Showing posts with label கண்ணாடிப் பல்லக்கு. Show all posts
Showing posts with label கண்ணாடிப் பல்லக்கு. Show all posts

Sunday, August 19, 2018

சொர்ணாம்பாள் ஆடிப்பூர உற்சவம் - 6

இப்பதிவில் பாரத்வாஜேஸ்வரம் சொர்ணாம்பிகையின் ஆடிப்பூர உற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் மற்றும் பத்தாம் திருநாள் ஆடிப்பூர அலங்காரத்தைக் கண்டு களிக்கின்றீர்கள்.

ஒன்பதாம் திருநாள் அலங்காரம்







சொர்ணாம்பாள் இடபவாகன சேவை





வெட்டி வேர் தேர்


ஆடிப்பூரத்தன்று சொர்ணாம்பாள் அலங்காரம்






ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு இந்த புதிய கண்ணாடி பல்லக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 


நூதன கண்ணாடிப் பல்லக்கில்  சொர்ணாம்பாள்




இத்துடன் சொர்ணாம்பிகையின் ஆடிப்பூர உற்சவ பதிவுகள் நிறைவு பெறுகின்றன.

Wednesday, February 3, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 8

பழனியாண்டவர் உபநயன உற்சவம்


தைப்பூசம் பத்தாம் நாளன்று தினமும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் சேவை சாதித்த உற்சவம் கொடியிறக்கம் நடைபெறுகின்றது. அநேகமாக எல்லா ஆலயங்களிலும் பத்து நாள் பிரம்மோற்சவம் நடைபெும் ஆனால் கந்த கோட்டத்தில் இருபது நாட்கள் பிரம்மோற்சவம் நதைபெறுகின்றது. எனவே அடுத்த நாள் கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு எழுந்தருளி தெப்பல் உற்சவம் கண்டருளி திரும்பி வருகின்றார். பன்னிரண்டாம் நாள் மாலை பழனியாண்டவர் பால தண்டாயுதபாணிக்கு உபநயன உற்சவம் நடைபெறுகின்றது. பின்னர் அவர் பதினாறு கால் விமானத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தாங்கள் பார்க்கின்ற படங்கள் பால தண்டாயுதபாணியின் அருட்காட்சிகள்.

பழனியாண்டவர் பதினாறு கால் விமான சேவை


பதினாறு கால் விமானம் பின்னழகு


உற்சவர் கண்ணாடி பல்லக்கு சேவை

பழனியாண்டவருடன் இன்று உற்சவர் முத்துக்குமார சுவாமி இன்றைய தினம் வாள்கார இரத்தின செட்டியார் பாரியாள் அபரஞ்சி அம்மாள் கண்ணாடி பல்லக்கு சேவை தந்தருளுகின்றார். இன்றைய தினம் தான் பாகம் பிரியா அம்மைகளை ஐயனின் இரு பக்கமும் இல்லாமல் தனியாக முத்துக்குமரனுக்கு எதிரில் சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது. அலங்கார மண்டபத்தில் கண்ணாடி பல்லக்குக்கு எழுந்தருளும் போது ஒரே மஞ்சத்தில் எதிரெதிராக ஐயனும் அம்மைகளும் எழுந்தருளி அருள் பாலித்தனர்.

இந்த வருடம் கண்ணாடிப் பல்லக்கு புதுப்பிக்கப்பட்டு. புதுப்பொலிவுடன் விளங்கும் பாங்கைக் கண்டு களிக்கிறீர்கள்.

கண்ணாடி பல்லக்கில் முத்துக்குமார சுவாமி


எதிரே அம்மையர் இருவரும்


கண்ணாடிப்பல்லக்கு புதுப்பொலிவுடன்