Wednesday, October 21, 2015

அன்னையின் நவராத்திரி - 9

                                                     ஒன்பதாம்   நாள்  கொலு

முந்தைய பதிவுகள் :    முதல் நாள்,      இரண்டாம் நாள்,    மூன்றாம்நாள் ,   நான்காம்நாள்,      ஐந்தாம்நாள்,     ஆறாம் நாள்,         ஏழாம் நாள்,                   எட்டாம் நாள்


முத்து மாரியம்மன் 
காளிகாம்பாள் அலங்காரம்


நவராத்திரியின் நிறை நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைமஹா நவமி நாளான இன்று அன்னையை கலைகளின் தாயாகிய சரஸ்வதி தேவியாய் அம்பிகை திகழ்கின்றாள். நாத வீணை தாங்கி, வெள்ளை கலை உடுத்து வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சகல கலா வல்லி சொரூபமாக இன்று தேவியை அலங்கரித்து தியானித்து பூஜிக்க கல்வி ஞானம் பெருகும், உத்யோக உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.


கற்பகவல்லி  சிம்ம வாகனத்தில் 
 மகிஷாசுர மர்த்தினி அலங்காரம் 


ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யா


ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸுதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் கரை:
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதி தேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி: பாமினீம் பரமேஷ்டின:

சதுர்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுராரன வல்லபாம்
நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்

பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:


படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ் பூந்தாமரை போல் கையும்- துடி இடையுங்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி



************************


ரக்தபீஜ சம்ஹாரி அலங்காரம்


மஹா நவமியான இன்று முழு மனத்துடன் ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் அம்பாளை தியானித்து ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்கள் அந்த அன்னையின் திருவடிகளை அடைவர் என்பது திண்ணம்.

********************

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்



ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர
நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)



                                                                                     ஸித்திதாத்ரி துர்க்கா                                               


நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில் சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.

கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார். இதனால் சிவ பெருமனும், "அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.


காமாக்ஷியம்மன் பாயும் குதிரையில் 
மீனாக்ஷி அலங்காரம் 




ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |
ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.) 


நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |
யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதா ||

தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |
மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||

               தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் || 

படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர். 

**********************


மூலிகைகளால் கோலம் 


நவதுர்கா ஸ்துதி


ஜெயஜெய சைலா புத்திரி பிரஹ்ம
சாரிணி சந்தர கண்டினியே
ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்ய யளே
ஜெயஜெய கால ராத்ரி கௌரி
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே || (8)

( நவ துர்க்கைகளின் நாமம் அவர்களது வர்ணத்தினாலேயே கூறப்பட்டுள்ளது )

****************************



நவராத்திரியின் நிறைநாள் இரவு கற்பகாம்பாள் கம்பா நதிக்கரையில்  சிவ பூஜை செய்யும் கோலத்தில் கொலு தர்பார் காட்சி அருள்கின்றாள். ஒரு நாள் திருக்கயிலையில் அம்மை விளையட்டாக ஐயனின் திருக்கண்களை பொத்த அதனால் அகிலாண்டமும் பிறழ அதற்கு பிராயசித்தமாக அம்மை காமாட்சியாக காஞ்சி வந்து கம்பா நதிக்கரையில்  மணலால் சிவபூஜை செய்யும் வரும் போது ஒரு நாள்  ஆற்றில் வெள்ளம் வர அம்மை ஐயனை அனைத்துக்கொள்ள தன் உடலில்  முலைத்தழும்பும்   வளைத்தழும்பும் ஐயன் பெற்றார் என்பது ஒரு நாடகம். 

நாம் எல்லோரும் உய்ய சிவபூஜையின் சிறப்பை உணர்த்த, முப்பதியிரண்டு அறங்களையும் உணர்த்த அம்மை பூவுலகிற்கு வந்து இந்த நாடகத்தை நடத்தினாள். அற வழியில் பொருள் ஈட்டி சுகமடைந்து மோட்சம் அடைவோமாக.

இரவு சிறப்பு பூஜை முடித்தபின் அம்மன் திருக்கோவிலை வலம் வந்து யதாஸ்தானம் திரும்புகின்றாள்.

*********************





கமலாலய குளம் 


திருவாரூர் அறநெறி சன்னதியில் நமிநந்தியடிகள் 
கமலாலய நீர் கொண்டு விளக்கி எரித்த வரலாறு 

ஒருநாள் இரண்டுநாள் அல்ல நான் உலகத்து
உதித்த இந்நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு
உள்ளம் தளர்ந்து மிகவும்
அருநாண் அற்றிட்ட வில்போல் இருக்கும் இவ்
அடிமை மீதிற் கருணை கூர்ந்து
அஞ்சேல்எனச்சொல்லி ஆதரிப்பவர்கள் உனை
அன்றி இலை உண்மை ஆக;
இரு நாழிகைப்போதும் வேண்டாது நிமிஷத்து
இலக்கம் இலி புவனத்தையும் இயற்றி
அருளும் திறம் கொண்ட நீ ஏழையேன் இன்னல்
தீர்த்து அருளல் அரிதோ?
வரும் நாவ்லூர்ர் முதலோர் பரவும் இனிய புகழ்
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமிசுபநேமிபுகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமிஅபிராமிஉமையே! (5)

பொருள்திருநாவலூரராகிய சுந்தரர் போன்ற அருளாளர்கள்  போற்றிப் பரவும்   புகழ்மிக்க திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியேநலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளேபல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையேசிவபெருமான் மகிழும் தேவியேஅபரிமிதமான அழகுடைய அபிராமியேமலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்லஅடியேன் பிறந்த நாள் முதல் இன்று வரை கவலையால்முடிவில்லாத துன்பம் கொண்டுமனம் சோர்ந்துநாண் அறுந்த வில்லைப் போல் இருக்கும் அடிமையின் பால் கருணை  கொண்டு, “அஞ்சாதே” என்று சொல்லி ஆதரிப்பவர்கள் உன்னையன்றி யாருமில்லைஇது சத்தியம்ஒரு நொடிப்பொழுதில்  எண்ணற்ற புவனங்களைப் படைத்துக் காத்தருளும் வல்லமை மிக்க உனக்குஇந்த ஏழையின் துன்பம் தீர்த்து அருள் புரிவது இயலாத காரியமாஎன்று ஒரு சேய்  தன் தாயிடம் உரிமையோடு    கேட்பது போல கேட்கின்றார் அபிராமி பட்டர்.





எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேலும்
ஏறிட்டு ஒறுக்க அந்தோ!
எவ்விதம் உளம் சகித்து உய்குவேன்? இப்பொழுது
எடுத்திட்ட சன்ம்ம் இதனில்
நண்ணி எள் அளவில் சுகம் ஆனது ஒர நாளினும்
நான் அனுபவித்த்து இல்லை
நாடு எலாம் அறியும் இது கேட்பது ஏன்? நின் உளமும்
நன்றாய் அறிந்து இருக்கும்
புண்ணியம் பூர்வ சனனத்தில் செய்யாத
 புலையன் ஆனாலும்  நினது
பூரண கடாக்ஷ வீட்சண்ணீயம்  செய்து எனது
புன்மையை அகற்றி அருள்வாய்!
மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் ப்ரவும் இசை
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (6)

பொருள்: மானிடர்களும், தேவர்களும் தினமும் போற்றித் துதிக்கும் புகழ்பெற்ற திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

கணக்கில்லாத துன்பங்கள் மேலும் மேலும் பெருகித் துன்புறுத்துகின்றன. இதை எவ்வாறு உள்ளத்தில் தாங்கி வாழ்வேன்? இப்ப்றவியில் துளியேனும் சுகத்தை  அடியேன் அனுபவித்த்தில்லைஇது உலகம் அறிந்த உண்மை. நின் உள்ளமும் இதை நன்றாய் அறியும். முற்பிறவியில் புண்ணியம் செய்யாத இழிவு பட்டவன் ஆனாலும்  உன்னுடைய பூர்ண அருட்பார்வையால் அடியேனை நோக்கி  அருள் புரிந்து அடியேனது சிறுமையை போக்கி அருள வேண்டும் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்
(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி பட்டரின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)

                                                                                                                                  அம்மன் அருள் தொடரும். . . . .. 

Tuesday, October 20, 2015

அன்னையின் நவராத்திரி - 8

                                                           எட்டாம்   நாள்  கொலு


முந்தைய பதிவுகள் :    முதல் நாள்,      இரண்டாம் நாள்,    மூன்றாம்நாள் ,   நான்காம்நாள்,      ஐந்தாம்நாள்,     ஆறாம் நாள்,  ஏழாம் நாள்


சிவதுர்க்கா


மஹா அஷ்டமி என்றும் துர்க்காஷ்டமி என்றும் அழைக்கப்படும் எட்டாவது நாளான இன்று அம்மையை நாம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றோம். இன்று வீட்டில் அன்னையை மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வழிபட காரிய வெற்றியும், சகல வியாபார அனுகூலங்களும் உண்டாகும். இன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமானது.






ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே!
பயேப்யஸ் -த்ராஹி-நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!

சமஸ்த சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும், எல்லாவற்றிக்கும் ஈஸ்வரியும், ஸமஸ்த சக்திகளும் கூடியவளுமான ஏ தேவி! துர்கே! எங்களை பலவித பயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ! துர்க்கா தேவி உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்

                                                                *****************





அன்னைக்கு மிகவும் உகந்த மஹா அஷ்டமிநாளான நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னையை ஒன்பது வயது குழந்தையாக பாவித்து துர்க்கா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பயம் நீங்கும் . இன்றைய ஸ்லோகம்

துர்க்காத்ராபதி பக்தம்யாஸ தா துர்க்கார்த்த நாயினீ துர்ஜுஷ்யாஸர்வதேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் || 
(துர்க்கதியைப் போக்குபவளாய்தேவர்களாலும் அறிய முடியாதவளாய் பக்தர்களைக் காப்பவளாய் எந்த சக்தி விளங்குகிறதோ அந்த துர்கா தேவியாகிய சக்தியை வணங்குகிறேன்.) 


**********************



மஹா கௌரி துர்க்கா

(எல்லோருக்கும் அருளும் வண்ணம் தலையை சாய்த்து அன்னை ஒயிலாக தரிசனம் தரும் அழகை என்னவென்று சொல்ல)
நவராத்திரியின் எட்டாம் நாள் நவதுர்கைகளில் அன்னையை வெள்ளை ரிஷபத்தில் மேலேறி பவனி வரும் மஹா கௌரியாக வழிபடுகின்றோம்.

தூய உள்ளம், பொன்னிற மேனி , வெண்பட்டு ஆடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளோடு காட்சி தருபவள் மகா கௌரி. காளையை வாகனமாகக் கொண்டு உடுக்கை சூலத்தோடு காட்சி கொடுக்கும் மகாகௌரியின் மேனி காட்டில் சிவபெருமானை மணக்க தவமிருந்த போது கருத்தது. சிவபெருமான் கௌரியின் மேனியை கங்கையால் சுத்தம் செய்ததாகவும், மீண்டும் மகாகௌரி பொன்னிற மேனியைப் பெற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன.

பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள். மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்தவளாக வணங்கப்படுகின்றாள் மஹா கௌரி. 16 வயது கன்னிகையாக சிவபெருமானை மணப்பதற்கு முன்பான பருவம் இது. மஹா கௌரியை தூயவளாக சிவந்த வர்ணத்தவளாக வழிபடுகின்றோம்.



ஸ்வேத வ்ரூக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுசி |
மஹாகௌரி சுபம் த்த்யாத் மஹாதேவ ப்ரமோத்தா ||

(வெள்ளை ரிஷபத்தில் ஏறி தூய வெள்ளை பட்டாடை உடுத்தி தூயவளாகவும், சிவபெருமானுக்கு எப்போதும் ஆனந்தம் அளிப்பவளுமான மஹா கௌரி துர்க்கா அடியேனுக்கு எல்லா மங்களங்களையும் அருளட்டும்.)

****************

முத்து மாரியம்மன் நாராயணி அலங்காரம்



ரோக நிவாரணி அஷ்டகம்
ஜெயஜெய சைலா புத்திரி பிரஹ்ம
சாரிணி சந்தர கண்டினியே
ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்ய யளே
ஜெயஜெய கால ராத்ரி கௌரி
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே || (8)


ரோக நிவாரணி அஷ்டகம் நிறைவுற்றது

*********************


துக்க நிவாரணி அஷ்டகம்

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெயஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (8)

துக்க  நிவாரணி அஷ்டகம் நிறைவுற்றது

************

முத்து மாரியம்மன் 
பிரத்யங்கிரா தேவி அலங்காரம் 

அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி|

மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தாச்சா ஸ்வதேசோ புவனத்ரயம்||


அன்னம் நிறைந்தவளே, முழுமையானவளே, சங்கரன் மங்கலமே, அன்னை பார்வதியே, ஞானம் வைராக்யம் உண்டாக பிக்ஷையைக் கொடு அம்மா.

என் தாய் பார்வதி தேவி, தந்தையோ மஹேஸ்வரன், உறவினர்களோ சிவ பக்தர்கள், எனது தேசம் மூவுலகம்.

விஷ்ணு யோக மாயா அலங்காரம் 
 *********************

ற்பகாம்பாள் ம்கிஷாசுரமர்த்தினி அலங்காரம் 


நவராத்திரியின் எட்டாம் இரவு  அன்னை கற்பகவல்லிி சிம்ம வாகனத்தில் மஹிஷாசுர மர்த்தினியாக கொலு தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றாள் ஐம்புலன்கள் ஆற்றும் பஞ்சமாபாதகங்கள் மனிதனுக்கு உடன்பிறப்புகள். அவற்றை வென்று மெய்ஞ்ஞானம் பெறும் திறனின்றி நிற்கும் மாந்தர்களுக்கு காவல் அன்னை மகிஷாசுரமர்த்தினி.. என்னைத்தொழுவாரை சூழும் துன்பங்களை எல்லாம் திரிசூலம் ஏந்தி அழிப்பேன் அவர்கள் உள்ளத்தில் தெய்வீக ஒளி வீசச்செய்வேன் என்று உறுதியளிப்பது போல அஷ்ட புஜங்களுடன் அருட்காட்சி அருள்கின்றாள் கற்பகவல்லி. 

*******************************




கற்பகவல்லி பாயும் வெள்ளைக்குதிரையில் 
மீனாக்ஷியாக கொலு தர்பார்



கற்பகவல்லி பாயும் வெள்ளைக்குதிரையில் 
மீனாக்ஷியாக கொலு தர்பார்

வாசமலர் மருவுஅளக பாரமும் தண்கிரண
மதிமுகமும் அயில் விழிகளும்
வள்ளம் நிகர் முலையும் அனநடையும் நகை மொழிகளும்
வளமுடன் கண்டு மின்னார்
பாசபந்த்த்திடை மனம் கலங்கித் தினம்
பல வழியும் எண்ணி எண்ணீப்
பழி பாவம் இன்னதென்று  அறியாமல் மாயப்ர
பஞ்ச வாழ்வு உண்மையென்றே
 ஆசை மேலிட்டு வீணாக நாய்போல் திரிந்து
அலைவது அல்லாமல் உன்றன்
அம்புயப்போதென்னும் செம்பதம் துதியாத
அசடன் மேல் கருணை வருமோ?
மாசிலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர்
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (3)

பொருள்: மணம் மிக்க மலர்கள் சூடிய கூந்தலும், குளிர்ந்த நிலவைப் போன்ற முகமும், கூர்மையான விழிகளும், கிண்ணத்திற்கு ஒப்பான மார்பகங்களும், அன்ன நடையும், சிரித்துப் பேசும் மொழிகளும், கண்டு மாதரின் மயக்கத்தில் மனம் கலங்கி நாள் தோறும் பழி பாவங்களை அறியாமல் பொய்யான இந்த உலக வாழவு உண்மை என்று ஆசை மிகுந்து நாய் போல் திரிந்து அலைந்து அலைவதல்லாமல், தாமரை போன்ற உனது  சிவந்த திருவடிகளை துதிக்காத இந்த அசடன் மேல் கருணை ஏற்படுமோ?\

குற்றமற்ற சிறந்த குணங்களின் இருப்பிடமாய் திகழும் தேவியே! பவனின் (சிவன்) பத்தினியான பவானியே! திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

இப்பாடலில் இந்த சம்சார சாகரத்தில் இருந்து தன்னை கரையேற்ற அன்னை கருணை காட்டவேண்டுமென்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.


நன்றென்று தீதென்று நவிலும் இவ்விரண்டினில் முன்
நவின்றதே உலகில் உள்ளோர்
நாடுவார் ஆதலால் அடியேனும் அவ்விதம்
நாடினேன் நாடினாலும்
இன்று என்று சொல்லாமல் நினது திருஉள்ளமது
இரங்கி அருள் செய்குவாயேல்
ஏழையேன் உய்குவேன்; மெய்யான மொழி இஃது உன்
இதயம் அறியாதது உண்டோ?
குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள்
குமார தேவனை அளித்த
குமரி! மரகத வருணி! விமலி! பைரவி! கருணை
குலவு கிரி ராஜ புத்ரீ!
மன்றல் மிகு நந்தவனங்கள் சிறை அளி முரல
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (4)

குன்றுகள் தோரும் எழுந்தருளி அடியார்க்கு அருள்புரியும் குமரக்கடவுளை அருளிய குமரியே! மரகத நிறத்தவளே! தூய்மையானவளே! பயிரவியே! கருணையுடன் விளங்கும் மலையரசன் மகளே!

மணம் கமழும் சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்யும் திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

நல்லது கெட்டது என்ற இரண்டில் அனைவரும் நாடுவது நல்லதையே! அது போலவே அடியேனும் நல்லதையே நாடினேன்,. அடியேன் அவ்வாறு செய்தது சரியா, தவறா என்று  யான் அறியேன். எனவே இல்லை என்று சொல்லாமல் உன் திருவுளம் இரங்கி அருள் செய்தால் அடியேன் பிழைப்பேன். அது சத்தியமான வார்த்தை, உன் உள்ளம் அறியாதது உண்டோ?

அனைத்தையும் அறிபவள் அன்னை அவளன்றி ஒரு அணுவும் அசையாது என்று இப்பாடலில் பாடுகின்றார் அபிராமி பட்டர்.

கற்பகவல்லி பின்னழகு 


                                                                                                                                                    அம்மன் அருள் தொடரும். . . . .. ...