Showing posts with label நடராஜர் உற்சவம். Show all posts
Showing posts with label நடராஜர் உற்சவம். Show all posts

Monday, March 18, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -17

பத்தாம் திருநாள் 

மாசி மக தீர்த்தவாரி

காலை நடராஜர் உற்சவம் 

விநாயகர் 

இந்த பத்தாம் திருநாள் தான் பெருவிழாவின் நிறை நாள் இன்றுதான் சுவாமி தீர்த்தம் வழங்குவார்( அருள் பாலித்தல்). இத்திருக்கோவிலில் மாசி மகம் நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு திருவிழா நடைபெறுகின்றது. 

ஆனந்த  நடராஜர்

தீர்த்தவாரியன்று காலை நடராஜர் உற்சவம். அம்மை சிவகாம சுந்தரியுடன் ஆனந்த தாண்டவக்காட்சி தந்தருளுகின்றார்.  இது முருகன் ஆலயம் என்பதால்  அம்மையப்பருடன் சண்முகரும் வலம் வந்தருளுகின்றார். 



அம்மை சிவானந்தவல்லி

மயில் வாகனத்தில் ஆறுமுகபபெருமான்
  எழுந்தருளும் அழகு  


ஆறுமுகப்பெருமானின் பின்னழகு

சண்முகருக்கு முன்னும் பின்னும் அலங்காரம் செய்கின்றனர். 

 பின் வருபவை முந்திய ஆண்டின் காட்சிகள் 
ஆனந்த கூத்தனின் அருட் கோலம் 

பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர்களையும்  ஐயனுடன் காணலாம்.

சிவகாம சுந்தரி அம்பாள் 

ஆறு முகரின் அருட்கோலம் 

பின்னழகு 


சுப்ரஹ்மண்யம்  சுப்ரஹ்மண்யம்
சண்முக நாதா 
சுப்ரஹ்மண்யம்

சுப்ரஹ்மண்யம்  சுப்ரஹ்மண்யம்
சண்முக நாதா 
சுப்ரஹ்மண்யம்


மதியம் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வந்து தீர்த்தம்  கொடுக்கின்றனர். உச்சிக் காலத்தில் யாக சாலையில் இந்த பத்து நாட்கள் பூசை செய்யப்பட்ட தீர்த்தத்தினால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. மாலை சிவ சுப்பிரமணீய சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அன்ன வாகனத்திற்கு என்ன அலங்காரம் செய்திருந்தனர் என்று யூகியுங்கள் அன்பர்களே. அந்த கந்தரலங்காரத்தை அடுத்த பதிவில் காணலாம்.  

Friday, November 11, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -14

சிவமயம்

திருசிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் பத்தாம் திருநாள், தக்ஷிணாயண புண்ய காலமான ஆடி மாதம் முதல் நாள் அதிகாலை நடராஜர் உற்சவம் , சுவாமியும், சிவகாமி அம்பாளும், காரைக்காலம்மையாரும், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவரும், மாணிக்கவாசகரும் சிறப்பு அபிஷேகம் கண்டருளுகின்றனர். பின்னர் ஆடல்வல்லானும் சிவகாம சுந்தரியும் உதய காலத்தில் திருவீதி உலா வந்து அருளுகின்றனர்.



சூரியப் பிரபையில் நடராஜர் திருவீதி உலா




சிவானந்தவல்லி

பின்னர் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி( தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி) திருக்குளத்தில் நடைபெறுகின்றது. பஞ்ச மூர்த்திகளும் குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுக்கின்றனர். இதற்கு முன் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அங்குராப்பணத்தின் போது போடப்பட்ட முளைகள் இறைவனிடம் சேர்ப்பிக்கப்படுகின்றது மற்றும் காப்பு நீக்கப்படுகின்றது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் குளக்கரையில் எழுந்தருளி அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றது பின்னர் அஸ்திர தேவருடன் பக்தர்கள் குளத்தில் மூழ்கி எழுந்து அருள் பெறுகின்றனர்.

தீர்த்தம் தர பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

விநாயகர்

சோமாஸ்கந்தர்

அம்பாள்

முருகர்

சண்டிகேஸ்வரர்