Showing posts with label கயிலாசநாதர். Show all posts
Showing posts with label கயிலாசநாதர். Show all posts

Sunday, October 30, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 8

காரைக்காலில் இருந்து அன்பர் பொன்.மனோகரன் அனுப்பிய கொலுக் காட்சிகள் இப்பதிவிலும் தொடர்கின்றன.


முதலில் காரைக்காலில் அன்னை மலைமகள் பார்வதி உலக உயிர்களுக்கிரங்கி தவம் செய்த வரலாற்றைப்பற்றி அறிந்து கொள்ளளாமா? பொன்னி நதி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை வளநாட்டிலே ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உயிர்கள் எல்லாம் உய்யும் பொருட்டு எம் அம்மை ஜகத்ஜனனி சாகம்பரியாக, தானே பூவுலகிற்கு அரி சொல் ஆற்றங் கரையிலே (அரிசலாறு) திருக்கயிலை மலையிலிருந்து தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய இறையருளால் மழை பெய்து எங்கும் சுபிக்ஷம் ஏற்பட்டது. பின் அங்கேயே அம்மையும் சௌந்தராம்பிகை என்னும் திருநாமத்துடன், கைலாயநாதருடன்(திருக்கயிலையிலிருந்து வந்தவர் என்பதால்) திருக்கோவில் கொள்கின்றாள். இந்த புண்ணிய தலத்திலும், இவ்வாலயத்திற்கு எதிரே சோமநாயகி உடனமர் சோமநாயகி ஆலய வளாகம் உள்ளது,இவ்வளாகத்தில்தான் காரைக்காலம்மையாரின் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நின்று அன்னம் பாலிக்கும் கோலத்தில் காரைக்காலம்மையார் அருள் பாலிக்கின்றார். இக்கொலு இவ்வாலய வளாகத்தில் வைக்கப்பட்ட கொலுவாகும்.




ஐயன்








அன்னை சிவபூஜை செய்யும் கோலம்






கொலுவின் பல்வேறு பொம்மைகள்











தவழும் கண்ணன் கோல கொலு









ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய


துக்க நிவாரணி அஷ்டகம்




ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி




ஜெயஜெய ஸ்ரீதேவி




ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி




ஜெயஜெய ஸ்ரீதேவி




ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி




ஜெயஜெய ஸ்ரீதேவி




ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி




துக்க நிவாரணி காமாக்ஷி (8)




அம்மன் அருள் வளரும் .........





Friday, October 28, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 7

காரைக்காலில் இருந்து இந்தக் கொலுப்படங்களை அனுப்பி வைத்த அன்பர் திரு பொன். மனோகரன் அவர்கள், இவர் அடியேனது நண்பர்.

காரைக்கால் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காரைக்காலம்மையார்தான். அனைத்து உயிர்களுக்கு அமுது படைக்கும் ஆண்டவனுக்கே அமுது படைத்தவர்.

இன்றும் ஆணி பௌர்ணமியன்று இறைவன் பிச்சாண்டவராக அம்மையார் திருக்கோவிலுக்கு எழுந்தருளி அமுது கொள்கிறார் இவ்விழா மாங்கனித் திருவிழா என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

இறைவன் தனது திருவாயால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர். பேயுறு கொண்டு த்லையால் திருக்கயிலை ஏறிச்செல்லும் போது வருமிவள் எமைப்பேணும் அம்மை காண் என்று இறைவன் மலையரசன் பொற்பாவைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்.

பதிக முறைப் பாடல்களை முதலில் பாடியவர் நால்வருக்கும் முன்னோடி.

இவ்வளவு சிறப்பு மிக்க காரைக்கால் அம்மையார் ஆலயம் காரைக்காலில் சௌந்தராம்பாள் உடனாய கைலாசநாதர் ஆலயத்திற்கு எதிரே, சோமநாயகி உடனாய சோமநாதர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு அருகில் சந்திர குளம் புதுப்பிக்கப்பட்டு எழிலாக விளங்குகின்றது. குளத்தின் மறுகரையில் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் மஹா லக்ஷ்மித்தாயாருடன் நித்ய கல்யாண பெருமாளாக சேவை சாதிக்கின்றார்.

வாருங்கள் அன்பர்களே காரைக்கால் கொலுவின் சில காட்சிகளை இப்பதிவில் காணலாம்.










முதலில் அச்சது பொடி செய்த அதிதீரன்









புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அன்பாக அனுமதியும் கொடுத்துள்ளனர்









மறுபக்கம் பொம்மை








வரவேற்பில் நந்தி தேவர்


வள்ளி தெய்வானையுடன் தேவ சேனாதிபதி




கண்ணன், பாற் கடல் வண்ணன். விஸ்வரூபன்






காரைக்கால் அம்மையார் வரலாறு 1
(புனிதவதியாய் அவதாரம் செய்தது முதல் ஆலங்காட்டில் ஐயனின் திருப்பாதத்தில் அமரும் வரை)


அம்மையார் வரலாறுபற்றி அறிய சொடுக்குங்கள் இங்கே.







காரைக்கால் அம்மையார் வரலாறு 2







அம்மை சிவ பூஜை செய்யும் கோலம்


அம்மைக்கு சேவை செய்ய பூதகணங்கள்









பன்னிரு திருமுறைகளால் ஆன சிவலிங்கம்










ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய


துக்க நிவாரணி அஷ்டகம்







இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை


யென்று நீ சொல்லிடுவாய்


சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்


சுகமதைத் தந்திடுவாய்


படர்தரு இருளில் பரிதியாய்வந்து


பழவிணை ஓட்டிடுவாய்


ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி


துக்க நிவாரணி காமாக்ஷி (7)



அம்மன் அருள் வளரும் .........