Showing posts with label காமாக்ஷி அம்பாள். Show all posts
Showing posts with label காமாக்ஷி அம்பாள். Show all posts

Monday, September 25, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 6

ஐந்தாம்  ஆவரணம்


திருமயிலை வெள்ளீச்சுரம் காமாக்ஷியம்மன்
காமதேனு வாகனத்தில் 
மஹா கௌரி அலங்காரம்







வெள்ளீச்சுரம் ஐதீகம்= சுக்கிரன்(வெள்ளி)
 ஈசனை வழிபட்டு  இழந்த கண்ணை பெற்ற தலம் 




காமாக்ஷியம்மன் சரஸ்வதி அலங்காரம் 



மீனாக்ஷி திருக்கல்யாணம்  கொலு


***************


ந்தாவது ஆவரணம்

ராகம்: பைரவி                                                                                             தாளம்: ஜம்ப

பல்லவி

ஸ்ரீ கமலாம்பாயா: பரம் நஹி ரே ரே சித்த
க்ஷித்யாதி ஸிவாந்த தத்வ ஸ்வரூபிண்யா (ஸ்ரீ கமலாம்பயா)

அனுபல்லவி

ஸ்ரீ கண்ட விஷ்ணு விரிஞ்சாதி ஜநயித்ரியா:
ஸிவாத்மக விஸ்வ கர்த்ரியா: காரயித்ரியா: 

மத்யமம்
ஸ்ரீகர பஹிர்தஸார சக்ர ஸ்தித்யா ஸேவித
பைரவீ  பார்கவீ பாரத்யா  (ஸ்ரீ கமலாம்பயா)

சரணம்
நாதமய ஸூஷ்மரூப ஸர்வ ஸித்தி ப்ரதாதி 
தச ஸக்த்யாராதித மூர்த்தே: ஸ்ரோத்ராதி தஸ-கரணா
த்மக குல கௌலிகாதி பஹுவிதோ பாஸித கீர்தே:
அபேத நித்ய ஸுத்த புத்த முக்த ஸச்சிதாநந்த மய
பரமாத் வைதஸ்பூர்தே:
ஆதி மத்யாந்த ரஹித அப்ரமேய குருகுஹமோதித
ஸர்வார்த்த ஸாதக பூர்த்தே:

மத்யமம்
மூலாதி நவாதார வ்யாவ்ருத்த தஸத்வநி
பேதஜ்ஞ யோகி ப்ருந்த ஸம்ரக்ஷண்யா: 
அநாதி மாயா-வித்யா கார்ய காரண விநோத
கரண படுதர கட‌க்ஷ வீ‌க்ஷண்யா (ஸ்ரீ கமலாம்பாயா) 

ஓ மனமே!  பூமிதத்வம் முதல் சிவதத்வம் வரையான தத்வங்களின் ஸ்வரூபமாக விளங்குபவளான ஸ்ரீ கமலாம்பிகைக் காட்டிலும் வேறு மேலான தெய்வம் இல்லை. அவள்தான்  நீலகண்டன், விஷ்ணு, பிரம்மா, முதலியவர்களை படைத்தவள், அவள்தான் சிவமயமான இப்புவனங்கள் அனைத்தையும்  படைத்து, இயங்கச்செய்பவள்.   பத்து இதழ்கள் உள்ள பஹிர்தசார சக்ரத்தில் உறைபவள், இச்சக்ரம் அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருள வல்லது. அவளை  லக்ஷ்மி, சரஸ்வதி, பைரவி ஆகியோர் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பேற்பட்டவளான ஸ்ரீ கமலாம்பிகையை விட மேலான தெய்வம் வேறு கிடையாது.

அணிமா மற்றும் அஷ்டமாசித்திகளை அருளுபவள்,  அவளை நாதமய சூக்க்ஷரூபமாக சர்வசித்திப்ரதா முதலான பத்து சக்தி தேவியர்கள் ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள், அத்தகைய   மூர்த்தியாகயுள்ள அவளைக் காட்டிலும் வேறு மேலான தெய்வம் கிடையாது.

 கண் காது முதலாம் ஐந்து  ஞனேந்திரியங்கள், வாக்கு முதலான ஐந்து கர்மேந்திரியங்கள் ஆக பத்து இந்திரியங்கள் சொரூபமானவள், குலகௌலீனி சக்தி தேவியரால் பல்வகையான உபாசனை செய்யப் பெற்ற புகழை உடையவள், பேதங்களற்ற, அழிவற்ற, மாசுகளற்ற, ஞானஸ்வரூபமான,  மாயையிலிருந்து விடுபட்ட, சச்சிதானந்தமான, மேலான அத்வைதத்தின் எழுச்சியாக இருக்கும் அவளைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறொன்றும் இல்லை. அவள் தோற்றம் முடிவு முதலான அளவுகளுக்கு அப்பால் இருப்பவள்,  குருகுஹனை ஈன்று மகிழ்ச்சியடைந்தவள், அனைத்து புருஷார்த்தங்களையும் நிறைவேற்றுபவள்.

 மூலாதாரம் முதல் தொடங்கி ஒன்பது ஆதாரங்களால் சுற்றப்பட்டவள், பத்து விதமான நாதங்களையும் அவற்றிற்குண்டான வேறுபாடுகளையும் அறிந்த யோகியர் கூட்டத்தை காத்தருள்பவள், என்று தோன்றியது என்றே சொல்ல முடியாத மாயையின் வடிவான அஞ்ஞானத்தின் காரிய காரணங்களை விலக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த கடைக்கண் பார்வை உள்ளவளான அந்த ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான வேறு தெய்வம் இல்லை இல்லை இல்லவே இல்லை என மனமே! புரிந்து கொள்.


இவ்வைந்தாம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வார்த்த சாதகம் ஆகும். இச்சக்ரம்  வெளி பத்து முக்கோணங்களாக  விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுராஸ்ரீ. இதில் அட்டித்து விளங்கும் யோகினி குலோத்தீர்ண  யோகினி. அவஸ்தை குருபஸ்தனம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் சர்வகாமப்ரதா  முதலான பதின்மர் ஆவர். சர்வார்த்த சாதக சக்ரம் என்பதால் எல்லா புருஷார்த்தங்களும்  நிறைவேறும்.


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு



                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Friday, September 26, 2014

நவராத்திரி நாயகி - 3

திருமயிலை வெள்ளீச்சுரம் காமாக்ஷி அம்பாள்
 அன்ன வாகன சேவை



அலை மகள் கலை மகளுடன் மலை மகள் 

காமாக்ஷி அம்பாள் 


அம்மன் அன்ன வாகனத்தில் கொலு




லை மகள் 
மற்றும் வெள்ளீஸ்வர ஐதீகம்
சுக்கிராச்சாரியார் வெள்ளீஸ்வரரை வழி பட்டு  கண் பெறுதல் 

கலைமகள்



அபிராமி அம்மை பதிகம்

வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர 
அருள் மழை பொழிந்தும் இன்ப

வாரிதியிலே நின்ன(து) அன்பெனுஞ் சிறகால்
வருந்தாமலே அணைத்துக்

கோடாமல் வளர்குஞ்சரம்  தொட்டுஎறும்பு கடை
கொண்டகரு ஆன சீவ

கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினைல் 
குறையாமலே கொடுத்து 

நீடாழி உலகங்கள்யாவையும் திருஉந்தி
நெட்டு தனிலே தரிக்கும் 

நின்னை அகிலங்களுக்கு அன்னை என்று ஓதாமல்
நீலி என்று ஒதுவாரோ?

ஆடாய நான் மறையின்  வேள்வியால் ஓங்கு புகழ் 
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!   (5)


பொருள்: சீவராசிகள் என்னும் உயிர்களை படைப்பவள் அன்னை. அந்த்ப்பப்யிர்கள் வாடாமல் என்றும் தழைத்து ஓங்கி உயர்ந்து  வளர, தன்  அருள் மழை பொழிந்து  அப்பயிர்களை இன்பக்கடலிலே ஆழ்த்தி தன் அன்பென்னும் சிறகால் அணைத்துக் கொள்பவளும் அவளே. வேதங்களின் வாக்குப்படி ந்தைபேரும்  யாகங்களால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமான திருக்கடவூரில் உறைபவளே! அமுதீசரின் இட பாகத்தை விட்டு ஒரு போதும் அகலாதவளே! கிளியை தன் திருக்கரத்தில் ஏந்தியவளே!அனைவருக்கும் அருள் புரிபவளே! அபிராமியே என்று அன்னையின் கருணையை வியந்து பாடுகின்றார் அபிராமி பட்டர்.

பல்குஞ்சரம் தொட்டு எறும்புகடை ஆனது ஒரு 
பல் உயிர்க்கும் கல் இடைப்

 பட்ட தேரைக்கும் அன்றுப்பவித்திடு கருப்
பையுறு ஜீவனுக்கும்

மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்

மற்றும்  ஓரு மூவருக்கும் யாவர்க்கும் அவரவர்
மனசலிப்பு இல்லாமலே

நல்கும் தொழிற்பெருமை உண்டாய் இருத்தும்மிகு
நவநிதி உனக்கு இருந்தும்

நான் ஒருவன் வறுமைய்யால் சிறியன் ஆனால்அந்
நகைப்பு உனக்கே அல்லவோ?

அல்கலந்து உம்பர்நாடு அளவேதுக்கும் சோலை
                                                    ஆதி கடவூரின் வாழ்வே!
 
                              அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
                                                  அருள்வாமி! அபிராமியே!   (6)

பொருள்: யானை முதல் எறும்பு வரை உள்ள பல்விதமான உயிர்களுக்கும், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருவில் உள்ள ஜீவனுக்கும் மற்றும் அசையும், அசையா பொருள்களுக்கும், தேவர் கூட்டத்திற்கும், மும்மூர்த்திகளுக்கும், மற்றும் அகிலத்தி; உள்ள அனைவருக்கும் அவரவர் மனம் சோர்வடையாதபடி அவர்கள் செய்ய வேண்டிய தொழில்களை தந்தருளும் பெருமைஉனக்கு உண்டு. அடர்ந்து இருள் செறிந்து வானுலகை அளப்பது போல் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின் வாழ்வே! அமுதீசர் இடப்பாகம் ஒரு போதும் அகலாத அன்னையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அனைவருக்கும் அளவிலாது அருள்புரிபவளே! அபிராமவல்லியே! நவநிதியும் உன்னிடம் இருந்தும் உன் பகதனாகிய நான் வறுமையில் வாடினால் அதனால் உண்டாகும் இகழ்ச்சி உனக்கல்லவோ? என்று அன்னையிடம் வினவுகிறார் அபிராமி பட்டர்.      

                                                                                                                                                                                             அம்மன் அருள் தொடரும். . . . .. ...