்டு அவன் அருள் பெற்று ஆனந்த அடைவோமாக. அப்படியே பத்து மலை முருகனின் தரிசனமும் பெறலாம்.
முருகன் பின்னழகு
முருகனுக்கு பூசப்பட்டுள்ள வர்ணம் ( பெயிண்ட்) இப்பகுதிகளில் புத்தர் சிலைகளுக்கு பூசப்படும் சிறப்பு வர்ணம் ஆகும்
உள்ளே பல்வேறு திருமுருகன் ஆலயங்கள் மற்றும் முருகனின் திருவிளையாடகள் சுதை சிற்பங்களாக மைத்திருக்கின்றனர்.
முருகப்பெருமானின் அருளினாலே அவரை தரிசிக்கும் பாக்கியக் கிடைத்தது அப்போது எடுத்த படங்கள் இவை. அன்பர்கள் அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்.




