பத்தாம் திருநாள் மாலை
அன்ன வாகன சேவை
எழில் குமரன்
அன்ன வாகன சேவை
இந்த வருடம் முருகனுக்கு பிரம்மன் அலங்காரம் செய்திருந்தனர். அன்ன வாகனம் பிரம்மனுக்கு உரியதுதானே. இவ்வாறு சிவன்,விஷ்ணு, பிரம்மன் என்று மும்மூர்த்தி ரூபமாகவும் முருகனை நாம் இத்திருக்கோவிலில் தரிசனம் செய்தோம்.
பிரம்ம ரூப சுப்பிரமணியர்
அன்ன வாகன சேவை
அன்ன வாகன சேவைக்குப்பின் பெரு விழா கொடியிறக்கம் , பிரம்மோற்சவம் கண்டு களித்த தேவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் யதாஸ்தானம் திரும்பிச் செல்வதாக ஐதீகம்.





