Showing posts with label கருட சேவை. Show all posts
Showing posts with label கருட சேவை. Show all posts

Wednesday, March 15, 2017

மாசி மக தீர்த்தவாரி - 2

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   3   4   5  

கோடீஸ்வர யோகம் மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும்  வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது. மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. 


புதுப்பேட்டை அரங்கநாத சுவாமி தீர்த்தவாரி 

கருடவாகனத்தில் ரங்கநாத ஸ்வாமி


கடலில் இறங்கும் பெருமாள் 



*****************



மாதவப்பெருமாள் 


சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் 
**************


அணைக்கரைப்பட்டு
  பட்டாபிஷேக ராமர்  ஆலயம் பெருமாள் 

உபய நாச்சியார்கள் 

சக்கரத்தாழ்வார் 

பதினாறு கரங்களுடன் முன்புறம் சக்கரத்தாழ்வாரும் பின்புறம்   யோக நரசிம்மரும் கூடிய சக்கரத்தாழ்வாரே எழுந்தருளி அருள் பாலித்தார். 

நரசிம்மர் 





மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும்.  குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால்  குழந்தை  பிறப்பதாக ஐதீகம்.


மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி” என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில் ஸ்ரீலலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.

இந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. 

                                                                                                                                                                                                                                                                                                                                                            மாசிமக தரிசனம்   தொடரும்  .................

Tuesday, June 28, 2016

புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 4

மூர்த்திகள் வாகன சேவை 

மூஷிக வாகனத்தில் சக்தி விநாயகர் 
பின்னழகு 




பொதுவாக திருக்கல்யாணம் முடிந்தபின் சிவபெருமான் திருக்கயிலாய வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பார். 

திருக்கயிலாய வாகனத்தில் மல்லிகேஸ்வரர் 


அதிகார நந்தி வாகனத்தில் விஸ்வநாதர் 

காமதேனு வாகனத்தில் மஹேஸ்வரி அம்பாள் 


மயில் வாகனத்தில் முருகர் 
கருட வாகனத்தில் 
சத்ய நாராயணப்பெருமாள்

ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

பொதுவாக பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து அருள் பாலிப்பார்கள். இக்கோவிலில் மல்லிகேஸ்வரர் மற்றும் விஸ்வநாதர்  அருள் பாலிப்பதால் இருவரும்  திருவீதி எழுந்தருளி நயன தீட்சை தந்தருளினர். விஸ்வநாதர் அதிகார நந்தியிலும், மல்லிகேஸ்வரர் திருக்கயிலாய வாகனத்திலும் தரிசனம் தந்தருளினர்.   மேலும் இக்கோவிலின்  சத்ய நாராயணப்பெருமாளும் கருட வாகனத்தில் எழுந்தருளி  அருள் பாலித்தார் என்பது ஒரு தனி சிறப்பு. 

இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்