Wednesday, September 25, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 8

இவ்வாலயத்தின் சிறப்பு அம்சம் இவ்வாலயத்திற்கு முன்புறம் உள்ள  16 கால் மண்டபம். மண்டபத்தின் தூண்களில் மிகவும் அற்புதமான  கற்சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளன.  அவற்றுல் சிலவற்றை இப்பதிவில் காண்கின்றீர்கள்.

அவற்றுள் அபூர்வமாக அமைந்துள்ள ஒரு சிற்பம் ஆலிங்கன சரபேஸ்வரர். சரபேஸ்வரரும் நரசிம்மரும் ஒருவரை ஒருவர் தழுவிய கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். இவருக்கு ஞாயிறு  மாலை இராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆலிங்கன சரபேஸ்வரர் உற்சவ மூர்த்தியாகவும் அருள் பாலிக்கின்றார். சைவ -வைணவ ஒற்றுமைக்கு ஒரு சிறந்த தலமாக கோயம்பேடு விளங்குகின்றது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது.



சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.  இத்தலத்தைஆதிபிரதோஷத்தலம்என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள். 







லிங்கோத்பவர்




கஜசம்ஹார மூர்த்தி



பிக்ஷாடணர்

வீரபத்திரர்



ஐந்து தலையுடன் ஆதி பிரம்மன் 



 முருகர்( மகர குண்டலங்களின் அழகை கவனியுங்கள்)





ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு




அதிகார நந்தி 



அர்ச்சுனன் தபசு


இராவணன்



சிவ பூசை 


சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்குகுறுங்காலீஸ்வரர்என்ற பெயர் உண்டானது. “குசலவம்என்றால்குள்ளம்என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது.

சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள், அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.

நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து  கொள்கிறார்கள்.     பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம். கோஷ்டத்தில், தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவர் எழுந்தருளியுள்ளனர்.



குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.


காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.


கோயம்பேடு என்ற ஊரும் இல்லை 

குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை 
வடக்குப் பார்த்த சிவனும் இல்லை 
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை - என்பார்கள்.

‘‘உலகத்தில் கோயம்பேடுங்கிற பேர் கொண்ட ஊர் இது ஒன்றுதான். பொதுவாக ஒரு ஊர்ல சிவபெருமானுக்கு இருக்கற பேரு, இன்னொரு ஊருல இருக்கும். ஆனால், இந்த ஈஸ்வரனோட பேரு, வேறு எங்கும் இல்லை! வடக்கு நோக்கி, எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். அடுத்தது, மடக்குப் போன்ற லிங்கம். இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம்- ஒரு மடக்கையை (பானை மூடப் பயன்படும் மூடியை) கவிழ்த்தது போல் இருக்கும். இதுவும் இங்குள்ள சிறப்பம்சம்!’’

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

கோமதி அரசு said...

//ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்//

இன்று பிரதோஷபூஜைக்கு போக முடியவில்லையே என்று நினைத்தேன். உங்கள் பதிவில் அருளி விட்டார் தரிசனம் செய்ய.

குறுங்காலீஸ்வரர் தாள் போற்றி போற்றி.!
நன்றி, வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

ஆதிபிரதோஷத்தலத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றேன்.
முன்பே இந்த ஆலயத்தை பற்றி உங்கள் தளத்தில் படித்து இருக்கிறேன், இப்போது மண்டப தூண்களில் உள்ள தெய்வங்களை தரிசனம் செய்து விட்டேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட் ஐயா.

S.Muruganandam said...

எல்லாம் அவன் செயல் கோமதி அம்மா. அடியேன் ஒரு கருவி அவ்வளவே.