Showing posts with label மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயம். Show all posts
Showing posts with label மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயம். Show all posts

Monday, April 2, 2018

பங்குனிப் பெருவிழா - 1

பங்குனி உத்திரம் 

வசந்த நவராத்திரி அம்பாள் கொலு 

பங்குனி  பிரதமை துவங்கி  இராம நவமி வரை வசந்த நவராத்திரி 

பங்குனி மாதம்  தமிழ் மாதத்தில் நிறைவாக வரும் மாதம்.  பங்குனி உத்திரம்  இறை  வழிபாட்டிற்கு  மிகவும் உகந்த நாள். பங்குனி மாதத்தில் உத்திர நட்சித்திரமும், பௌர்ணமியும்  கூடும் என்பதால் பௌர்ணமியின் பலன்களும் கூடுகின்ற நாள். பங்குனி உத்திர நாள் சிவபெருமானுக்குரிய அஷ்ட விரத நாட்களில் கல்யாண விரத நாள் ஆகும். அன்றைய தினம் இறைவனின் திருமணத்தை தரிசித்து வணங்குவது அனைத்து நலன்களையும் தரும்.  திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். 

கலைமகள் பிரம்மாவை மணந்த நாள் என்பதால் அன்று  குழந்தைகள் ஆலயம் சென்று வழிபட  கல்வியில் சிறப்பாக விளங்குவர்.

பங்குனி உத்திரத்தன்று அர்ஜுனன் அவதரித்தான். அன்றுதான் பகவத்கீதை உபதேசமும் பெற்றான். 

பங்குனி உத்திரத்தன்று நம் குல தெய்வத்தை வழிபட  முன்னோர்களின்  ஆசி கிட்டும். 

பல தெய்வத்திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றது.  இராமர்-சீதை,  முருகன்-தெய்வானை, ஆண்டாள் -ரங்கமன்னார் திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று  நடைபெற்றன. 

ஐயப்பனின் அவதரித்ததும்  தினமும்  பங்குனி உத்திர நாளில் தான்.

இரதி வேண்ட சாம்பலான மன்மதனை இறைவன் எழுப்பியதும்  இந்நாள்தான். 

தெய்வீக அற்புதங்கள்  பல பெற்ற பங்குனி உத்திர திருநாள்    பாவத்தைப் போக்கும் அற்புத நாளாகவும். பகையை அகற்றும் திருநாளகவும் விளங்குவதால் , தமிழகமெங்கும் பல தலங்களில் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன.  இவ்வருடம்(2018)   சென்னையின் சில தலங்களில் நடைபெற்ற பங்குனிப் பெருவிழாவின் சில காட்சிகளை வரும் பகிர்ந்து கொள்கிறேன் கண்டு  இன்புறுங்கள் அன்பர்களே. 

இம்முதல் பதிவில் சென்னை மேற்கு மாம்பலம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின்  முதல் திருநாள் இரவு மாவடி சேவையில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளின் தரிசனம் காண்கின்றீர்கள் அன்பர்களே. 


விநாயகர்


காசி விஸ்வநாதர் 



அம்மையப்பர் 




விசாலாட்சி அம்பாள் 

வள்ளி தெய்வானை சமேத முருகன் 


பஞ்ச மூர்த்திகள் 


 பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .