Monday, July 14, 2008

மஹா கும்பாபிஷேகம்

மேற்கு மாம்பலம் விசாலாக்ஷி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்










காசி விஸ்வநாதர் - விசாலாக்ஷி

இன்று கான்க்ரீட் காடாக விளங்கும் சென்னை மாம்பலம் பகுதி வில்வ மரக் காடாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம், அக்காலத்தில் இவ்விடம் மாபிலம் அதாவது பெரிய குகை(பிலம்) ஆக விளங்கியது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விடத்தில் உருவான பழமையான கோவில்தான் விசாலாக்ஷி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலயம்.





அம்மன் இராஜ கோபுரம் மற்றும் மண்டபம்

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பின் ஆகமவிதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் நடைபெறாததால் திருக்கோவில் சிறிது சிறிதாக சிதிலம் அடைந்து வந்தது. 2005 வருடத்தில் ஐயன் விமானம் விழும் நிலையும் ஏற்பட்டது.







இராஜ கோபுரத்தின் வடக்கு முகத் தோற்றம்



இராஜ கோபுரத்தின் தெற்குமுகத் தோற்றம்

தெற்கு இராஜ கோபுரம்

எனவே ஆஸ்திக அன்பர்களால் திருக்கோவில் முழுவதையும் மொத்தமாக மாற்றி அமைத்து கிழக்கு வாயில் ஏழு நிலை இராஜ கோபுரத்துடனும். தெற்கு வாயிலில் ஐந்து நிலை இராஜ கோபுரத்துடனும் மற்றும் விநாயகர், முருகர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு தனி சன்னதியுடனும் ஒரு மண்டபத்துடன் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு இந்து அறநலத் துறையின் அனுமதியும் பெறப்பட்டு 2005ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.





புது மண்டபத்தின் அழகிய சுதைச் சிற்பங்கள்


ஆலமர் கடவுள்




ரிஷபாரூடர்






மீனாக்ஷி திருக்கல்யாணம்





கல்யாண சுந்தரர்



பல்வேறு மெய்யன்பர்களின் உதவியுடன் திருக்கோவில் முழுமையாகக் கட்டப்பட்டு புது இராஜ கோபுரங்கள், புது சன்னதிகள், புது மண்டபம், புது கொடிக்கம்பம் ஆகியவற்றுக்கு ஆகமமுறைப்படி இன்று ( 14-07-08) காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோவிலின் இன்றைய பொலிவை இப்பதிவில் காண்கின்றீர்கள்.





சோமாஸ்கந்தர்




எழிற் குமரன்




கிராதகர்
நந்தியம்பெருமான்


புதுக்கொடிமரம்

இன்று இரவு திருக்கல்யாணமும், அன்பர்களால வழங்கப்பட்ட புது வாகனங்களில் ( விநாயக்ருக்கு மூஷிகம், ஐயனுகு ரிஷபம், அம்மனுக்கு காமதேனு, முருகருக்கு மயில், சண்டிகேஸ்வரருக்கு சிறிய ரிஷபம் ) பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் சிறப்பாக நடைபெற உள்ளது. முடிந்த அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெற பிரார்த்திக்கின்றேன்.



No comments: