Friday, October 23, 2009

கந்தன் கருணை

வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம்

தாரகாசுரன் மாயா மலம், சிங்கமுகா சூரன் கன்ம மலம், சூரபத்மன் ஆணவ மலம் இந்த மூன்று மலங்கள் என்னும் அஞ்ஞான இருளை தன் ஞான வேலாம் ( ஞான சக்தி) சக்தி வேலால் அழித்த வள்ளல் முருகன். முருகன் தன்னுடன் போர் புரிந்த சூரனையும் கொல்லவில்லை மயிலாகவும் , சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எந்த குற்றம் செய்தவார்களானாலும் மனமுருகி, முருகா என்று அவன் தாள் பற்றினால் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பரம கருணா மூர்த்தி முருகன்.

அந்த கருணை வள்ளல் இச்சா சக்தி வள்ளியையும் , கிரியா சக்தி தெய்வானையும் மணந்து கொள்ளும் நிகழ்ச்சி மஹா கந்த சஷ்டிப் பெருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக எல்லா ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றது. இப்பதிவில் பல் வேறு ஆலயங்களின் திருக்கலயாணக் கோலங்கள் .

சென்னை திருமயிலை சிங்கார வேலவர்


தெய்வாணை திருக்கல்யாணத்திற்கு பிறகு திருமயிலையில் முருகர் ஐராவதத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திருப்போரூரிலும் இவ்வாறே சூரசம்ஹாரம் முடிந்ததும் தங்க மயில் வாகனத்திலும், திருக்கல்யாணத்திற்க்கு பின் யாணை வாகனத்திலும் அருட்காட்சி தருகின்றார் முருகர்.

சென்னை சைதை செங்குந்தக்கோட்டம்
சிவசுப்பிரமணிய சுவாமி
பச்சை மயில் வாகனத்தில்



சென்னை புலியூர் கோட்டம்
பாரத்வாஜேஸ்வரம்

கல்யாண முருகன்






பச்சை மயில் வாகன சேவை



சென்னை சைதை காரணீஸ்வரம்
சிவசுப்பிரமணிய சுவாமி




வடபழனி ஆண்டவர் திருக்கல்யாணக் கோலம்




கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி
( மேல் உள்ள முத்துக்குமார சுவாமி படத்தின் மீது கிளிக்கி முழுப்படத்தையும் கண்டால் நிச்சயமாக அதை உங்கள் Desktopல் screensavsr ஆக வைத்துக்கொள்வீர்கள்)


சென்னை திருமயிலை
வெள்ளீ்ச்சுரம்



திருவான்மியூர் முருகர்


வடபழனி வேங்கீஸ்வரம் முருகர்

யாராவது சூலாயுதம் அல்லது சக்ராயுதம் என்று பெயர் வைத்துக் கொள்வார்களா? ஆனால் வேலாயுதம் என்று பெயர் வைத்துக் கொள்கிறார்களே. ஏனென்றால் ஆயுதங்களுக்கெல்லாம் தலைமையானது அன்னை சிவசக்தி அளித்த சக்தி ஞான வேல். இவ்வேல் யாரையும் அழிப்பதில்லை ஆனால் மாற்றத்தான் செய்கின்றது. ஆம் நம் மாசை அழித்து நம்மை தூயவர்களாக மாற்றும் ஆற்றல் கொண்டது ஞான வேல். ஆகவே தான்

வேலை வணங்குவதே வேலை தினமும்
காலை மாலை என்று எப்போதும்
வேலை வணங்குவதே வேலை

என்று பாடிப் பரவி அந்த வேலாயுதன் கந்தப்பெருமானை வணங்கி நன்மையடைவோமாக.

வேலும் மயிலும் துணை.

No comments: